என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடியரசு தின விழா"
- கரூர் டி.என்.பி.எல். ஆலையில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது
- அனை–வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
கரூர்:
கரூர் மாவட்டம் புகழூ–ரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை–யில் நடந்த நாட்டின் 74-வது குடியரசு தின விழா–வில் சிறப்பு விருந்தினராக உற்பத்தி மற்றும் திட்டம் ஒருங்கி–ணைப்பு முதன்மை பொது மேலாளர் வரதராஜன் கலந்து–கொண்டு தேசிய கொடி–யேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாதுகாவலர்களின் அணிவகுப்பை உதவி மேலாளர் பாதுகாவஸ்) சங்கிலிராஜன் மற்றும் உதவி அதிகாரி (பாதுகாவஸ்) செந்தில்குமார் ஆகியோர் சிறப்பாக நடத்தினார்கள்.
அவர்களின் அணிவகுப்பு மரியாதையை வரதராஜன் ஏற்றுக்கொண்டு சிறப்புரை–யாற்றினார். நிகழ்ச்சி முடிவில் துணை பொது மேலாளர் (பாதுகாப்பு மற்றும் பாது–காவல்) ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் ஆலையின் உயர் அதிகாரிகள், தொழி–லாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர். அனை–வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
- நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கி தேசியக் கொடி ஏற்றினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு நகராட்சியில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு நகர மன்ற தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
நகர மன்ற துணைத் தலைவர் ஆழியார் ஜூபேர் அஹமத், நகராட்சி ஆணையாளர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நகர மன்ற உறுப்பினர்கள் அதிகுர் ரஹ்மான், ஜானகி, நாகஜோதி, பாரதி, சின்னா, வழக்கறிஞர் அப்துல் ஹமீத், நஹிஹா ஜுபேர் அஹமத், தேன்மொழி, சுல்தானா, இந்திரா காந்தி, அப்துல் ஜமீல், நகராட்சி அதிகாரிகளான ராஜ் குமார், அஜய் குமார், சுரேஷ்குமார், ராஜேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம், கீழக்கரையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தில் குடியரசு தினவிழா ஆணையாளர் சுரேந்திரன் தலைமையில் நடந்தது. நகரசபை தலைவர் கார்மேகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து நகர சபை அலுவலக வளாகத்தில் உள்ள காத்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணை தலைவர் பிரவின் தங்கம், கணக்காளர் பத்மநாபன், மேலாளர் நாகநாதன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா நடந்தது. யூனியன் தலைவர் பிரபாகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் துணை தலைவர் ராஜவேணி, ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது கொடியேற்றினார். நேர்முக உதவியாளர் பாலமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவில் கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முதல்வர் பெரியசாமி வரவேற்றார். மாணவ- மாணவிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் சத்தியேந்திரன் செய்தார்.
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த 74-வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு முதல்வர் சதக்கத்துல்லா தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். குடியரசு தின விழா உறுதிமொழியை நுண்ணு யிரியல் துறை பேராசிரியை ஷோபனா முன்மொழிய, அனைவரும் திரும்பக்கூறி எடுத்துக் கொண்டனர்.
பெரியப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா தலைமையாசிரியர் தபசுமுத்து தலைமையில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது. இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அசன் அலி, முகமது களஞ்சியம் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். நல்லாசிரியர் முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.
- மானாமதுரை, திருப்புவனம் இளையான்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடிபகுதிகளில் 74-வது குடியரசு தின விழா நடந்தது.
மானாமதுரையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. தேசியக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன், எம்.எல்.ஏ.வின் உதவியாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சக்திவேல் தேசியக்கொடி ஏற்றினார். நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
மானாமதுரை யூனியன் அலுவலகத்தில் தலைவர் லதா அண்ணாதுரை தேசியக்கொடி ஏற்றினார்.துணைத்தலைவர் முத்துசாமி, கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அண்ணா துரை, மலைச்சாமி மற்றும் ஆணையாளர், அலுவலர்கள் கொடி வணக்கம் செலுத்தினர்.
திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் சேங்கைமாறன் தேசியக் கொடி ஏற்றினார். இதில் செயல் அலுவலர் ஜெயராஜ், துணைத் தலைவர் ரகமத்துல்லாகான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இங்குள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் அதன் தலைவர் சேங்கைமாறன் தேசியக்கொடி ஏற்றினார். செயலாளர் கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரியில் நடந்த குடியரசு தின விழாவுக்கு ஆட்சி குழுத் தலைவர் அகமது ஜலாலுதீன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜபருல்லாகான் முன்னிலை வகித்தார். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் ஆரிப் ரகுமான் தேசிய கொடி ஏற்றி பேசினார்.
விழாவில் மாணவ, மாணவிகள், ஆட்சிக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் ஜஹாங்கீர் நன்றி கூறினார்.
இளையான்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தலைவர் நஜூமுதீன் தேசிய கொடி ஏற்றினார். செயல் அலுவலர் கோபிநாத், துணைத் தலைவர் இப்ராஹிம் மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் பங்கேற்றனர்.
- மாணவர்களுக்கு தேசிய உணர்வை தூண்டும் விதமாக சிறப்புரையாற்றினார்.
- விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பூண்டி பள்ளியில் 74வது குடியரசு தினம் மற்றும் 33வது ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
விழாவின் தொடக்கமாகபள்ளியின் முதல்வர் பிரியாராஜா வரவேற்று பேசினார். பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தேசிய கொடியை ஏற்றி, மாணவர்களுக்கு தேசிய உணர்வை தூண்டும் விதமாக சிறப்புரையாற்றினார். மாணவர்களின் வண்ணமிகு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளாக குடியரசு தினவிழா பற்றிய இந்தி மற்றும் ஆங்கில உரை, நடனம், கராத்தே, ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பம் போன்றவை காண்போர் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து பள்ளியின் 33வது ஆண்டு விளையாட்டு விழா ஆரம்பமானது.
