search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • சில திருக்கோவில்களில் பழமையான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
    • ஒரே நாளில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

    அனைத்து நரசிம்மர் கோவில்களுக்கும் சென்று பொதுமக்கள் எம்பெருமானுக்குரிய பூஜையையும், காணிக்கைகளையும் செலுத்துகின்றனர்.

    சில திருக்கோவில்களில் பழமையான சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இப்படிப்பட்ட புராதன சிறப்பு வாய்ந்த 3 நரசிம்ம சாமி கோவில்களைப் பற்றி ஓரளவு காண்போம்.

    சிங்கிரி, பரிக்கல், பூவசரங்குப்பம் ஆகிய 3 நரசிம்ம சாமி திருக்கோவில்களையும் ஒரே நாளில் சென்று தரிசித்தால் மக்கள் தங்களுடைய நிறைவேறாத விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்கள் உள்ளன.

    1. சிங்கிரிகுடி கோவில்,

    2. பரிக்கல்,

    3. பூவசரங்குப்பம்.

    இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களும் மேற்கிலிருந்து கிழக்காக ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது.

    ஒரே நாளில் இந்த 3 நரசிம்ம சாமி கோவில்களை தரிசிப்பது மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

    மக்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் என்ற முப நம்பிக்கையில் இந்த 3 நரசிம்மர்களையும் ஒரே நாளில் தரிசிக்க விரும்பகின்றனர்.

    ஆகவே இந்த 3 கோவில்களும் மிகவும் பிலபமாக உள்ளன.

    • எந்த கடவுளாலும், எந்த தேவர்களாலும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தை சாந்தப்படுத்த முடியவில்லை.
    • பிரகலாதன் பணிவுடனும், பக்தியுடனும் பகவானை சாந்தம் செய்தான்.

    இரண்யனை அழித்த பிறகு எந்த கடவுளாலும், எந்த தேவர்களாலும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்ரத்தை சாந்தப்படுத்த முடியவில்லை.

    அதனால் அவர்கள் எல்லோரும் ஸ்ரீமகாலட்சுமியை சரண்டைந்தனர். ஆனாலும் அவளாலும் அவருடைய உக்கிரத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

    பிரம்மாவின் வேண்டுதலின்படி, பரம பாகவதனான பிரகலாதன் ஸ்ரீநரசிம்மனின் முன்பாகச் சென்று, பணிவுடனும், பக்தியுடனும் பகவானை சாந்தம் செய்தான்.

    அதனால் மனம் மகிழ்ந்த ஸ்ரீநரசிம்ம சாமி சாந்தமானார்.

    தன்னுடைய சுயரூபத்தை அடைந்து சாந்தமான பகவான் தானே சுயம்புவாக வெளிப்படுத்திக் கொண்டது இந்த விபவ அவதாரத்தின் தனித்தன்மையாகும்.

    தன்னுடைய பக்தனான குழந்தை பிரகலாதனைக் காப்பாற்றவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காக பகவான் சுயம்புவாகத் தோன்றினார்.

    • எல்லா இடங்களிலும் அவருடைய அர்ச்சாவிக்ரகம் சாந்தமாகவும், ஆனந்தமாகவும் அமைதியாகவே உள்ளது.
    • நாம் நவ நரசிம்மர்களை 9 விதமான உருவங்களில் வணங்குகிறோம்.

    ஸ்ரீமந் நாராயணனின் 10 அவதாரங்களில் துஷ்டர்களை அழிக்கவும், இந்த உலகத்தில் உள்ள நல்லவர்களையும், அசையப் பொருள்களையும் காப்பதற்கும், தோன்றிய மிகச் சிறந்த அவதாரம் ஸ்ரீநிசரம்ம அவதாரமாகும்.

    ஸ்ரீமகாவிஷ்ணுவே பூர்ணாவதாரமாக இந்த விபவ அவதாரத்தில் உலகத்தில் தோன்றியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

    ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்தது மிகவும் பயங்கரமாக இருந்தது.

    ஆனால் எல்லா இடங்களிலும் அவருடைய அர்ச்சாவிக்ரகம் சாந்தமாகவும், ஆனந்தமாகவும் அமைதியாகவே உள்ளது.

    அவருடைய சிலாவடிவம் (திவ்யமங்கள விக்ரகம்) பக்த பிரகலாதன், மற்ற முனிவர்களுடைய பிம்பங்களுடன் சேர்ந்தே அமைந்துள்ளது.

