search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக ஆர்வலர் கொலை"

    • பல்வேறு குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
    • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பரளச்சி-நல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (என்ற) கஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 35). கூலி வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி முத்துநாகு (23) என்ற மனைவி இருக்கிறார்.

    மேலும் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குழந்தை பிறந்து இறந்து போன நிலையில் பல்வேறு குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை மணிகண்டன் நல்லாங்குளம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளி அருகே வெட்டு காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் இவர் நல்லாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக அதிகமாக அரங்கேறி வரும் சட்ட விரோத செயல்களான மணல் கடத்தல், கள்ளத்தனமான மதுபான விற்பனை, கஞ்சா ஆகியவற்றிற்கு எதிராக சமூக ஆர்வலராக குரல் கொடுத்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்ததால் இந்த கொலை சம்பவம் நேற்று இரவு நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் சம்பவம் நடந்த இடமான அரசு தொடக்கப் பள்ளி அருகேயுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உடனிருந்தார்.இதனையடுத்து முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்ட பரளச்சி போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மணிகண்டன்-முத்துநாகு தம்பதியினருக்கு குழந்தை பிறந்து இறந்ததால் பல்வேறு குடும்ப பிரச்சினை காரணமாக அடிதடியாகி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்த நிலையில் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையேதான் மணிகண்டன் இன்று கொலை செய்யப்பட்டு இருப்பதால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக இறந்து போன மணிகண்டனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    முன் பகையால் நடந்த கொலையா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியே ஆள் வைத்து கணவரை கொலை செய்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த ருத்ரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சர்புதீன்.37 வயது வாலிபரான இவர் நேற்று மதியம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த மேட்டுமங்களம் பகுதியில் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தார்.

    சமூக ஆர்வலரான இவர் சென்னை செல்வதற்காக ஓட்டல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது காரை 10 பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்தது. அவர்கள் திடீரென கார் கண்ணாடியை உடைத்து நொறுக்கினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த சர்புதீன் காரில் இருந்து இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் மர்ம கும்பல் அவரை காருக்குள் வைத்தே சரமாரியாக வெட்டியது. இதில் சர்புதீனின் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் அவரால் தப்பமுடியவில்லை. சம்பவ இடத்திலேயே சர்புதீன் துடிதுடித்து பலியானார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு திருக்கழுக்குன்றம் போலீசார் விரைந்து சென்றனர்.மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் தலைமையில் திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் கொலையாளிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். சமூக ஆர்வலர் சர்புதீன் கொலை செய்யப்பட்டது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சர்புதீன் வழக்கு போட்டதும் அதன் காரணமாக திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் மற்றும் மோதல் இருந்து வந்தது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் ஆக்கிரமிப்புகள் விவகாரம் தொடர்பாக இருந்து வந்த மோதல் காரணமாகவே சர்புதீன் திட்டம் போட்டு தீர்த்துக்கட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சர்புதீனை வெட்டிக்கொன்றதாக 9 பேரை அதிரடியாக கைது செய்தனர். கொலை நடந்த 6 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    ரகுமான், மன்சூர், இப்ராகிம், அஜிஸ், நஸிம், ரகுமான், வெள்ளை,சலீம், பரூக். இவர்கள் அனைவரும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 9 பேரில் சலீம் வக்கீல் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    கொலையாளிகள் வேறு எங்கும் தப்பி சென்றுவிடாத வகையில் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    கொலை செய்யப்பட்ட சர்புதீனுக்கு திருமணமாகி மனைவியும் 3 மகள்களும் உள்ளனர்.அவர்கள் சர்புதீன் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பரிதாபத்தை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டப்பட்ட சம்பவம் திருக்கழுக்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் கேமரா காட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • திருவண்ணாமலை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
    • சமூக ஆர்வலர் கொலை வழக்கில் நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் கடந்த 2012-ம் ஆண்டு சமூக ஆர்வலர் திருவண்ணாமலையில் மனித உரிமை மீறல் மற்றும் நில அபகரிப்பு வழக்குகளில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மற்றும் நில மாபியாக்களுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் ராஜ்மோகன்சந்திரா இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 2-ந் தேதி செங்கம் சாலையில் அமைந்துள்ள சிங்கமுக தீர்த்தம் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முன்விரோதம் காரணமாக திருவண்ணாமலை பெரும்பாக்கம் சாலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன் (வயது 45) தரப்பினர் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பதி பாலாஜி, அவரது தந்தை காசி என்ற வீராசாமி, அண்ணன் செல்வம், செல்வத்தின் மனைவி மீனாட்சி (41), திருவண்ணாமலை வடஆண்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் (32), தென்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (39), ஆணாய்பிறந்தான் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (42), விஜயராஜ் (41), வடஆண்டாப்பட்டு பகுதியை சேர்ந்த சடையன் (40), போளூர் தாலுகா செங்குணம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (50) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு மீதான விசாரணை திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கு நடைபெற்று வந்த சமயத்தில் திருப்பதி பாலாஜியின் அண்ணன் செல்வமும், தந்தை காசி என்ற வீராசாமியும் உயிரிழந்தனர்.

    இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டு நீதிபதி (பொறுப்பு) இருசன்பூங்குழலி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட திருப்பதி பாலாஜி என்ற வெங்கடேசன், மீனாட்சி, முருகன், சந்திரசேகர், அய்யப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். சமூக ஆர்வலர்கள் கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • க.பரமத்தி குப்பம் பகுதியில் செல்வக்குமார் என்பவர் தனது மனைவி கார்த்திகா பெயரில் ஒரு குவாரியை நடத்தி வந்தார்.
    • குப்பத்திலிருந்து காருடையான் பாளையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் ஆயத்த ஆடை தயாரிப்பு, கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அதற்கு இணையாக புறநகர் பகுதிகளில் ஏராளமான கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில குவாரிகள் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாகவும், இயங்கி வருவதாக புகார்கள் உள்ளன.

    அந்த வகையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவை உள்ளூர் தேவைகளுக்கு மட்டுமில்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு க.பரமத்தி குப்பம் பகுதியில் செல்வக்குமார் என்பவர் தனது மனைவி கார்த்திகா பெயரில் ஒரு குவாரியை நடத்தி வந்தார். இந்த கல்குவாரிக்கு அருகாமையில் விவசாயியும், சமூக ஆர்வலருமான ஜெகநாதன் (வயது 52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் தொடர்பாக ஜெகநாதனுக்கும், செல்வகுமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இதற்கிடையே கடந்த 2019-ல் ஜெகநாதனை, செல்வகுமார் கொல்ல முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் செல்வகுமாரின் குவாரிக்கான உரிம காலக்கடு சமீபத்தில் முடிந்ததாக தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து செல்வகுமார் அந்த குவாரியை இயக்கி வந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஜெகநாதன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சட்ட விரோத குவாரி எதிர்ப்பாளர்களுடன் இணைந்து மாவட்ட கலெக்டர் மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்தார்.

    அதைத்தொடர்ந்து கடந்த 9-ந்தேதி கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வக்குமாருக்கு சொந்தமான குவாரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அனுமதியின்றி சட்ட விரோதமாக இயங்கிய அந்த குவாரியை மூடி சீல் வைத்து விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்றைய தினம் குப்பத்திலிருந்து காருடையான் பாளையத்துக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற ஜெகநாதன் லாரி மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் க.பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ஜெகநாதன் மீது மோதிய லாரி குவாரி அதிபர் செல்வகுமாருக்கு சொந்தமானது என தெரியவந்தது. பின்னர் நடத்தப்பட்ட புலன் விசாரணையில் குவாரியை மூட காரணமாக இருந்த ஜெகநாதனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். பின்னர் அவர் தனது லாரி டிரைவரை ஏவி, ஜெகநாதனை லாரியை ஏற்றி கொலை செய்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து செல்வகுமார் மற்றும் லாரி டிரைவர் சக்திவேல் ஆகிய இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் போலீசார் செல்வக்குமார், சக்திவேல் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அனுமதி இன்றி இயங்கிய குவாரியை மூட புகார் அளித்த சமூக ஆர்வலர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமர் (60) மற்றும் அவரது மகன் நல்லதம்பி (40) ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். அந்த கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.

    இந்த குளத்தை மீட்க போராட்டம் நடத்தியதோடு, கோர்ட்டு மூலம் தந்தை, மகன் இருவரும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டனர். அப்போது எதிராளிகள் கடந்த 2019 ஜூலை மாதம் 29-ந்தேதி தந்தை, மகனை கூலிப்படை ஏவி படுகொலை செய்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது சட்டவிரோதமாக இயங்கி குவாரியை மூட போராடிய ஜெகநாதன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    ×