search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எப்படி?"

    • பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்
    • பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழைக்காலங்களில் விபத்தை தவிர்க்கும் பொருட்டு வீடுகளில் இன்வெர்ட்டர் பயன் படுத்தும்போது நுகர்வோர் கள் அதற்கென நியூட்ரல் வயரினை தனியாக பயன்படுத்த வேண்டும். நில இணைப்புக்கானது குறைந்தபட்சம் 3 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத் தப்படும் கிரைண்டர், குளிர் சாதனப்பெட்டி, அயர்ன் பாக்ஸ், துணி துவைக்கும் எந்திரம் போன்ற சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவற்றை பயன்படுத்தும்போது காலணிகள் அணிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு, வீடுகள் மற்றும் ஓ.எச்.டி. மின் இணைப்புகளில் உள்ள மின் மோட்டர்களில் பணிபுரியும் போது கவனமுடன் பாதுகாப்பாக பணி புரியுமாறும், அருகில் உள்ள வயரிங் மற்றும் சர்வீஸ் வயர்கள் நல்ல நிலையில் உள்ளதையும் சர்வீஸ் பைப்பில் பி.வி.சி. குழாய் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டிட வேலை செய்யும்போது அருகில் போதிய இடைவெளி இன்றி செல்லும் மின்கம்பிகளை மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மாற்றி அமைத்த பின் பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். குளிர் சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற சாதனங்களை சுத்தம் செய்யும்போது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் மின் சாதனங்களில் கவனமுட னும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி யும் மின் விபத்துகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மின்வாரிய அதிகாரி தகவல்
    • மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரியில் பருவமழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் அவ்வபோது பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துகளை தடுக்க பொது மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    காற்று மற்றும் மழைக் காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பி கள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் இழுவை கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ, அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அதுகுறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. வீடுகள், மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயற்சிக்கக் கூடாது.

    இடி, மின்னலின்போது, டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, கைபேசி மற்றும் தொலைபேசியை பயன் படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. மின்மாற்றிகள், மின்ப கிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக் கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    வீடுகளில் பழுதடைந்த நிலையில் உள்ள சுவிட்ச் மற்றும் பல்புகளை உடனடி யாக மாற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே உள்ள மின் இணைப்புகளில் இ.எல்.சி.பி./ஆர்.சி.டி. பொருத்தி மின்விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்ப டுகிறது. மின் நுகர்வோர்கள் பழுதடைந்த நிலையில் காணப்படும் சர்வீஸ் வயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

    உயர் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் பொழுது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ, மின் கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்களில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

    வீடுகள், மின் கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரி செய்ய முயற்சிக்கக்கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து மின்சாரம் மிகவும் தேவையானது. அதனை மிகவும் பாதுகாப்பான முறையில் உப யோகித்து மின் விபத்துகளை தவிர்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • பொதுவாக நூற்புழு தாக்கப்பட்ட பயிர்கள் சத்துப் பற்றாக்குறையால் தாக்கப்பட்ட போல் தோன்றும்.
    • செடிகளில் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி வெளியிட்டுள்ளசெய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    நூற்புழுக்களின் தாக்குதலினால் பயிர்களின் விளைச்சல் குறைந்து விளை பொருள் தரமும் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டமேற்படுகிறது. பொதுவாக நூற்புழு தாக்கப்பட்ட பயிர்கள் சத்துப் பற்றாக்குறையால் தாக்கப்பட்ட போல் தோன்றும், செடிகளில் காணப்படும் அறிகுறிகளுக்கு ஏற்ப மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

    பயிர்கள் குறைந்த வளர்ச்சி, குறைந்த எண்ணிக்கையிலான தூர்கள், பக்க கிளைகள், இடைகணுவின் நீளம் குறைதல், இலைகள் பச்சையம் இழந்து பழுப்பு நிறமாக மாறுதல், இலை ஓரங்கள் சிவப்பாகி மேற்புறமாக மடிதல், கிளைகள் ஒன்றுகூடி காலிபிளவர் போன்ற அமைப்பு உருவாகுதல், இலை நுனி வெண்மையாகி கீழ் நோக்கித் தொங்குதல், உருசிதைந்த மொக்குகள் அல்லது பூக்கள், ஆங்காங்கே திட்டுத் திட்டாக பயிர் வளர்ச்சி இன்றி காணப்படும், மண்ணில் ஈரமிருக்கும் போதும் வாடியது போல் காணப்படும், பயிர் உரிய காலத்திற்கு முன்பே முதிர்வு நிலையை அடைந்து விடும்.

    விதை நேர்த்தி: 1 கிலோ விதைக்கு வேப்ப எண்ணெய் 60இசி திரவ திரட்டு (சிட்ரிக் அமிலம் மூலம்) 2மிலி அல்லது சூடோமோனஸ் புளுரசன்ஸ் 10கிராம் , பேசிலோமைசிஸ் லிலாசினாஸ் 1 சதவீதம் நீரில் கரையும் தூள் 10 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்தல்.

    மண்ணில் இடுதல்: சூடோமோனாஸ் புளுர சன்ஸ், பேசிலோமைசிஸ் லிலாசினாஸ் ஏதாவது ஒரு பூஞ்சான கொல்லி 2.5 கிலோ ,எக்டர் 50 கிலோ தொழு உரம், மரமொன்றுக்கு 20கிராம் ஏதாவது ஒரு பூஞ்சான கொல்லி பயன்படுத்தி பயன் பெறுதல்.

    மேலும் வேப்ப புண்ணாக்கு அல்லது ஆமணக்கு புண்ணாக்கு 2டன், எக்டர், கரும்பாலைக் கழிவு 15 டன் , எக்டருக்கு பசுந்தாள் உரங்களான சணப்பை, கொளஞ்சி பயிரிட்டு மடக்கி உழுதல். மேற்காணும் மேலாண்மை உத்திகளை கடைபிடித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×