    ஸ்ரீநரசிம்ம பகவானுடைய அர்ச்சா விக்ரகங்கள் 36 விதமாக அமைந்துள்ளது. எண்ணற்ற விதத்தில் மகாவிஷ்ணுவின் திருக்கோவில்களில் அவருடைய வெவ்வேறு பிம்பங்கள் தூண்களிலும் சுவர்களிலும் காணப்படுகினறன.

    ஆனால் நாம் நவ நரசிம்மர்களை 9 விதமான உருவங்களில் வணங்குகிறோம்.

    1. சத்திரவட நரசிம்மர் (பகவான் ஒரு ஆல மரத்தரடியில் அமர்ந்திருப்பது போல)

    2. யோக நரசிம்மர் (யோகத்திருப்பது போல்)

    3. உக்ர வடிவ நரசிம்மர் (சில மிகவும் கோபமாக)

    4. கிரோட நரசிம்மன் (வராக நரசிமமர், இரண்யாட்சனிடம் மிகவும் கோபமாக)

    5. ஸ்ரீமாலோல நரசிம்மர் (ஸ்ரீமகாலட்சுமியுடன் கூடியவராக)

    6. ஜவாலா நரசிம்மர் (தூணிலிருந்து தோனறுபவராக)

    7. பாவன நரசிம்மர் (எல்லா பாவங்களையும் போக்கக் கூடிய நரசிம்மராக)

    8. பார்க்கவ நரசிம்மர் (எல்லோரையும் கடாட்சிக்கிறவராக)

    9. காரஞ்ச நரசிம்மர் (கூர்மையான நகங்களையுடையவர்.

    இந்த விதமான அமைப்புக்களை உடைய உருவச் சிலைகளை நாம் எல்லா திருக்கோவில்களிலும் காணலாம்.

    ஆகவே நரசிம்ம அவதாரத்தின் சிறப்பு எண்ணற்றதாகும்.

    • புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்ம சாமி இந்த பூமியில் அவதரித்தார்.
    • ஸ்ரீமத் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.

    இரணியகசிபுவினுடைய கொடும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அக்குறிப்பிட்ட வேளையில், குறிப்பிட்ட இடத்திலேயே அவதரித்தார்.

    அசுரனின் முதல் விருப்பத்தின்படி மனிதானாகவோ, மிருகமாகவோ அல்லாமல் ஸ்ரீமத் நாராயணன் பாதி மனித உருவத்திலும், பாதி சிங்க உருவத்திலும் அவதரித்தார்.

    சிங்கம் போன்ற திருமுகத்தில் தாடியுடனும், கோரைப் பற்களுடனும், சிறந்த கண்களுடனும், தலைக்கு கீழ்பாகம் மனித உடலுடனும், கூர்மையான நகங்களுடனும் தோன்றினார்.

    புதுமையான உருவத்துடன் ஸ்ரீநரசிம்ம சாமி இந்த பூமியில் அவதரித்தார்.

    கடவுள் சந்தியா காலத்தில் சூரியன் குறைந்த ஒளியுடன் திகழ்ந்த வேளையில் பாதி உயிரிழந்த நிலையிலும் இரண்யகசிபுவைத் தன் மடியில் (தன் தொடையின் மீது) அந்த மண்டபத்தின் வாயிற்படியில் முற்றத்திற்கு உள்ளேயுமில்லாமல், வெளியேயுமில்லாமல் இருத்தி அனுடைய வயிற்றை தன் கூர்மையான நகங்களினால் கிழித்துக் கொன்றார்.

    எம்பெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பதற்காக மிகவும் பயங்கரமான அவதாரம் எடுத்ததைப் பார்த்த பிரகலாதன், தன்னுடைய தந்தையைக் கொல்வதற்காக பகவான் இந்த அவதாரத்தை எடுத்துள்ளார் என்பதைத் தெரிந்து கொண்டான்.

    இதுவே ஸ்ரீநரசிம்ம அவதாரத்தின் சிறப்பும், அற்புதமும் ஆகும்.

    • பிரகலாதன் தன் தந்தையை கடவுளாகக் கருதவில்லை.
    • உடனே இரண்யகசிபு தன் கதையால் அத்தூணைப் புடைத்தான்.

