search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவமழை"

    • நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    • பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.

    அம்பத்தூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 7- க்குட்பட்ட 15 வார்டுகளில், வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தலைமையில் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. மண்டல குழு தலைவர் பி.கே. மூர்த்தி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் விஜிலா மற்றும் மின்சாரத்துறை, வருவாய்த்துறை, நீர்வள ஆதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மண்டலத்துக்குட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலந்துரையாடினர். மேலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு தேங்கும் பட்சத்தில் அதனை உடனடியாக அப்புறப்படுத்த அதிக திறன் கொண்ட மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    அதேபோல் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் தங்குவதற்கான திருமண மண்டபங்கள், பள்ளி வகுப்பறைகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளும் செய்து தரவேண்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மண்டல குழு தலைவர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். இதில் கவுன்சிலர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், உஷா நாகராஜ், சாந்தகுமாரி, செயற்பொறியாளர்கள் சதீஷ்குமார்,குமாரசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிதாக பஸ் நிலையம் அமைப்பதற்கு விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க கமிட்டி அமைக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு, துணை தலைவர் ஜெயபிரகாஷ், நகராட்சி நியமன குழு உறுப்பினர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உறுதிமொழி தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் மேலாளர் சீதாலட்சுமி, சுகாதாரத்துறை ஆய்வாளர் கருப்புசாமி, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுகளில் செயல்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பேசினர்.

    அதனைத் தொடர்ந்து, நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பேசுகையில்:-

    திருத்துறைப்பூண்டி நகரில் நடைபெற்று வரும் 128 சாலைகள் பணிகள், 110 சாலை சேவை பணிகள் முடிந்துள்ளது. மேலும், ரூ.7 கோடியில் பஸ் நிலையம் புதிதாக அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    வடகிழக்கு பருவமழை முன்னெச்ச ரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க விரைவில் கமிட்டி அமைக்கப்படும் என்றார்.

    • கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
    • இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது.

    மடத்துக்குளம்:

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் இருந்தது. தீவன உற்பத்திக்கு மக்காச்சோளம் தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலையும் கிடைத்து வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    அதையொட்டி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயிரின் வளர்ச்சி தருணத்தில் பருவ மழை பெய்யும். எனவே அந்த சீசனில் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது. மழையும் பெய்யவில்லை. இதனால் நான்காம் மண்டல ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் நடவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. சிலர் மட்டும் உலர் தீவன தேவைக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.

    இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரியாக மக்காச்சோளம் நடவு செய்ய துவங்கியுள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மக்காச்சோளம் 90 - 110 நாட்கள் வயதுடையது. பயிரின் வளர்ச்சித்தருணம் மற்றும் கதிர் பிடிக்கும் போது மழை பெய்தால் இறவை பாசனம் போல மானாவாரியிலும், விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் மழை பெய்யாவிட்டால் பயிரின் வளர்ச்சி பாதித்து கதிர்கள் சரியாக பிடிக்காது. விளைச்சலும் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 10 மூட்டையாக குறைந்து விடும்.இருப்பினும் மக்காச்சோள பயிர்களை கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்தலாம். வறட்சியால் தீவனத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகிறோம் என்றனர்.  

