என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வளைகாப்பு"
- பிளஸ்-2 முடித்துவிட்டு, ஊரில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி வந்தார்.
- இளநிலை பட்ட படிப்பிற்கு தொலைதூர கல்வி திட்டத்தில் விண்ணப்பித்த சங்கீதா அதனை படித்து வருகிறார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் காட்டுக்கூடலூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரும் இவரது மனைவியும் கொரோனாவில் இறந்து போயினர். இதனை தொடர்ந்து இவர்களது ஒரே மகள் சங்கீதா பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தார். இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு, ஊரில் உள்ள மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் நடத்தி வந்தார்.
பெற்றோரை இழந்த சங்கீதாவிற்கு திருமண வயது வந்தது. பெற்றோர் இல்லாத சங்கீதாவிற்கு திருமணம் செய்து வைக்க ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவு செய்தனர். தொடர்ந்து கோட்டேரியை சேர்ந்த சங்கர் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர்.
தொடர்ந்து இளநிலை பட்ட படிப்பிற்கு தொலைதூர கல்வி திட்டத்தில் விண்ணப்பித்த சங்கீதா அதனை படித்து வருகிறார். இந்த நிலையில் சங்கீதா கருவுற்றார். இத்தகவல் காட்டுக்கூடலூர் கிராம மக்களுக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாய் வீட்டின் சார்பில் வளைகாப்பு நடத்த முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி, 5 விதமான சாத வகைகள், பலகாரம், பால், பழங்கள் போன்ற சீர் வரிசை பொருட்களுடன் சென்றனர். அங்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவிற்கு தாய் வீட்டின் சார்பில் ஊர்மக்கள் வளைகாப்பு நடத்தினர். பெற்றோர் இல்லாத இளம்பெண்ணுக்கு ஊர்மக்கள் கூடி வளைகாப்பு நடத்திய சம்பவம் பண்ருட்டி பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
- அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் திரைக்கு வந்து கோடி கணக்கில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
படத்தில் அவர் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது அவர் நிஜத்தில் கர்ப்பிணியாக கலந்து கொண்டார்.
அமலாபால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்தில் கர்ப்பம் அடைந்து உள்ளதாக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
கர்ப்பிணியாக கணவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் கர்ப்பகால உடற்பயிற்சிகள் செய்வது போலவும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார்.
கர்ப்பமடைந்து எட்டாவது மாதம் தொடங்க உள்ள நிலையில் அமலா பாலுக்கு தற்போது வளைகாப்பு நடந்துள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடமாநில பாரம்பரிய முறையில் உடை அணிந்து இருக்கும் அமலா பாலுக்கு அவரது குடும்பத்தினர் வளைகாப்பு சடங்குகளை சம்பிரதாய முறைப்படி நடத்தினர்.
இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தாய்மை பூரிப்பில் கணவரோடு மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சாதாரணமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செல்லப்பிராணி லூசிக்கு பழனிவேல் குடும்பத்தார் செய்தனர்.
- விழாவிற்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா காவாலக்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் அம்புஜவல்லி தம்பதியினரின் மகள் பவித்ரா ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வருகின்றார். இதற்கு லூசி என்று பெயரிட்டு தங்களின் குடும்பத்தில் ஒருவர் போல கவனித்து வருகின்றனர்.
தற்போது லூசி கருவுற்ற நிலையில் அதற்கு வளைகாப்பு செய்ய பழனிவேல் குடும்பத்தார் முடிவு செய்தனர். லூசியை அலங்கரித்து பூ அணிவித்து, சேரில் அமரவைத்தனர். அதற்கு தங்க நெக்லசினை அணிவித்து மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்தனர்.