    இரண்யகசிபு தன் அண்ணனைக் கொன்ற பகவான் விஷ்ணுவை தன் மகன் துதிப்பதைப் பார்த்து தன் மகனே தனக்கு எதிரியாகி விட்டானே என்று நினைத்தான்.

    ஆகவே தன் மகனைக் கொல்வதற்காக பற்பல கொடுமையான வழிகளைக் கையாள, நினைத்தான்.

    ஒவ்வொரு முறையும், இரணியகசிபு தன் மகனைக் கொல்ல நினைத்த வழிகளில் விஷ்ணு வந்து குறுக்கிட்டு பிரகலாதனைக் காத்து நின்றான்.

    பிரகலாதன் தன் தந்தையை கடவுளாகக் கருதவில்லை.

    பகவான் விஷ்ணுவைத்தான் தன்னுடைய காவலரன் (கடவுள் நாராயணன்) என்று நம்பினான்.

    இரண்யகசிபு தன்னுடைய முயற்சி எல்லாம் தோல்வியடைந்ததை நினைத்து ஒரு மாலைப் போது மிகவும் கடும் கோபம் கொண்டு கோபத்தினால் தன்னுடைய மகனை இழுத்து வந்து ஒரு கல் தூணைக் காண்பித்து, உன்னுடைய விஷ்ணு இக்கல் தூணில் இருக்கிறானா? என்று வினவினான்.

    பக்தனான பிரகலாதன் மிகவும் வினயத்துடன் கைகளைக் குவித்து, என்னுடைய இறைவன் ஸ்ரீமந் நாராயணன் எங்கும் உள்ளான், எல்லா இடத்திலும் எப்போதும் உள்ளான். அவன் கல்லிலும் இருப்பான், சிறு துரும்பிலும் இருப்பான் என்று பதிலுரைத்தான்.

    உடனே இரண்யகசிபு தன் கதையால் அத்தூணைப் புடைத்தான்.

    அப்போது பகவான் விஷ்ணு பயங்கர கர்ஜனையுடன், மின்னல் வேகத்தில் அத்தூணியிலிருந்து ஸ்ரீநரசிம்ம மூர்த்தியாக அவதாரம் எடுத்தார்.

    • பாகவதர்களுக்குள் தலை சிறந்தவனான பிரகலாதன் அவனுக்கு மகனாகப் பிறந்தான்.
    • இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் இளம் வயதிலேயே நல்ல குணங்களை அடைந்திருந்தான்.

    இரண்யகசிபு கேட்ட வரத்தை பிரம்மன் அளித்ததால் தேவர்களும், மனிதர்களும் மிகவும் அஞ்சினார்கள்.

    இரண்யகசிபு தன்னுடைய நீண்ட கால தவத்தின் பயனாக தனக்கு வரம் கிட்டியதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

    தான் மரணத்திலிருந்து விடுதலை அடைந்ததாக பெருமகிழ்ச்சி அடைந்தான்.

    பாகவதர்களுக்குள் தலை சிறந்தவனான பிரகலாதன் அவனுக்கு மகனாகப் பிறந்தான்.

    அவன் தாய் (கயாதுவின்) வயிற்றில் இருக்கும்போதே, ஸ்ரீமந் நாராயண மந்திரத்தை (நமோ நாராயண) நாரதமுனிவரின் வாயிலாகக் கேட்டு அறிந்து கொண்டான்.

    இதனால் இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் இளம் வயதிலேயே நல்ல குணங்களை அடைந்திருந்தான்.

    அவன் பிறவியிலேயே பாகவதனாக இருந்ததால் அந்த நல்ல குணங்கள் அவன் வளர வளர மேன்மேலும் அவனுள் நன்கு ஊறியிருந்தன.

    மெதுவாக அவன் விஷ்ணுபக்தன் என்பதை எல்லோரும் அறிந்தனர்.

    அவனுடைய தந்தை இரண்யகசிபு தன்னுடைய எதிரியான விஷ்ணுவின் பக்தனாக தன் மகன் வளருவதைத் தெரிந்து கொண்டான்.

    அதனால் அவன் மிகவும் மன உளைச்சலும், வருத்தமும் அடைந்தான்.

    • அவன் பல வருடங்கள் பிரம்மனைக் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினான்.
    • பிரம்மன் அறிந்தோ அல்லது அறியாமலோ அவன் கேட்ட வரததை அளித்தார்.

    இக்கதை மிகவும் முக்கியமானதாகும்.

