என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆவணங்கள் மீட்பு"
- ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்களை திருடிச்சென்று விட்டதாக புகார் கூறப்பட்டது.
- எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பொதுக்குழு கூட்டத்துக்கு செல்லாமல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றார். பூட்டிக்கிடந்த அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டது.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார். அப்போது அங்கு கூடியிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுடன் பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இருதரப்பிலும் 47 பேர் காயம் அடைந்தனர்.
இந்த மோதலின்போது ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்களை திருடிச்சென்று விட்டதாக புகார் கூறப்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும், ராயப்பேட்டை போலீசாரால் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையில் உள்ளது.
வழக்கில் கைதாகாமல் இருக்க இருதரப்பைச் சேர்ந்த 67 பேர் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். இந்தநிலையில் மோதலின்போது கட்சி அலுவலகத்தில் திருட்டுபோனதாக புகார் கூறப்பட்ட 113 முக்கிய ஆவணங்களை மீட்டுவிட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்