    • அதிகாரி விளக்கம்
    • வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதா வது:- குமரி மாவட்டமானது தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டையும் ஒருங்கே கிடைக்கப்பெறும் மாவட்டமாகும். தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் விவசாயிகளால் மேற்கொள்ளப்பட வேண்டும். தோட்டக்கலை பயிர்களில் பொதுவாக அறுவடைக்கு தயாராக இருக்கும் தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு மரத்தின் சுமையை குறைத்தல், மரங்களை கவாத்து செய்து மரத்தின் சுமையை குறைத்து காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்த்தல், கனமழை காரணமாக ஏற்படும் மழைநீர் தேக்கத்தை குறைக்க உபரிநீர் வடிந்த பின் நடவு, விதைப்பணிகளை மேற்கொள்ளல், வடிகால் வசதி அற்ற நிலங்களில் ஆங்காங்கே வடிகால் அமைத்து மழைநீர் தேக்கத்தை தவிர்த்தல், காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்தல், மழைநீர் வடிந்தபின் பயிர்களுக்கு ஏற்றவாறு மேல் உரம் இட்டு மண் அணைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே குமரி மாவட்ட வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகளை மேற்கொண்டு வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ளுமாறும், மேலும் பாதிப்பு ஏற்பட்டால் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்பருவமழை காலங்களில் மின்விபத்துகளை தவிர்ப்பது எப்படி? மின்வாரிய அதிகாரி விளக்கம்
    • பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பத்மகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மழைக்காலங்களில் விபத்தை தவிர்க்கும் பொருட்டு வீடுகளில் இன்வெர்ட்டர் பயன் படுத்தும்போது நுகர்வோர் கள் அதற்கென நியூட்ரல் வயரினை தனியாக பயன்படுத்த வேண்டும். நில இணைப்புக்கானது குறைந்தபட்சம் 3 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத் தப்படும் கிரைண்டர், குளிர் சாதனப்பெட்டி, அயர்ன் பாக்ஸ், துணி துவைக்கும் எந்திரம் போன்ற சாதனங்களுக்கு நில இணைப்புடன் கூடிய 3 பின் பிளக்குகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். அவற்றை பயன்படுத்தும்போது காலணிகள் அணிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு, வீடுகள் மற்றும் ஓ.எச்.டி. மின் இணைப்புகளில் உள்ள மின் மோட்டர்களில் பணிபுரியும் போது கவனமுடன் பாதுகாப்பாக பணி புரியுமாறும், அருகில் உள்ள வயரிங் மற்றும் சர்வீஸ் வயர்கள் நல்ல நிலையில் உள்ளதையும் சர்வீஸ் பைப்பில் பி.வி.சி. குழாய் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். கட்டிட வேலை செய்யும்போது அருகில் போதிய இடைவெளி இன்றி செல்லும் மின்கம்பிகளை மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்து மாற்றி அமைத்த பின் பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். குளிர் சாதன பெட்டி, கிரைண்டர் போன்ற சாதனங்களை சுத்தம் செய்யும்போது சுவிட்ச் ஆப் செய்யப் பட்டுள்ளதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் மின் சாதனங்களில் கவனமுட னும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி யும் மின் விபத்துகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு விரைந்து எடுக்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்தார்.

    மதுரை

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் 14,314 கண்மாய்கள் உள்ள நிலையில், 469 கண்மாய்களில் மட்டுமே முழுமையாக நீர் நிரம்பிஉள்ளது. குறிப்பாக 3,422 கண்மாய்களில் அதாவது 24 சதவீதம் கண்மாய்கள் முற்றிலுமாக வறண்டு உள்ளது.

    தென்மேற்கு பருவமழை குறைவு என்று காரணம் சொல்லப்பட்டாலும் கண்மாய்களில் தூர்வராதே பிரதான காரணம் என்றும், இந்த வடகிழக்கு பருவ மழையில் காலத்தில் காண்மாய் நிரம்புவதற்கு குடிமராமத்து திட்டம் செய்தால் கண்மாய்கள் நிரம்ப வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

    வடகிழக்கு பருவ மழையில் சென்னை மிகவும் அதிகமாக பாதிக்கப்படும். ஏனென்றால் 2 மீட்டர் உயரம் தான் புவியியல் அடிப்படையில் கடல் மட்டத்திலிருந்து இருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரு லட்சம் தெருக்கள்உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசு நிதியுடன் ரூ. 2,850 கோடி மதிப்பில் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் செயல்படுத்தப்பட்டன.ஏறத்தாழ 3,600 மழைநீர் தேங்கும் இடங்கள் சென்னையில் இருந்தது எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையால் 40 இடங்களாக குறைக்கப் பட்டது.

    தற்போது முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த நட வடிக்கை எதுவும் முழுமை பெறவில்லை மழை நீர் வடிகால் பணிகள் 50 சதவீதம் தான் முடிந்து இருக்கிறது 100 சதவீதம் முடியவில்லை.