    அவதார நோக்கத்தின் முக்கியத்துவமும், பற்பல நீதிகளும் பின்னிப் பிணைந்த சரித்திரமாகும்.

    ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் வைகுண்டத்தைக் காவல் செய்த இரண்டு பக்தர்களான ஜெய, விஜயர்கள், சநகாதி முனிவர்களை, ஸ்ரீவைகுண்டத்தில் நித்யாவசம் செய்யும் பகவானை அடைய முடியாதபடி தடுத்ததால் ஏற்பட்ட சாபத்தைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

    சாபத்தினால் அவர்கள் இருவரும் ராட்சகர்களாகவும், விஷ்ணுவை நிந்திப்பவர்களாகவும் பிறப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    அடுத்தடுத்த பிறவிகளில் பகவானுடைய கருணையால் ஜெய, விஜயர்கள் ஹிரண்யாட்சகாவும், ஹிரண்யகசிபுவாகவும் பிறந்தார்கள்.

    ஆகையால் பகவான் விஷ்ணு வராக அவதாரத்தில் சிரண்யாட்சனை, வதம் செய்து அசுரர்களுக்கு பாடம் புகட்டினார்.

    தன்னுடைய மூத்த சகோதரனைக் கொன்ற விஷ்ணுவையும் அவனுடைய பக்தர்களையும் பலவிதமாக நிந்திக்கத் தொடங்கினான் ஹிரண்யகசிபு.

    அவன் பல வருடங்கள் பிரம்மனைக் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினான்.

    பிரம்மாவும் அவனுடைய கடும் தவத்தை கண்டு மகிழ்ச்சி அவனுக்கு வரம் கொடுத்தார்.

    அவன் பிரம்மனிடம் ஒரு வரத்தை வேண்டி பெறுகிறான்.

    அவ்வரத்தின்படி இந்த உலகத்தில் உள்ள இயற்கை நியதிப்படி தான் மரணம் அடையக் கூடாது என்றும் மனிதர்களாலும், தேவர்களாலும் தனக்கு அழிவு நேரக்கூடாது என்றும் வேண்டினான்.

    அந்த அசுரன் தன்னுடைய சாமர்த்தியத்தால் இந்த உலகத்தில் எவ்வாறெல்லாம் மரணம் ஏற்படும் என்பதை சிந்திதது, தன்னுடைய மரணம் அவ்வாறெல்லாம் நிகழக் கூடாது என்று வரமாகக் கேட்டான்.

    அவ்வரத்தின் முக்கிய அம்சங்கள்:

    1. கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட எந்த பொருளாலும் தனக்கு அழிவு நேரக்கூடாது.

    2. பகலிலோ அல்லது இரவிலோ நேரக்கூடாது.

    3. பூமியிலோ அல்லது ஆகாயத்திலோ நேரக்கூடாது.

    4. எவ்விதக் கருவியாலும், கைகளாலும் தனக்கு மரணம் நேரக்கூடாது.

    5. மனிதனாலோ அல்லது விலங்குகளாலோ தனக்கு மரணம் நேரக்கூடாது.

    இவ்வாறு அவன் வரம் வேண்டினான்.

    மேலும் பிரம்மனிடம் தனக்கு மிகவும் பலமான சக்தியைக் கொடுக்கும் படியும் வேண்டினான்.

    பிரம்மன் அறிந்தோ அல்லது அறியாமலோ அவன் கேட்ட வரததை அளித்தார்.

    • தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.
    • வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

    அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.

    செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார்.

    இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது.

    இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது.

    அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.

    கங்கை, யமுனை, சரஸ்வதி, காவிரி, நர்மதை, துங்கபத்ரா, கோதாவரி, கண்டகி, தாமிரபரணி போன்ற புனித நதிகளையும் மானஸசரோவரம், புஷ்கரம், கௌரி குண்டம் ஆகிய புனித தடாகங்களையும் மானசீகமாக வழிபடுவதும் நீராடுவதும் புண்ணிய பலன் தரும்.

    ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு செய்யும் தானம், தர்மம், உதவிகள் பல பிறவிகளுக்கு புண்ணிய பலன் தரும்.

