என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ருத்ராபிஷேகம்"
- மீனாட்சி அம்மன் கோவிலில் மகா ருத்ராபிஷேக உற்சவ நிகழ்ச்சி 12-ந் தேதி நடக்கிறது.
- வாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகாருத்ராபிஷேக உற்சவம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுக்ஞை, புண்யாஹவாசனம், விக்னேசுவரபூஜை, பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 108 கலச பூஜை, மஹன்யாசம், ருத்ரம், சமக பாராயணம், ருத்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி ஆகியவை நடத்தப்படுகிறது.
அதன் பிறகு சுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். மாலை 4 மணி முதல் 5:30 மணி வரை விக்னேசுவர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, 108 கலச பூஜை, அஸ்த்ர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு ஆகியவை நடத்தப்படும்.
மாலை 6 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு ருத்ராபிஷேகம், பஞ்சமுக அர்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறும். பக்தர்கள் ருத்ராபிஷேகத்துக்காக பால், தயிர் மற்றும் சர்க்கரை, பழவகைகள், சந்தனம், விபூதி, மஞ்சள் பொடி, எண்ணை ஆகியவற்றை கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்