என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்வதேச கடலோர தூய்மை பணி"
- பள்ளி மாணவர்கள் கடற்கரை கழிவுகளை சேகரித்து பேரூராட்சி ஊழியர்களிடம் வழங்கினர்.
- சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி:
சர்வதேச கடலோர தூய்மை நாளை முன்னிட்டு மணவாளக்குறிச்சி சின்ன விளை கடற்கரை பகுதிகள் தூய்மை படுத்தப்பட்டது.
சின்னவிளை பங்கு த்தந்தை சகாய ஜெரோம், பாபுஜி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தர் ராஜ், செயல் அலுவலர் யேசுபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளீன் சீ பவுண்டேசன் (இந்திய) கவரவ தலைவர் இஸ்ரோ விஞ்ஞானி பென்சிகர் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
இதில் இந்திய அரிய மணல் ஆலை தலைவர் செல்வராஜன், தமிழ்நாடு அறிவியல் இயக்க குமரி மாவட்ட செயலாளர் சிவ ஸ்ரீ ரமேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கி ணைப்பாளர் மலர்விழி, கிளீன் சீ பவுண்டேசன் பொது மேலாளர் திருமாறன், மணல் ஆலை உதவி பொது மேலாளர் பிரசாத், நெய்தல் நில எழுத்தாளர் குறும்பனை பெர்லின், சமூக விழிப்புணர்வு சேவகர் கலைவாணன், செயலாக்க நிர்வாகி ரெஜின்மேரி, சமூக சேவகி பெரியவிளை உஷா உள்பட சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாபுஜி மேல்நிலைப்ப ள்ளி மாணவர்கள் கடற்கரையில் தேங்கி கிடந்த குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து பேரூராட்சி ஊழியர்களிடம் வழங்கினர்.
நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் கூட்டமைப்பு தலைவர் தங்கமணி ஒருங்கிணைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்