search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • இறைவனை சிவசிவ என அழைத்து அனைத்து ஜீவன்களும் சிவனருள் பெற வேண்டுகிறேன்.
    • இறைவன் சூரியனாகவும், சந்திரனாகவும், விளங்கி உலகுக்கு ஒளியைக் கொடுப்பவர்.

    இறைவன் சூரியனாகவும், சந்திரனாகவும், நட்சத்திரங்களாகவும் விளங்கி உலகுக்கு ஒளியைக் கொடுப்பவர்.

    அவர் பேரொளி மயமானவர்.

    "அருள்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி" என்கிறார் வள்ளலார் பெருமான்.

    கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீப விழாவும், 'சொக்கப்பனை' ஏற்றி வழிபடுவதும் இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்த்துகிறது.

    "இல்லக விளக்கது இருள் கெடுப்பது

    சொல்லக விளக்கது சோதி உள்ளது

    பல்லக விளக்கது பலரும் காண்பது

    நல்லக விளக்கது நமச்சி வாயவே!"

    என்று திருநாவுக்கரசர் இறைவனைப் போற்றுகிறார்.

    ஒரு தீபத்திலிருந்து பல தீபங்கள் ஏற்றி ரத தீபம், நட்சத்திர தீபம் என்று ஏற்றி, இறைவனுக்கு தீப ஆராதனை செய்வதும்,

    சபரிமலையில் மகரஜோதி வழிபாடு செய்வதும் இறைவனின் ஒளிவடிவை நமக்கு உணர்த்துகின்றன.

    தீபஒளி திருநாள் என்றால், தீபங்களின் வரிசை என்று பொருளாகும்.

    லட்சதீப விழாவின் மாலைப்பொழுதில் திருக்கழுக்குன்றத்து கோவில், குளம் மற்றும் மாடவீதிகள் மட்டுமின்றி ஊர் முழுவதும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால்,

    புற இருளும் நீங்கும், அக இருளும் நீங்கும், ஞானம் உண்டாகும் என்பது மக்களிடையே நிலவி வருகின்ற அசையா நம்பிக்கை ஆகும்.

    எல்லோரும் எல்லாமும் பெற்று வாழவும், ஒற்றுமை உணர்வுடன் வாழவும் உலகமே நலம் பெற வேண்டும், வளம்பெற வேண்டும் என வேண்டி,

    இறைவனை சிவசிவ என அழைத்து அனைத்து ஜீவன்களும் சிவனருள் பெற வேண்டுகிறேன்.

    கழுக்குன்றத்துக் கடவுளை வணங்கினால் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்வதற்கு வேண்டிய பொருள் செல்வங்கள் கிடைக்கும்.

    வாழ்ந்து முடித்த பின் மறுமைக்கு வேண்டிய அருள் செல்வமும் கிடைக்கும்.

    எனவே, சொர்க்கப்பதி என்னும் வீடுபேற்றை அடைந்து உய்யலாம்.

    எனவே, இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்த பின் இறுதியிலே பரம்பொருளாம் இறைவனைப் பற்றிப் பிடிப்போம்.

    இறையருள் பெறுவோம். வீடுபேறு அடைவோம்.

    அந்த பலனை பெற அனைவரும் நாளை திருக்கழுக்குன்றம் வாருங்கள்.

    • சங்கு தீர்த்த புஷ்கரம் என்பது தீர்த்தங்களுக்கு உரிய ஒரு புண்ணிய காலமாகும்.
    • இந்தத் திருத்தலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் முக்கியமானவை.

    திருக்கழுக்குன்றம் தலத்துக்குரிய நதி பாலாறு. இதனை குகநதி, ஷீரநதி என்றும் அழைப்பர்.

    நம் பாரத பூமியின் புண்ணிய நதிகளான கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவேரி ஆகிய ஏழு நதிகளும்

    சங்கு தீர்த்தம் என்னும் புனிதக் குளத்திலே சங்கமித்து உள்ளன.

    இந்தத் திருத்தலத்தில் பன்னிரண்டு தீர்த்தங்கள் முக்கியமானவை.

