என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விவேகானந்த ஆசிரம்"
- சுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் முப்பெரும் விழா செங்கோட்டையில் நடைபெற்றது.
- ஆதரவற்ற தாய்மார்கள் சுமார் 50பேருக்கு ஆடைகள் வழங்கப்பட்டது.
செங்கோட்டை:
செங்கோட்டை சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் திருக்குற்றாலம் சுவாமி விவேகானந்தா ஆசிரமம் சார்பில் சாரதா ஆசிரமத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழா, சுவாமி விவேகானந்த ஆசிரமத்தின் 35-வது ஆண்டு விழா, ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் 125-வது ஜெயந்திவிழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பெருங்குளம் செங்கோல் ஆதினம் 103-வது ஆதீன கர்த்தர் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை தாங்கினார். தொழிலதிபர்கள் பொறியாளா் லிங்கராஜ், சா மில் உரிமையாளா்கள் லால்ஜீ படேல், மோகன்படேல், சீவ்கன்படேல், காந்தி சேவா மைய நிர்வாகி ராம்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.
தென்காசி திருவள்ளுவா் கழக செயலா் சிவராம கிருஷ்ணன் வரவேற்றார். செங்கோட்டை காந்தி சேவா மைய நிறுவனா் விவேகானந்தன், திருக்குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லுாரி முதல்வா் ஜெயநிலாசுந்திரி, மணி மேகலை மன்றம் பொதுச்செயலாளா் கோதண்டம், செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகு லேஷன் பள்ளி தாளாளா் ராணி ராம்மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.
பள்ளிகளில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, பாட்டுப்போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ- மாணவியா்களுக்கு சமூக ஆர்வலா்கள் பிரபாமுரளி, ரமீலாமோகன்படேல், சந்திரிகாதிலீப்படேல், கான்கதாலலித்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினா். பின்னா் ஆதரவற்ற தாய்மார்கள் சுமார் 50பேருக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. 5பெண்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சுவாமி விவேகானந்தா ஆசிரம ஸ்ரீமத் சுவாமி அகிலானந்தஜீ, ஆத்மபிரியா மாதாஜீ ஆசியுரை வழங்கினா்.
நிகழ்ச்சியில் விவேகானந்தா கேந்திர மாவட்ட பொறுப்பாளா் கருப்பசாமி, கேந்திர தொண்டா்கள் கோமதி நாயகம், பாலகிருஷ்ணன், அய்யப்பன், நகர்மன்ற உறுப்பி னா்கள் பொன்னுலிங்கம் என்ற சுதன், செண்பகராஜன், பொதுமக்கள், சமூக ஆர்வலா்கள், உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் செங்கோட்டை சமூக ஆர்வலா் கல்யாண குமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்