என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராமேஸ்வர் தெலி"
- பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.413.90 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
- இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் 2016 ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது.
இந்திய எண்ணெய் கழகத்தின் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக, சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில், ரூ.900 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் துணை துறைமுகப் பணிகளை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி நேற்று பார்வையிட்டார். பின்னர் நெசப்பாக்கத்தில் இயற்கை எரிவாயு (சி.என்.ஜி.) நிரப்பும் நிலையத்தை தொடங்கி வைத்தார். மேலும் 20 பெண் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய மந்திரி ராமேஸ்வர் தெலி, பெண்களின் சுகாதார பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் வகையில் பிரதமரின் உஜ்வாலா திட்டம் கடந்த 2016 ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 31ந் தேதிவரை தமிழ்நாட்டில் சுமார் 37 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகள் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன என்றார். மேலும் நடப்பு நிதியாண்டில் 62,06,748 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வாங்க தமிழக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.413.90 கோடி மத்திய அரசால் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்