    அவை, இந்திர தீர்த்தம், சம்புதீர்த்தம், ருத்ரகோடி தீர்த்தம், வசிட்ட தீர்த்தம், மெய்ஞ்ஞான தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மார்க்கண்ட தீர்த்தம், அகலிகை தீர்த்தம், சம்பாதி தீர்த்தம் என்பனவாகும்.

    இந்தப் பன்னிரண்டு தீத்தங்களின் தலையாயதாய் சிறப்பின் மணிமகுடமாய் உலக மக்களால் போற்றப்படுவதுமான

    நன்னீரை உடைய சங்கு தீர்த்தம் என்னும் பெரிய தடாகம் அமைந்துள்ளது.

    இதன் நடுவில் நீராழி மண்டபம் அமைந்துள்ளது.

    இதில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறப்பதால் இது சங்கு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

    மார்க்கண்டேய முனிவர் இங்கு இறைவனை வேண்டி சங்கு பெற்றார்.

    அது முதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கிறது.

    சங்கு தீர்த்த புஷ்கரமேளா என்பது குருபகவான் கன்னி ராசியில் வரும்நாளே இத்திருநாளாகும்.

    இவ்வேளையில் மூன்றரைக்கோடி தீர்த்தங்கள் சங்கு தீர்த்த குளத்துக்குள் வந்து சங்கமிக்கின்றன என்பது ஐதீகம்.

    அப்போது இறைவனுக்கு தீர்த்தவாரித் திருவிழா நடைபெறும்.

    பக்தர்களும் நீராடி இறையருள் பெறுவர்.

    சங்கு தீர்த்த புஷ்கரம் என்பது தீர்த்தங்களுக்கு உரிய ஒரு புண்ணிய காலமாகும்.

    அக்காலத்தில் நீராடுதல் சிறப்பாகும்.

    • திருக்குடமுழுக்கு விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்வதாகும்.
    • சங்குதீர்த்த புஷ்கரமேளா நிகழ்வும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படுகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தின் இதயமாய் விளங்கும் திருக்கழுக்குன்றத்தில் மிகவும் அரியதான விழா

    எல்லோரும் அறிந்த விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் லட்சதீபப் பெருவிழா.

    திருக்குடமுழுக்கு விழா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்வதாகும்.

    குறிஞ்சி மலர் மலர்வதும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஆகும்.

    வட இந்தியாவில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவும் தென்னிந்தியாவில் நிகழும் கும்பகோணம் மகாமகம் திருவிழாவும்

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே ஆகும்.

    திரு ஓங்கும் புண்ணியச் செயல் ஓங்கும் திருக்கழுக்குன்றத்தில் நடைபெறும் சங்குதீர்த்த புஷ்கரமேளா நிகழ்வும்

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே நடத்தப்படுகிறது.

    • திருக்கழுக்குன்றம் தலத்தில் மலையை சூழ்ந்து 12 தீர்த்தங்கள் இருக்கின்றன
    • தாழக்கோயிலில் நந்திதேவர் தவம் செய்த இடத்தில் நந்தி தீர்த்தம் இருக்கிறது.

    திருக்கழுக்குன்றம் தலத்தில் மலையை சூழ்ந்து 12 தீர்த்தங்கள் இருக்கின்றன

    1. இந்திர தீர்த்தம்

    2. சம்பு தீர்த்தம்,

    3. உருத்திர தீர்த்தம்

    4. வசிட்ட தீர்த்தம்

    5. மெய்ஞ்ஞான தீர்த்தம்

    6. அகத்திய தீர்த்தம்

    7. மார்க்கண்ட தீர்த்தம்

    8. கோசிக தீர்த்தம்

    9. நந்தி தீர்த்தம்

    10. வருண தீர்த்தம்

    11. அகலிகை தீர்த்தம்

    12. பட்சி தீர்த்தம்

    தாழக்கோயிலில் நந்திதேவர் தவம் செய்த இடத்தில் நந்தி தீர்த்தம் இருக்கிறது.

