search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருங்கை விலை உயர்வு"

    • வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 1 கிலோ ரூ.75 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம், வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்த முருங்கை காய்கள் இப்பகுதி மார்க்கெட்டிற்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கடந்த மாதம் வரத்து அதிகரித்ததால் முருங்கை விலை குறைந்தது.

    தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் ஆர்வமுடன் முருங்கை காய் சாகுபடி செய்தனர். தற்போது இவை செழித்து வளர்ந்து காணப்படுகிறது. வெளியூர்களிலிருந்து வரத்து குறைந்ததால் மார்க்கெட்டில் முருங்கை காய் விலை உயர்ந்தது.

    1 கிலோ ரூ.75 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிராம பகுதிகளிலிருந்து விவசாயிகள் ஆர்வமுடன் முருங்கைகாய்களை மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    ×