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு ஒலிம்பிக்மரியாதையை ஏ.வி.பி., டிரஸ்டி பிரதாப் உறுதிமொழியுடன்மாணவர்களுக்கு பல விளையாட்டுப்போட்டிகள்நடைபெற்றது.
பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பாபின் டி சௌசா 2022-23-ம்கல்வி ஆண்டிற்கான விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார். விழாவின் நிறைவாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு நன்றி கூறினார். விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர்.
- குடியரசு பற்றியும் நாட்டு பற்று பற்றியும் உரையாற்றப்பட்டது.
- பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் டாக்டர்.எஸ்.பி தனபால் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, குடியரசு பற்றியும் நாட்டு பற்று பற்றியும் சிறப்புரையாற்றினார்.இதில் கல்லூரி முதன்மை அலுவலர் பசவண்ணா, பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.விழாவில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்சிகள் அனைவரையும் கவர்ந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும் பேராசிரியருமான பாபு மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்
- கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
- 11-வது வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார்.
கீழக்கரை
கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் தலைமை வகித்தார். கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து நடைபெற்ற குடியரசு தின விழா தொடக்க நிகழ்ச்சியில் 7-வது வகுப்பு மாணவி முஷ்ரிபா, 6-வது வகுப்பு மாணவிகள் அகமது அலினா, ஷானா ஹயா ஆகியோர் கிராஅத் ஒதினர். 5-வது வகுப்பு மாணவர் முகம்மது பைஜான் வரவேற்றார். பிளஸ்-2 (மெட்ரிக்) மாணவி சித்தி ஹனூனா, 7-வது வகுப்பு (உயர்நிலைப்பள்ளி) மாணவி எகிதா, 5-வது வகுப்பு (தொடக்கப்பள்ளி) மாணவி அல்சனா ஆகியோர் குடியரசு தின உரையாற்றினர். மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மாணவர்களின் உடல் வலிமை, மன உறுதியை ஏற்படுத்தும் வகையில் பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் விழாவில் 5 ஓடுகளை அடுக்கி வைத்து அதன் மீது தீப்பற்ற வைத்து ஒரே தடவையில் அடித்து சிதறடித்து் பார்வை யாளர் களது பாராட்டை பெற்றார்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூத்த மனநல மருத்துவர் பெரியார் லெனின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி குடியரசு தின சிறப்புரையாற்றினார்.சர்வதேச அளவிலான சிறந்த கல்வியாளர் விருது பெற்ற இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தலைவர் வழக்கறிஞர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிமிற்கு பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ- மாணவிகள் சார்பில் நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். 11-வது வகுப்பு மாணவி சம்சூன் பசிகா நன்றி கூறினார்.
பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் படி இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முஸ்தபா, இஸ்லாமியா துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி மற்றும் நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.
- கே. எஸ். என் .வேணுகோபாலு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
- விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள்- பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தாராபுரம் :
தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கல்லூரி தாளாளருமான கே. எஸ். என் .வேணுகோபாலு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் சௌந்தரராஜன், முத்துக்குமார் ,செயலாளர் விஷ்ணு செந்தூரன், கல்லூரி முதல்வர் முரளி கலந்து கொண்டனர். தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின்னர் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள்- பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
- கறம்பக்குடி ஒன்றியத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டபட்டது
- விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்படி கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முருகேசன், துணைத்தலைவர் நைனா, முகமது வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசும் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
- வருவாய் துறை, உள்ளிட்ட அலுவலகங்கள்,மற்றும் தனியார் நிறுவனங்கள்,ஆகியவற்றில் தேசியக்கொடியேற்றி வைத்து குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பல்லடம் :
பல்லடத்தில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், தேசியகொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி தேசிய கொடியேற்றினார்.
விழாவில் ஆணையாளர் ரமேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அலுவலர்கள்,பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர், பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில், துணை சூப்பிரண்டு சவுமியா தேசிய கொடியேற்றினார்.
பல்லடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்மணிகண்டனும், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசும் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி தலைவர் கவிதாமணி தேசிய கொடியேற்றினார். விழாவில் ஆணையாளர் விநாயகம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல பல்லடம் அரசு கல்லூரி, பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி,அரசு பெண்கள்பள்ளி,மற்றும் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகள்,தனியார் பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரி, நெடுஞ்சாலைதுறை,வருவாய் துறை, உள்ளிட்ட அலுவலகங்கள்,மற்றும் தனியார் நிறுவனங்கள்,ஆகியவற்றில் தேசியக்கொடியேற்றி வைத்து குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- லிட்டில் கிங்டம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனரும் முதன்மை முதல்வருமான ேஹமா கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
திருப்பூர் :
திருப்பூர் சோளிப்பாளையத்தில் உள்ள லிட்டில் கிங்டம் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவனரும் முதன்மை முதல்வருமான ேஹமா கலந்து கொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். 11ம் வகுப்பு மாணவர்கள் கருத்தரங்கு நடத்தினர். குடியரசு தினம் பற்றி பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இதனையடுத்து மாணவர்களின் கொடி அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில்பள்ளி நிறுவனர், தாளாளர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜோலார்பேட்டையில் உள்ள மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது.இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் 129 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி 44 லட்சத்து,31,418 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் போலீஸ் பிரிண்டர் பாலகிருஷ்ணன் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்