    சாலக்கிராமம், ருத்ராட்சம், ஸ்படிகலிங்கம் மற்றும் ஆராதனைக்கு வைத்துள்ள விக்கிரக தெய்வத்திருவுருவங்களுக்குப் பச்சை கற்பூரம், குங்குமப்பூ சேர்த்து சந்தனக் கட்டையால் அரைத்த சந்தனம் பூசி வழிபட உடலில் ஏற்படும் வெப்ப சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

    வெள்ளி வாங்கினால் சரும நோய்கள், மனக்குழப்பம், நிம்மதியின்மை ஆகியவை தீரும்.

    தங்கம் வாங்கினால் தீராத கடன்களையும் ஏழ்மையையும் மிக்குறுகிய காலத்தில் தீர்க்கும்.

    தயிர் சாதம் ஏழைகளுக்குத் தருவது 11 தலைமுறைக்கு குறைவில்லா அன்னம் கிடைக்க வழிவகுக்கும்.

    • பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.
    • மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

    அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.

    ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.

    இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள்) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன.

    இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

    சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும்,

    ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும்,

    வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ''அட்சய திருதியை யாகவும்'' (பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது.

    சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.

    வேதத்தில் அட்சய திருதியை நாளில் அறிவு பெறுதல் அல்லது கொடையளித்தல் நல்ல பலனளிக்கும் எனக் கூறுகின்றன.

    இது புதிய வணிகத்தினையோ அல்லது முயற்சியையோ துவங்க வெகு நன்னாளாகக் கருதப்படுகிறது.

    பலர் இந்த நாளில் தங்கம் அல்லது சொத்து வாங்குகின்றனர்.

    மக்கள் இந்த நாளில் உண்ணாநோன்பும் பூசைகளும் கடைபிடிக்கின்றனர்.

    விசிறி, அரிசி, உப்பு, நெய். சருக்கரை, காய்கறிகள், புளி, பழம், துணிகள் ஆகியவற்றை கொடையாக அளிக்கின்றனர்.

    இந்த நாளில் திருமாலை வணங்குகின்றனர். தீப வழிபாடு செய்யும்போது சிலையின் மீது அல்லது அருகில் துளசி தீர்த்தம் தெளிக்கப்படுகின்றது.

    • அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.
    • வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

    அட்சய திருதியை என்பது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.

    அது வைகாசியில் தேய்பிறையில் பவுர்ணமி நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.

    அட்சயம் என்றால் குறைவற்றது, வளர்வது எனப்பொருள். வைகாசி மாதம் வளர்பிறை திருதியை அட்சய திருதியை என்று அழைப்படுகிறது.

    அட்சய திருதியை தினத்தன்று தெய்வங்களுக்கு செய்யப்படும் பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானங்கள் உதவிகள் ஆகிய அனைத்தும் அட்சயமாக வளர்ந்து பலனைத் தரும்.

    குறிப்பாக ஒரு சொம்பு அல்லது பாத்திரம் நிறைய தண்ணீரை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்.

    இதற்கு தர்ம கட தானம் எனப்பெயர்.

    புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதற்காகவும், பித்ருக்களின் திருப்திக்காகவும் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை தானம் செய்கிறேன் என சங்கல்பம் செய்து கொண்டு ஒரு சொம்பு அல்லது பாத்திரத்தில் ஏலக்காய் முதலிய வாசனை திரவியங்களுடன் கூடிய சுத்தமான தண்ணீரை நிரப்பி, அதை ஏழைகளுக்கு தந்துவிட வேண்டும்.

    அட்சய திருதியை தினத்தன்று வீட்டின் வாசலில் தண்ணீர் பந்தல் அமைத்தோ, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி வைத்தோ, அனைவருக்கும் குடிக்க தண்ணீர் தருவது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    அன்னதானத்துக்கும், தண்ணீர் தானத்துக்கும் மிஞ்சிய தானமில்லை என்று சொல்வார்கள்.

    பசியுடன் கூடிய அனைவருக்கும் அன்னதானம், தண்ணீர் தானம் செய்ய வேண்டும்.

    இதில் ஜாதி, மத, இன, கல்வி, பாகுபாடு பார்க்கக் கூடாது.

    தாகத்தோடு வருபவர்களுக்கு குடிக்க தண்ணீர் தருவது புண்ணியத்தை தந்து, நமது விருப்பத்தை நிறைவேற்றும்.

    அது இறந்த முன்னோர்களுக்கு உண்டாகும் தாகத்தையும் தனித்து அவர்களுக்கும் நல்ல கதியை உண்டாக்கும்.