    நால்வர் ஆலயத்தின் பின்புறம் இந்திர தீர்த்தம் இருக்கிறது.

    மலைமீது கழுகுகள் அமுதுண்ணும் இடம் அருகே இருப்பது பட்சி தீர்த்தம்.

    பட்சிதீர்த்தம் பூடா, விருத்தாவெனும் இரு முனிவர்கள் சாரூபப் பதவி வேண்டி தவம் செய்து

    இறைவன் தரிசனம் தந்தபோது மாறாக சாயுச்சியப் பதவி வேண்டி இறைவன் தந்த வரத்தை மறுத்ததனால்

    சம்பு, ஆதி எனும் கழுகுகளாய்ப் பிறந்து இம்மலையில் அவர்கள் மூக்கினால் உண்டாக்கப் பெற்ற தீர்த்தமாகும்.

    சுரகுரு சக்கரவர்த்தியின் அமைச்சனும், வேட்டை நாயும் இதில் மூழ்கி வெண்குஷ்டநோய் நீங்கப் பெற்றனர்.

    வடநாட்டு யாத்திரீகர்கள் இந்த பட்சி தீர்த்தப் பெயரையே இத்தலத்திற்கு வழங்கி வழிபட்டு வருகின்றனர்.

    • திருக்கழுக்குன்றம் தலத்தில் விநாயகர் கோவில்கள் திருப்பிய திசையெல்லாம் நிரம்ப உள்ளன.
    • கிரிவல பாதையில் மேலும் ஒரு விநாயகர் ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

    திருக்கழுக்குன்றம் தலத்தில் விநாயகர் கோவில்கள் திருப்பிய திசையெல்லாம் நிரம்ப உள்ளன.

    அந்த விநாயகர்கள் விவரம் வருமாறு

    1. அன்னகாவடி விநாயகர்

    2. இரட்டை விநாயகர்

    3. அரசடி விநாயகர்

    4. சித்தார்த்த விநாயகர்

    5. வண்டுவன விநாயகர்

    6. சித்திபுத்தி சமேத சுந்தரமூர்த்தி விநாயகர்

    7. வன்னியடி விநாயகர்

    8. சுந்தர விநாயகர்

    9. வலம்புரி விநாயகர்

    10. வல்லபை விநாயகர்

    11. வேத விநாயகர்

    12. லட்சுமி விநாயகர்

    கிரிவல பாதையில் மேலும் ஒரு விநாயகர் ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.

    • இத்தலத்திலிருந்து 9km தொலைவில் பல்லவரின் துறைமுக பட்டினமாகிய மகாபலிபுரம் உள்ளது.
    • மலை மீது ஏறிச் செல்வதற்கு வசதியாகப் படிகட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னைக்கு அருகில் உள்ள பழமைமிக்க சிவதலங்களுள் திருக்கழுக்குன்றம் தலமும் ஒன்று.

    இத்தலம் சென்னையில் இருந்து 45 மைல் தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 9 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது.

    இத்தலத்திலிருந்து ஒன்பது 9 தொலைவில் பல்லவரின் துறைமுக பட்டினமாகிய மகாபலிபுரம் உள்ளது.

    கழுகு குன்றம் என்பது கழுக்குன்றம் என்று இப்போது மருவி அழைக்கப்பட்டு வருகின்றது.

    கழுகுகள் இறைவனை பூசித்து பேறு பெற்ற தலம் இது.

    இதன் காரணமாகவே இத்தலத்திற்கு இப்பெயர் அமைந்தது.

    இதன் காரணமாக இத்தலத்திற்கு பட்சி தலம் என்னும் பெயரும் உண்டு.

    மற்றும் இத்தலத்திற்கு உலகளந்த சோழபுரம், வேதகிரி, தட்சிண கைலாசம், ருத்திராகோடி என்னும் பெயர்களும் உண்டு.

    கழுகுகள் இத்தலத்தில் இறைவனைப் பூசித்துப் பேறுபெற்ற உண்மையை இன்றும் அடிக்கடி நேரில் கண்டு அறியலாம்.

