search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராஷ்மிகா"

    • ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் சிக்கந்தர்.
    • நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா ‘ஓவர் டேக்' செய்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, திருமணத்துக்கு பிறகும் படங்களில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார். அஜித்தின் 'குட் பேட் அக்லி' உள்பட பல படங்களில் நடிக்கிறார். மலையாளத்திலும் படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

    அதேபோல சீனியர் நடிகையான திரிஷா கமல்ஹாசனின் 'தக்லைப்', அஜித்தின் 'விடாமுயற்சி' படங்களில் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கிலும் பிசியாக இருக்கிறார்.

    இளம் நடிகைகளே ஆச்சரியப்படும் அளவுக்கு நயன்தாராவும், திரிஷாவும் படங்களில் நடித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கி வரும் இருவருமே ஒரு படத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.12 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்களாம்.

    ஆனால் இவர்களையே கன்னடத்து பைங்கிளியான ராஷ்மிகா முந்திவிட்டது தான் தற்போது சினிமாவில் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்க ராஷ்மிகா ரூ.15 கோடி சம்பளமாக கேட்டு இருக்கிறாராம். பின்னர் பேச்சுவார்த்தையில் ரூ.13 கோடி வரை சம்பளம் வழங்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் மூலம் நயன்தாரா, திரிஷாவை சம்பள விஷயத்தில் ராஷ்மிகா 'ஓவர் டேக்' செய்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் என ரசிகர் பதிவிட்டிருந்தார்.
    • அனிமல் படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தது டிரெண்டாகி உள்ளது.

    கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனையடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.

    தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அதுவும் போதிய வரவேற்ப்பு இல்லை.


    தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார். படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.


    இந்நிலையில் அனிமல் படம் குறித்த ரசிகரின் கேள்விக்கு ராஷ்மிகா பதில் அளித்தது டிரெண்டாகி உள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியது இல்லை என்றே கூறலாம். அப்படி தான் இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்து இருக்கிறார்.

    ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அனிமல் படத்தில் இடம்பெற்ற ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா இருவரும் பேசும் வீடியோவையும், படத்தில் ராஷ்மிகாவுக்கு பிறகு ரன்பீர் கபூருக்கு ட்ரிப்டி டிம்ரி நடித்த ஜோயா கதாபாத்திரத்தின் மீது பழக்கம் ஏற்படும் வீடியோவையும் சேர்த்து எடிட் செய்து வெளியீட்டு 'ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது எதுவுமில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோவை பார்த்த நடிகை ராஷ்மிகா மந்தனா, திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது பயப்படுவதற்கு சமம். அங்கேயும் நிறைய நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல் என கூறி பதில் அளித்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும்,பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு
    • ஜப்பான் ரசிகர்களை பார்த்து கைகளை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

    தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்புக்கும்,நடனத்திற்கும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர்.

    தெலுங்கில்ஆரம்பித்து தமிழில் கலக்கி தற்போது ஹிந்தியிலும் வெற்றிநடை போட்டு வரும் நடிகை ராஷ்மிகா அதிகம் பயணம் மேற்கொள்ளக்கூடியவர் என கூறப்படுகிறது.இப்படி உலகம் சுற்றும் பறவையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா ஜப்பான் நாட்டிற்கு சென்று உள்ளார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்Crunchyroll Anime Awards-2024 விருது வழங்கும் விழா நாளை (2-ந்தேதி) நடைபெற உள்ளது.இந்தநிகழ்ச்சிக்காக ராஷ்மிகா ஜப்பான் சென்றார். டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவருக்கு பெரும்வரவேற்பு கிடைத்தது. 

    ஜப்பான் ரசிகர்கள் ராஷ்மிகா புகைப்படங்களுடன் வடிவமைக்கப்பட்ட வரவேற்பு அட்டைகளை கைகளில் ஏந்தியும்,பூங்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஜப்பான் ரசிகர்கள் தன் மீது காட்டும் அன்பால் திகைத்துப்போன ராஷ்மிகா கைகளை அசைத்து மகிழ்ச்சியைவெளிப்படுத்தினார்.ஜப்பான் ரசிகர்களுக்கு தனது கைப்பட 'ஆட்டோகிராப்' எழுதி வழங்கினார்.இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் படங்கள் இளம் ரசிகர்களை கவர்ந்தது.


    இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து, ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு பிப்ரவரி மாத துவக்கத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த தகவல் பொய்யானது என விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில் விஜய் தேவரகொண்டா குறித்து நடிகை ராஷ்மிகா மனம் திறந்து பேசியுள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா, 'நானும் விஜய்யும் ஒன்றாகதான் வளர்ந்தோம். என்னுடைய வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய்யிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வேன். நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆமாம் போடுபவர் கிடையாது விஜய். நல்லது, கெட்டதை அறிந்து சொல்லக்கூடியவர்.


    என் வாழ்வில் எல்லாரையும் விட எனக்கு ஆதரவாக அவர் இருக்கிறார். என் வாழ்க்கையில் அவர் ரொம்ப முக்கியம். உண்மையில் நான் மதிக்கும் ஒரு நபராக விஜய் தேவரகொண்டா உள்ளார்' என்று தெரிவித்து உள்ளார். இவரின் இந்த பேச்சு இவர்களின் காதல் கிசுகிசுக்களுக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

    • நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
    • அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.


    கடந்த நவம்பர் மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது அதன்பின்னர் தெரியவந்தது.



    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில், டெல்லியை சேர்ந்த முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் இன்று கைது செய்தனர். இவர் தான் ராஷ்மிகாவின் டீஃப் பேக் ( Deep Fake) வீடியோவை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
    • ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.

    கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையான இவர் தற்போது பல மொழிகளிலும் பெரிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.


    தெலுங்கில் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதனிடையே ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா டேட்டிங் செய்வதாக பலமுறை இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுகுறித்து இருவரும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் செய்து வைக்க இருவீட்டார் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும், பிப்ரவரி மாத துவக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன.


    இந்நிலையில், இந்த வதந்திக்கு நடிகர் விஜய் தேவர கொண்டா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா, "எனக்கு பிப்ரவரியில் நிச்சயதார்த்தமோ, திருமணமோ நடக்காது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பத்திரிகைகள் விரும்புகின்றன. ஒவ்வொரு வருடமும் இந்த வதந்தியைக் கேட்கிறேன். இது போன்ற வதந்திகள் மூலம் என்னை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர்" என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது.

    'கேப்டன் மில்லர்' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். தனுஷின் 51-வது படமான இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.


    தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சிறிய பூஜையுடன் நேற்று தொடங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.


    இந்நிலையில், தனுஷுடன் நடிப்பது குறித்து நடிகை ராஷ்மிகா கூறியுள்ளார். அவர் பேசியதாவது, இயக்குனர் சேகர் கம்முலா இப்படம் குறித்து கூறும்போதே இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்படவுள்ளது. தனுஷ் சார் மிகப்பெரிய நடிகர் அவருடன் நான் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் வசூலையும் குவித்து வருகிறது.


    இதைத்தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவரின் 51-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.


    இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு சிறிய பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.


    • டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
    • இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.

    டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.


    சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

    இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.



    இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகை ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
    • அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.


    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து deep fake மூலம் 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா.
    • இவர்கள் இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்கள்.

    தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் ரசிகர்களை கவர்ந்து. இப்படத்தில் ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.


    அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், இவர்கள் இருவரையும் இணைத்து பல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் உலா வந்தது. அண்மையில் நடிகர் விஜய் தேவரகொண்டா, ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு விரைவில் அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவை காதலிப்பதாக கமெண்ட் செய்து வந்தனர்.


    இந்நிலையில், தற்போது இவரும் சேர்ந்து தீபாவளி கொண்டாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஷ்மிகா வெளியிட்டுள்ள புகைப்படமும் நடிகர் விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள புகைப்படமும் ஒரே வீட்டில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இருவரும் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


    • சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.
    • அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

    முன்னணி நடிகையான நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.


    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


    ஒரிஜினல் புகைப்படம்

    இந்நிலையில், தற்போது கத்ரீனா கைப்பின் டீப் ஃபேக் (deep fake) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், கத்ரீனா கைப் 'டைகர் 3' படத்திற்காக ஒரு துண்டு அணிந்து ஒரு அதிரடி காட்சியை செய்கிறார். ஆனால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் நடிகை கத்ரீனா கைப் அதே போஸில் ஆனால் மாற்றப்பட்ட ஆடையுடன் காட்டப்படுகிறார். இந்த புகைப்படம் சில மணி நேரங்களில் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இந்த புகைப்படத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    ×