மேலும், லூசிக்கு பிடித்த உணவுகளை அதற்கு முன்பாக வைத்து, கருவுற்ற லூசி நல்ல முறையில் குட்டிகளை ஈன்ற வேண்டுமென கடவுளிடம் பிரார்த்தனை செய்தனர். சாதாரணமாக கருவுற்ற தாய்மார்களுக்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செல்லப்பிராணி லூசிக்கு பழனிவேல் குடும்பத்தார் செய்தனர். இவ்விழாவிற்கு அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்களையும் இதில் பங்கேற்க வைத்தனர்.
வளர்ப்பு பிராணிகளுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் உள்ள நெருக்கத்தை விளக்கும் மற்றொரு சம்பவமாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. எத்தனை அறிவியல் நம்மை ஆளச் செய்தாலும் இது போன்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.
லூசியின் வளைகாப்பு நிகழ்ச்சியும் அதுபோல அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது அப்பகுதியில் பேசும் பொருளாக மாறியதுடன், செல்லப்பிராணி வளர்ப்பவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்
- குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்மலையனூர் வட்டா ரத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வளத்தி யில் உள்ள தனியார் திரு மண மண்டபத்தில் நடை பெற்றது. இந்நிழ்ச்சிக்கு மேல்மலை யனூர் ஒன்றிய குழு தலை வர் கண்மணி நெடுஞ்செழி யன் தலைமை தாங்கினார்.வட்டார கல்வி குழு தலைவர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டயனா வரவேற்றார்.
இவ்விழாவில் சிறு பான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு வளை காப்பு விழாவை தொடங்கி வைத்து கர்ப்பிணி பெண்க ளுக்கு சீர்வரிசை பொருட்க ளை வழங்கி சிறப்புரையாற்றி னார்.தொடர்ந்து வளத்தி ஆரம்ப சுகாதார நிலை யத்தின் சார்பில் ஊட்டச் சத்துடன் கூடிய தொகுப்பி னை கர்ப்பிணிகளுக்கு வழங்கினார். முன்னதாக ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து பொருட்கான கண்காட்சியினைஅமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் விஜய லட்சுமி முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி சுப்ரமணியன், செல்வி ராம சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கள், சரவண குமார், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.
- பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
- 5 வகையான உணவுகள் வாழை இலை போட்டு பறிமாறப்பட்டது.
நாகப்பட்டினம்:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.
இதில் வேளாங்கண்ணி திருப்பூண்டி பூவைத்தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.
சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவி டயானா சர்மிளா , கீழையூர் வட்டார திட்ட அலுவலர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.
மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.
கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.
- மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
- தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அருவங்காடு,
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் குன்னூரில் 61 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
இதில் அவர்களுக்கு மாலை அணிவித்து சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மகப்பேறு உதவி திட்டங்கள், கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குன்னூரை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் மூலம் ரூ.18 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ரூபாய மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகம் ஆகியவையும் வழங்கப்பட உள்ளது.
குன்னூர் லயன்ஸ் கிளப் தலைவர் அஸ்வினி தன்வானி, பொருளாளர் நளினி லட்சுமணன், செயலாளர் ஸ்ரதா, உறுப்பினர்கள கோபால், முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொருளுதவி செய்த தி.மு.க நகரமன்ற துணை தலைவர் வாஸிம் ராஜாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர பூங்கொடி, மேற்பார்வையாளர் கண்ணம்மா, கணகாணிப்பாளர் தேவரம்மா, வட்டார ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
- 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
- கர்ப்பிணிகளுக்கு புடவை, தட்டு, வளையல்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.
கும்பகோணம்:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ராமலிங்கம் எம்.பி, சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு புடவை, தட்டு, வளையல்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
இதில் கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர தி.மு.க. செயலா ளருமான சு.ப.தமிழழகன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவரும், மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ரேவதி, புனிதவள்ளி, கவுன்சிலர் அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
- உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் திருச்சுழி யில் சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந் தது. கலெக்டர் ஜெயசீ லன் தலைமை தாங்கினார். விழா வில், 200 கர்ப்பிணி தாய் மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத் தப்படுகிறது. நம்முடைய பாரம்பரியத்தின்படி, கர்ப் பிணி பெண்கள், கர்ப்பகா லத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந் தால் தான், அவர்களுக்கு பிறக்கும் நாளைய சமுதாய குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தை யாக இருக்கும் என்பதற்காக ஏற் படுத்தப்பட்ட அறிவியல் பூர் வமான நிகழ்ச்சியாகும்.