    இரண்டு கழுகுகள் ஒவ்வொரு நாளும் பகல் 11 மணிக்குள் இத்தலத்து மலையின் கோபுரத்தை சுற்றிவந்து செல்வதை பார்க்க முடியும்.

    இக்காட்சியை இத்தலத்திலன்றி வேறு எத்தலத்திலும் காண இயலாது.

    வடநாட்டை சேர்ந்தவர்கள் இத்தலத்தைப் பட்சி தீர்த்தம் என்று கூறிப் போற்றி வழிபட்டு வருகின்றனர்.

    இத்தலத்து மலை மீது ஏறிச் செல்வதற்கு வசதியாகப் படிகட்டுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

    • “இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் உனக்கு பாதை காட்டும் என்றது அசரீரி.
    • இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.

    இலங்கையில் இருந்து வணிகர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய கப்பலில் வந்து செல்வார்.

    ஒருமுறை கடும் புயல், மழை பெய்தது.

    இதனால் குலசேகரன்பட்டினம் வரை கப்பலில் வந்தவர் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே தங்கும்படியானது.

    சிவனைத் தரிசிக்க முடியவில்லையே என்ற கவலையால் அந்த வணிகர் கதறி அழுதார்.

    அவரது வாட்டத்தை அறிந்த சிவனார், அங்கேயே அவருக்கு திருவாதிரைக் கோலத்தில் காட்சி தர முடிவு செய்தார்.

    அப்போது, "இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் வரிசையாகச் சென்று, உனக்கு பாதை காட்டும்.

    அந்த எறும்புக்கூட்டம் நிற்கும் இடத்தில், உனக்குத் திருக்காட்சி தருவேன்" என அசரீரி கேட்டது.

    அதன்படியே எறும்புகள் வழிகாட்ட, அவற்றைப் பின்தொடர்ந்த வணிகர், ஓரிடத்தில் தில்லையின் திருவாதிரைத் திருக்காட்சியைக் கண்டு சிலிர்த்தார்.

    பிறகு, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பி, சிவனுக்கு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார்.

    திருச்செந்தூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம்.

    இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    பங்குனி உத்திரப் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடும் தென் மாவட்ட ஆலயங்களுள், முதன்மையான தலம் இது ஆகும்.

    பங்குனி உத்திர நாளில், இங்கு திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும்.

    பங்குனி உத்திர நாளில், திருமணப் பிரார்த்தனை செய்பவர்கள், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இரண்டு மாலைகளை மாற்றி,

    அதில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, தங்களின் கழுத்தில் அணிந்து, ஆலயத்தைப் பிரகார வலம் வருவர்.

    இப்படிப் பிரார்த்திக்க, விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம்.

    அதேபோல் இங்கு தருகிற மஞ்சளை, பெண்கள் தினமும் குளித்துவிட்டுப் பூசிக் கொள்ள, வீட்டில் விரைவில் கெட்டிமேள சத்தம் கேட்குமாம்.

    திருக்கல்யாணம் முடிந்த அன்றைய தினம், இரவு 7.30 மணிக்கு, சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அமர்ந்தபடி காட்சி தருவர்.

    இதைத் தரிசிக்க நம் வேதனைகள் பறந்தோடி விடும்.

    • வழிபாட்டுப் படையலுக்காக, மூன்று கற்களை வைத்து அடுப்பு மூட்டிப் பொங்கலிடுவார்கள்.
    • அகநானூறு, பங்குனி உத்திரத்தை, “பங்குனி முழக்கம்” என்று குறிப்பிடுகிறது.

    பங்குனி உத்திரம் மிக பழமையான விழாக்களில் ஒன்றாகும்.

    பழந்தமிழ் நாட்டில் சோழர் தலைநகராக விளங்கிய உறையூரில் மிகப் பெரிய விழாவாக இது நடைபெற்றது.

    அகநானூறு, பங்குனி உத்திரத்தை, "பங்குனி முழக்கம்" என்று குறிப்பிடுகிறது.

