என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "யானை கூட்டம்"
- விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
- யானைக் கூட்டத்தை அங்கிருந்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 10-க்கு மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கொத்தூர், நொகனூர், லக்க சந்திரம், மாரசந்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மரக்கட்டா கிராமத்தில் யானை தாக்கியதில் விவசாயி வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று கொத்தூர் கிராமத்துக்குள் 5 யானைகள் புகுந்தன. அதனைக் கண்டு காலைக்கடன் கழிப்பதற்காக வனப்பகுதி பக்கமாக சென்றவர்கள் யானை கூட்டத்தை பார்த்து ஓட்டம் பிடித்தனர்.
ஆனால் யானைகள் குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக நடந்து சென்றன . இதனால் கிராம மக்கள் அலறியடுத்து ஓட்டம் பிடித்து வீடுகளில் முடங்கினர். அப்போது சில இளைஞர்கள் ஒன்றிணைந்து யானைகளை சுற்றி வளைத்து அங்குள்ள தைல தோப்பில் சிறை பிடித்தனர்.
இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை வனசரகர் முருகேசன் மற்றும் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும் யானைக் கூட்டத்தை அங்கிருந்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
பகல் நேரத்தில் காட்டுயானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுள்ளது. இந்த யானைகளை ஜவளகிரி வன பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு அந்த யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்