ஒரு அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை வடிவமைத்து தருகிறது. பல்வேறு கட்டமைப்புகள் தேவையாக இருந்தாலும் அடிப்படையில் ஒரு நாட்டி னுடைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாக இருப்பது, அந்த நாட்டிலே இருக்கக்கூடிய சமுதாயம் எப்படி வாழ்கிறது என்பது தான்.
அந்த சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கு கல்வி, சுகா தாரம் ஆகிய இரண்டும் முக் கியமான காரணிகளாக இருக்கிறது. அந்த அடிப்ப டையில் தான் மாண்புமிகு முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு இரண்டு ஆண்டு காலத்திலே நாட்டினுடைய வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூ டிய இந்த இரண்டு பெரும் காரணிகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை தந்திருக்கி றார்கள்.
திருச்சுழி தொகுதி மக்க ளின் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப் பதற்கான பல ஆண்டு கோரிக்கையினை நிறை வேற்றி தந்துள்ளது தமிழக அரசு.
இவ்வாறு அவர் பேசி னார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் (பொ) ஹேமலதா, அருப்புக்கோட்டை கோட் டாட்சியர் (பொ) வித்யா, நரிக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் காளீஸ்வரி சமயவேலு, திருச்சுழி ஊராட்சி ஒன்றிக்குழுத்த லைவர் பொன்னுதம்பி, மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் போஸ், கமலிபாரதி, நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், கண்டுகொண்டான் மாணிக் கம் ஊராட்சி மன்ற தலைவர் வேலம்மாள் ராஜேந்திரன், திருச்சுழி தி.மு.க. செயலாளர் சந்தன பாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டாட்சியர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
பூதப்பாண்டி:
தோவாளை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் திட்டுவிளையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா தலைமை தாங்கினார். தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், ஒன்றிய கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை செயலாளர் பார்வதி, பேரூர் செயலாளார் ஜான்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- ஜெபாவிற்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து 5 வகையான உணவு விருந்து வழங்கப்பட்டது.
- போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
போரூர்:
கோயம்பேடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருபவர் ஜெபா. இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் தனது கணவர் பரிசுத்த இமானுவேல் என்பவருடன் செங்குன்றத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை போலீஸ் நிலையத்தில் வைத்து நடத்த உடன் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று மாலை போலீஸ் நிலையத்தில் விமரிசையாக நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது ஜெபாவிற்கு வளையல்கள் அணிவித்து, சந்தனம், குங்குமம் வைத்து 5 வகையான உணவு விருந்து வழங்கப்பட்டது.
இதில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள், ஜெபாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஜெபாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கண்டு உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
- மேக்ஸ்வெல், வினி ராமன் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
- இருவரது திருமணம் தமிழ் முறைப்படி நடைபெற்றது.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். மேக்ஸ்வெல் தமிழ்ப் பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் வினி ராமன் கர்ப்பமாகியுள்ளார். அதனால் அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேக்ஸ்வெல் 2015 உலகக் கோப்பை மற்றும் 2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 339 ரன்களையும், 128 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,490 ரன்களை குவித்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடி 2159 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும், டி20-ல் 39 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.
- ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
- 21-ந் தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.
மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மன் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகிற வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பெண்கள் ஆர்வமுடன் வளையல்களை வாங்கினர். வளைகாப்பு வைபவத்துக்காக சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.
மதியம் 12.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.
பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
விழாவில் வருகிற 21-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயறை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.
இதைத்தொடர்ந்து சிறுபயறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணிமற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்