    பங்குனி உத்திரத்தன்று காவிரியின் தென்கரை, வடகரை இரு பகுதிகளிலும், அதன் வடக்கே அமைந்த கொள்ளிட ஆற்றங்கரைகளிலும்,

    பற்பல ஊர்களின் மக்கள், இரவு நேரங்களில் ஆற்றின் மணல் வெளிகளில் இறை உருவங்களை அமைத்து,

    அலங்கரித்து, திருவரங்கப் பெருமாளையும், வயலூர் முருகப் பெருமானையும் வழிபாடு செய்வார்கள்.

    வழிபாட்டுப் படையலுக்காக, மூன்று கற்களை வைத்து அடுப்பு மூட்டிப் பொங்கலிடுவார்கள்.

    மக்களின் குலவை ஒலியும், இசை நடனம் ஆகிய கொண்டாட்டங்களின் ஓசையும் நிறைந்து பவுர்ணமித் திருவிழா, தேசிய திருவிழாவாகவே நடைபெறும்.

    போரில் வெற்றி பெறும் சோழர்களின் புகழ் பெற்ற நகராகிய உறையூரில், கரைகளில் ததும்பி நீர் நிறைந்து செல்லும்.

    காவிரியாற்றின் கரைகளில் உள்ள வெண்மணல் நிறைந்த சோலைகளில் "பங்குனி முழக்கம்" என்ற திருவிழாவில்,

    மரத்தடி தோறும் அடுப்பு மூட்டிப் பொங்கலிட்டு வழிபட்டு விருந்துண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்

    என்ற கருத்தில் உறையூர் முதுகூத்தனார் என்ற புலவர் அகநானூற்றில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

    பங்குனி உத்திரத்தன்று காவிரியின் வடகரையில் உள்ள ஸ்ரீரங்கத்தில், ரங்கநாதப் பெருமாளும், ஸ்ரீரங்கநாச்சி யாரும் இணைந்து அமர்ந்து திருக்காட்சி தருவர்.

    பங்குனி உத்திரத்தன்று இரவு முழுவதும் இணைந்து காட்சி தரும் திவ்ய தம்பதியரை "சேர்த்திப் பெருமாள்" என்று போற்றி அடியவர் வழிபாடு செய்வர்.

    உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர், பெருமாளும், தாயாரும் சேர்த்தியாகச் சேவை சாதித்த காலத்தில் தான் "கதியத்ரையம்" என்ற நூலை அருளச் செய்தார்.

    திருவாய் மொழிக்கு ஒன்பதினாயிரரப்படி உரையையும், திருப்பாவைக்கு ஈராயிரப்படி உரைகளையும் சரணாகதி கத்யத்துக்கு விரிவுரையும் எழுதிய நஞ்சியா என்ற திருமாலடியார் பங்குனி உத்திரத் திருநாளில் தான் தோன்றினார்.

    • சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.
    • அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

    சபரிமலை ஐயப்பன் அவதரித்த தினம் பங்குனி உத்திரமாகும்.

    ஆண்டு தோறும் இந்நாளில் சபரிமலையில் பக்தர்கள் ஐயப்பனுக்கு ருத்ராபிஷேகம் செய்து விசேஷ வழிபாடு செய்கிறார்கள்.

    பலி விழாப்பாடல் செய் பங்குனி உத்திர நாள் ஒலி விழா என்று திருஞான சம்பந்தர் பங்குனி உத்திரத்தை போற்றி பாடுகிறார்.

    சில கோவில்களில் சுவாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

    முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் திருத்தலங்களில், பங்குனி உத்திரம் பிரம்மோற்சவமாகவும், கல்யாண உற்சமாகவும் கொண்டாடப்படுகிறது.

    குறிப்பாக அன்றைய தினம் பக்தர்கள் காவி உடை அணிந்து கால்நடையாக பழனிக்கு வருவார்கள்.

    விரதமிருந்து முருகனை வழிபடுவார்கள்.

    • முருகப் பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது.
    • கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன.

    முருகனின் அறுபடைத் தலங்களில் திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகத் திகழ்கிறது.