    மேலும் விசிறி, குடை, செருப்பு, பானகம், நீர் மோர் ஆகியவற்றையும் ஏழைகளுக்கு தானமாக அளிக்கலாம்.

    ஆகவே அட்சய திருதியை தினத்தன்று வெயிலில் தவிக்கும் 10 பேருக்காவது குடிக்க தண்ணீர் கொடுப்பதும்,

    காய்ந்து போன செடிகள், கொடிகள், மரங்களுக்கு தண்ணீர் விடுவதும் மிகவும் சிறந்தது.

    அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜை, ஜபம், ஹோமம், பாராயணம், பித்ரு தர்ப்பணம் மற்றும் ஏழைகளுக்கு செய்யப்படும் தானம் உதவி, ஆகிய ஆறும் அட்சயமாக பலனைத்தரும்.

    இதனால் கிடைக்கும் பலன் நமக்கும் நம்மைத் தொடர்ந்து நம் சந்ததிகளுக்கும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் குறைவின்றி அட்சயமாக கிடைக்கும்.

    • கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.
    • ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இத்திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்தது.

    இதன் கர்ப்ப கிரகம் இலங்கையை சேர்ந்தது.

    பராக்கிரம பரகு என்ற மன்னனால் கி.பி.1173ல் கட்டியதாக கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.

    ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

    இக்கோவிலின் கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.

    இக்கோவிலில் உள்ள நந்தி (செங்கற்சுண்ணாம்பு) அறையால் அமைக்கப்பட்டது.

    இதன் நீளம் 22 அடி, அகலம் 12 அடி உயரம் 17 அடி). இது அழகிய வடிவில் அமையப் பெற்று பார்ப்பதற்கு அழகாக அமையப்பெற்றுள்ளது.

    இத்திருக்கோவிலில் உள்ள பிரகாரங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அமையப் பெற்றுள்ளது.

    இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் உலகத்திலேயே நீண்ட பிரகாரமாக கருதப்படுகிறது.

    பக்தர்களுக்கு வசதி

    பக்தர்கள் தங்குவதற்கு தேவஸ்தானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் கிடைக்கும்.

    இவை தவிர தனியார் துறையில் தங்கும் விடுதிகளும் (லாட்ஜ்) ஏராளமாக உள்ளன.

    இவைகளில் நவீன வசதியுடன் கூடிய அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்.

    • ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)
    • மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    இத்திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்:

    1. மகா சிவராத்திரி திருவிழா (பிப்ரவரி, மார்ச்).

    2. வசந்த உத்ஸவம் (மே, ஜூன்)

    3. ராமலிங்கம் பிரதிஷ்டை (மே, ஜூன்) ராவண சம்ஹாரம், விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை.

    4. திருக்கல்யாண திருவிழா (17 நாட்கள்) (ஜூன், ஆகஸ்ட்). தபசு நாள் பல்லக்கில் சயன சேவை திருக்கல்யாண நாள்.

    5. நவராத்திரி விழா (10 நாட்கள்) (செப்டம்பர், அக்டோபர்)

    6. கந்த சஷ்டி விழா (6 நாள்) (அக்டோபர், நவம்பர்)

    7. ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)

    இவை தவிர மாத நாள், வார சிறப்பு விழாக்களும் உண்டு.

    1. மாத விழா (ஒவ்வொரு கார்த்திகை)

    2. பட்ச விழா : பிரதோஷம்

    3. வார விழா (வெள்ளிக்கிழமை) அம்பாள் புறப்பாடு.

    சிறப்பு விழாக்கள்

    1. சங்ராந்தி (தை மாத முதல் நாள்) பஞ்ச மூர்த்திகள் ரதவீதியில் வலம் வருதல்.

    2. சித்திரை மாத பிறப்பு (சித்திரை மாத முதல்நாள்) (பஞ்ச மூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    3. மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)

    4. தெப்போத்ஸவம் : தை மாத பவுர்ணமியில் பஞ்சமூர்த்திகள் வீதி வலம் வந்து லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்.

    5. வைகுண்ட ஏகாதசியன்றும் ஸ்ரீராம நவமியன்றும் ராமர் புறப்பாடு நடைபெறும்.

    6. ஆடி அமாவாசை தை அமாவாசை நாளில் ஸ்ரீகோதண்டராமர் கருட வாகனத்தில் அக்கினி தீர்த்தத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்.

    ×