என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மணக்குள விநாயகர்"
- ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
- வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடடும் ஈர மதிச்செஞ் சடக்களிநல் யானை இணைத்தான ஏத்துவாம்
அகரமென அறிவாகி உலக மெங்கும் அமர்ந்தகர உகரமக ரங்கள் தம்மால்
பகரு மொரு முதலாகி வேறு மாகிப் பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கினையும் இடர்தீர்ந் தெய்தப் போற்று நரக் கறக்கருணை புரிந்தல்லார்க்கு நிகரில் மறக் கருணை புரிந்து ஆண்டு கொள்ளும் நிருமலனைக் கணபதியை நினைத்து வாழ்வாம்.
வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தெண்டுள தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திருவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுதகற்றித்
தண்டமிழ்ப் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
மார னெடுத்து வளைக்கு மொரு கரும்கை யடித்து மலர்சிதறி
நாரி யடுத்த அளிமாலை குலையத் துரந்து நயந்தோடி
வீர மனத்து வினைப்பாகர் குறிப்பி னொழுகி விளையாடடும்
ஈர மதிச்செஞ் சடக்களிநல் யானை இணைத்தான ஏத்துவாம்.
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும் தறிநிறுவி உறுதி யாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை நினைத்துவரு வினைகள் தீர்ப்பாம்.
வஞ்சகக்தி லொன்றானைத் துதிக்கை மிகத் திரண்டானை வணங்கா உன்றே
அஞ்சரண மூன்றானை மறை சொலு நால் வாயானை அத்தனாகித்
துஞ்சவுணர்க் கஞ்சானைச் பென்னியணி ஆறானைத் துகளெ ழானைச்
செஞ்சொன்மறைக் கொட்டானைப் பரங்கிரிவாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வாம்.
வணக்குதலை மனத்தியற்றி வாழ்த்துமடி யவர்விரும்பும் வரங்கள் ஈத்து
பிணக்குடனே வேற்றுவர்கள் அகற்றிடவும் அகலாது பெட்பில் நின்று
நினைக்குமிடத் துன்புயிர் கட்(கு) ஒரித்தருளிப் புதுவையிடை நிலைபெற்றோங்கும்
மணக்குள நாயகன் மலரடியை எப்போதும் மனத்துள் வைப்பாம்.
மன்னியசீர்ப் புதுவை நகர் மணக்குள விநாயகன்றன் மாண்பு மேவும்
பொன்னடியை எந்நாளும் சிந்தித்து வணங்கிமிகப் புகழ்ந்து வாழ்வோர்
துன்னிரிய பெருஞ்செல்வம் இவ்வுலகில் எஞ்ஞான்றும் தோயப் பெற்றங்
குன்னிரிய பேரின்பம் ஒவாதே யெய்தியினி துவந்த வாழ்வார்.
- பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழ் புத்தாண்டான சோபகிருது ஆண்டு இன்று பிறந்தது.
புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து அமெரிக்க வைரம் பொருத்தப்பட்ட கிரீடம், தங்க கவசம் மணக்குள விநாயகருக்கு அணிவிக்கப்பட்டது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், ரெயில் நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்பிரமணியர், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள், முத்தியால்பேட்டை வன்னிய பெருமாள், வில்லியனூர் திருக்காமீஸ்வரர், திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
- இன்று இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது.
- 17-ந்தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
புதுச்சேரியில் பிரசித்திப்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் 62-ம் வருட பிரம்மோற்சவ விழா கடந்த 31-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் காலையில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் வெள்ளி யானை, இந்திர, குதிரை, முத்து பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் விநாயகர் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை புதுவை கடற்கரையில் கடல் தீர்த்தவாரி நடந்தது. அப்போது வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் வீதிஉலா கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அதனைதொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் இன்று தெப்ப உற்சவமும், 17-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும், 23-ந்தேதி 108 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்