    சூரனை வென்ற முருகனுக்குப் பரிசாகத் தன் மகள் தெய்வானையை தேவேந்திரன் மணம் செய்வித்த திருத்தலம் இதுவாகும்.

    சைவம் (சிவவழிபாடு), வைணவம் (விஷ்ணு வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), சாக்தம் (அம்பாள் வழிபாடு),

    சௌரம் (சூரிய வழிபாடு), கவுரமாரம் (முருக வழிபாடு) என்னும் ஆறு வகையான மதங்கள் பழங்காலத்தில் இருந்தன.

    அவற்றை இணைக்கும் தலமாக திருப்பரங்குன்றம் கோவில் திகழ்கிறது.

    இதை கருவறையில் காணலாம்.

    ஐராவதம் என்னும் தேவலோகத்து யானையால் வளர்க்கப்பட்ட தெய்வானையை மணம் செய்த விழா

    பங்குனி உத்திரத்தையொட்டி, இங்கு பிரம்மோற்சவமாக நடக்கிறது.

    முருகப் பெருமானின் பாதத்தின் கீழ் இந்த யானை இடம் பெற்றுள்ளது.

    கருவறையை அடைய இங்கு சடாட்சரப்படிகள் என்னும் ஆறுபடிகள் அமைந்துள்ளன.

    இந்தப் படிகளில் ஏறும்போது "சரவணபவ" என்னும் ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடியே செல்வது நல்லது.

    • கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.
    • பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

    பஞ்ச பாண்டவர்களில் மூன்றாவதாக பிறந்தவன் அர்ஜுனன்.

    பத்துவித பெயர்களை உடையவன் அவன்.

    கூர்மையான பார்வையை உடையவன்.

    நினைத்த பொழுது, நினைத்தபடி தூங்கவோ, தூங்காதிருக்கவோ அவனுக்கு இயலும்.

    அதனால் அவன் குடாகேசன் என்று அழைக்கப்பட்டான்.

    கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தார்.

    கீதை பிறக்க காரணமாய் இருந்தவன் அர்ஜுனன்.

    எனவே அர்ஜுனன் பிறந்த தினமான பங்குனி உத்திர திருநாள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சிறப்பு பலன்கள்

    1. பங்குனி உத்திர விரதம் இருந்தால் பாவம் அகலும். பகை விலகும்.

    2. பங்குனி உத்திரத்தன்று வேண்டுதல்களின் பேரில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோரை பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

    3. பங்குனி உத்திரத்தன்று சுவாமி கடல், ஏரி, கடாகம் போன்ற இடங்களில் தீர்த்தம் கொடுப்பார்.

    அப்போது அதில் நீராடினால் புண்ணியம் கிடைக்கும்.

    • இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.
    • கார்த்திகை நட்சத்திர நாளில் விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ தொலைவில் தேனிமலை கிராமத்தில் அழகிய முருகன் கோவில் உள்ளது.

    செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களும், பெண்களும் தொடர்ந்து ஏழு செவ்வாய்க் கிழமைகளில் ஓரை காலத்தில் இங்கு வந்து

    ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு மலையை வலம் வந்து வணங்கினால், விரைவில் தோஷம் நீங்கி, திருமண வரம் கைகூடும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், முருகக் கடவுளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை ஒழியும்.

    பங்குனி உத்திர நாளில் புதுக்கோட்டை திருமயம், பொன்னமராவதி, அன்னவாசல், முதலான பல ஊர்களில் இருந்து

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்து வந்தும் வழிபடுகின்றனர்.

    மலையடிவாரத்தில், சுனை ஒன்று உள்ளது.

    இதில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தரிசித்தால், சகல தோஷங்களும் நீங்கும்.

    கார்த்திகை நட்சத்திர நாளில் இந்த முருகப் பெருமானுக்கு விளக்கேற்றி வழிபடுவது விசேஷம்.

    ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு மாலை சார்த்தி, திருமாங்கல்ய பூஜை செய்து வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்.

    ×