    இன்னும் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் கூடிய சூழ்நிலை இன்னும் சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் முடிய வில்லை. தூர்வா ரப்பணிகள் மேற்கொள் ளப்படவில்லை. தமிழகம் முழுவதும் தாழ்வான பகுதி களை எத்தனை என்ப தையும், அதேபோல கண்கா ணிப்பு அலுவலர்கள் பட்டியலை முதலமைச்சர் முழுமையாக அறிவிக்க வில்லை. கடந்த தென்மேற்கு பருவமழையில் கண்மாய்கள் வறண்டு போனது அதேபோல் இந்த வடகிழக்கு பருவமழையில் குடி மராமத்து செய்யாததால் பருவமழையில் நீரை தேக்கமுடியாத நிலையில் உள்ளது.

    ஆகவே முதல்-அமைச்சர் எதிர்க்கட்சி குரலாக நினைக்காமல் மக்களின் குரலாக நினைத்து இந்த வடகிழக்கு பருவ மழையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதனை தொடர்ந்து, ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவ மழையின் போது பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகை யில் மேற்கொள்ள வேண் டிய பணிகள் குறித்த ஆய் வுக்கூட்டம் நகர்மன்ற கூட்டரங்கில் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், ஆணையாளர் அஜிதா பர்வீன், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் பொறியாளர், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இதில், கனமழை பெய்த வுடன் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதியில் மழைநீர் தேங்காதவாறு கால்வாய் தூர்வார வேண்டும். நக ராட்சி பகுதியில் உள்ள 15 குளங்கள் மழை நீர் தேக்கி வைத்திடும் வகையில் கால் வாயை சீரமைக்க வேண்டும். தொற்று நோய் பரவாத வகையில் சுகாதார பணி களை மேற்கொள்ள வேண் டும் என ஆலோசனை வழங்கப்பட்டு பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது.
    • கூட்டத்தில் பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் ஒன்றியத்திற்கு ட்பட்ட விக்ரம் என்ற பகுதியில் வருவாய் ஆய்வாளர் மாதவி தலைமையில் வடகிழக்கு பருவம ழையை மேற்கொ ள்வது பற்றிய கலந்தாய் கூட்டம் நடைபெற்றது.

    இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் வேளாண் அலுவலர் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்காடி பணியாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறைகள் மற்றும் நிறைகளை பற்றி தங்களது கருத்துக்களை கருத்துக்களை எடுத்து கூறினர்.

    இதை அடுத்து அதற்குரிய அதிகாரிகளிடம் முறையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • கடந்த செப்டம்பர் மாதத்திலும் ஆனைமலை, காரமடை ஒன்றியங்களில் தலா 18.5 மி.மீ. பதிவானது.
    • கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை,

    தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை.

    கோவை மாவட்டத்தில் வழக்கமாக ஓராண்டில் 600 மில்லி மீட்டர் மழை பொழியும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாதங்களில் 180 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகி உள்ளது.

    இந்தநிலையில் கோவை மாவட்ட வேளாண் துறையினர், ஒன்றியம் வாரியாக மழை அளவை கணக்கிடுகின்றனர்.

    கடந்த ஜூன் மாதம் மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 26 மி.மீ. பதிவாகி இருக்கிறது. மற்ற ஒன்றியங்களில், ஒரு மி.மீ., கூட பதிவாகவில்லை.

    ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக ஆனைமலை-146.7, கிணத்துக்கடவு-139, தொண்டாமுத்தூர்-108 மி.மீ., பதிவானது. ஆகஸ்டு மாதத்தில் அன்னூர் ஒன்றியத்தில்- 26.4 மி.மீ., காரமடையில்-13.5 மி.மீ., பதிவாகியது. மற்ற ஒன்றியங்களில் மழை பொழிவு இல்லை.

    கடந்த செப்டம்பர் மாதத்திலும் ஆனைமலை, காரமடை ஒன்றியங்களில் தலா 18.5 மி.மீ. பதிவானது. மற்ற ஒன்றியங்களில் சொல்லும் படியாக பெரிய அளவில் மழை இல்லை.

    தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால், கோைவ மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    எனவே மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வேளாண் துறையினர் கூறுகையில் கோவை மாவட்டத்தில் சராசரியாக ஓராண்டுக்கு 600 மி.மீ., மழை காணப்படும். இந்த ஆண்டு இதுவரை மூன்றில் ஒரு பங்காக 180 மி.மீ., பதிவாகியிருக்கிறது. வடகிழக்கு பருவ மழை இன்னும் பெய்ய தொடங்கவில்லை என்றனர்.

    வேளாண் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் அக்டோபர் 10-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பில்ைல. வெப்பம் அதிகரித்து வறட்சி அதிகரிக்கும். 11-ந் தேதிக்கு பின் இடியுடன் கூடிய பருவ மழை காணப்படும் என்றனர்.

    • அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
    • மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், தலைமை தாங்கினார்.

    கடந்த ஆண்டுகளில் பெய்த பெருமழையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளில், 3 மிக அதிக பாதிக்கப்படும் பகுதிகளி்ல், 21 அதிக பாதிக்கப்படும் பகுதிகள், 26 நடுத்தர மற்றும் 22 குறைவாக பாதிக்கப்படும் பகுதிகள் என கண்டறியப்பட்டு மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 பாதிக்கப்படும் பகுதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு 11 துறையைச் சார்ந்த அலுவலர்களை கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த குழுக்களின் பணிகளை கண்காணிக்க 21 துணை ஆட்சியர் நிலையிலான குழுத்தலைவர்கள் மற்றும் துணை குழுத்தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் துறைவாரியாக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் இடர்கள் ஏற்படின் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மிக அதிகமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் விவரங்களை முன்கூட்டியே பட்டியலிட்டு. மழை பொழிவின் போது அவர்களை முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பாதுகாப்பு வசதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அவசரத் தேவைக்கான மருந்துகள், உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்டவைகளும், கால்நடைகளுக்குத் தேவையான மருந்துகள் உள்ளிட்ட பொருட்களையும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களையும் முன்கூட்டியே கொள்முதல் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மொபைல் நிறுவனங்களில் உயர்கோபுரங்கள், தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவை செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் துறை மற்றும் பல்வேறு துறைகளின் மூலமாக மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க போதிய உபகரணங்கள் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை இருப்பு வைக்க அறிவுரை வழங்கப்பட்டது.

    இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்(பொ) கணேஷ் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது.
    • இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு கழிவுநீர் செல்வதற்கு வாய்க்கால்கள் இருக்கிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய வடிகால் வாய்க்கால் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்து பெருமளவில் சேதம் ஏற்பட்டது. இதனால் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடலூர் வில்வ நகர் பகவதி அம்மன் கோவில் தெருவில் வடிகால் வாய்க்கால் கட்டப்பட்டு வந்த நிலையில், இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலியாக உள்ள இடங்களில் கழிவுநீர் குட்டை போல் தேங்கி கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    மேலும், மழைநீர் வடிகால் வாய்க்கால் வழியாக செல்ல முடியாமல் அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல கடலூர் மாநகராட்சி பகுதியில் புதிதாக வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் முன்பை விட தற்போது அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள வடிகால் வாய்க்காலை முழுமையாக கட்டி முடிக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுகா சாலியமங்களத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பொதுமக்கள் கடைபி டிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விவேகானந்தா சமூக கல்வி மையப் பொறுப்பாளர் சுசீலா தலைமை வகித்தார். சுய உதவி குழு பொறுப்பா ளர்கள் அனிதா, சண்முக ப்பிரியா ஆகியோர் முன்னிலை வைத்தனர்

    இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைகாலங்களில் பொதும க்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்வது குறித்தும் மழைநீர் தேங்கி நிற்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவக்கூடும் என்பதால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் மழைகாலங்களில் கால்நடைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்து கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் மேரி நன்றி கூறினார். ஏற்பாடுகளை களப்பணியாளர்கள் கவுரி, ராமலெட்சுமி, பரமேஸ்வரி, சண்முகப்பி ரியா ஆகியோர் செய்து இருந்தனர்.

    ×