search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.
    • உப்பின் சொரசொரப்பினை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

    ஒரு சமயம் இக்கோவில் லிங்கம் மணலால் செய்யப்பட்ட தல்ல என்றும் அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர்.

    அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய உப்பில் ஒரு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்தார்.

    அந்த லிங்கம் கரையவில்லை.

    அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாத போது சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.

    ராயர் செய்த உப்பு லிங்கத்தை பிரகாரத்தில் ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் காணலாம்.

    உப்பின் சொரசொரப்பினை அந்த லிங்கத்தைப் பார்த்தாலே உணர முடியும்.

    பதஞ்சலி முக்தி தலம்

    பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்துக்கு நடராஜர் காட்சி தருகிறார்.

    இவரது எதிரில் நந்தி இருக்கிறது.

    நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு சக்கரம் மட்டும் உள்ளது.

    இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும் நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நம் கண்ணுக்குத் தெரியாமல் நாக வடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக் கொள்ளலாம்.

    பதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால் நம் கண்களுக்கு தெரிய மாட்டார்.

    • சக்தி பீடங்களில் இத்தலம் “சேது பீடம்” ஆகும்.
    • விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது.

    தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலாபிஷேகம் செய்கின்றனர்.

    இந்த அபிஷேகத்திற்கு பின்பே ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது.

    இந்த அபிஷேகத்தை தரிசக்க கட்டணம் உண்டு.

    பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது.

    சக்தி பீடங்களில் இத்தலம் "சேது பீடம்" ஆகும்.

    அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.

    விபீஷணன் ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.

    இந்த பாவம் நீங்க விபிஷணன் இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.

    அவனுக்கு காட்சி தந்த சிவன் அவனது பாவத்தை போக்கியதோடு ஜோதி ரூபமாக மாறி-இந்த லிங்கத்தில் ஐக்கியமானார்.

    இதுவே "ஜோதிர்லிங்கம்"ஆயிற்று.

    இந்த லிங்கம் சுவாமி சந்நிதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது.

    ஆஞ்சநேயருக்கு தாமதமாக கைலாயத்திலிருந்து கொண்டு வந்த லிங்கத்திற்கு "விஸ்வநாதர்" என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது.

    ராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார்.

    ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால் தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார்.

    அதன்படி இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்ட பின்பே சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.

    கோவிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே ராமநாதரை தரிசிக்க வேண்டும்.

    விசாலாட்சிக்கு தனி சன்னதி இருக்கிறது.

    சுவாமி சன்னதி பிரகாரத்தில் இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரஸ்வதி, சக்ர நாராயணர், அர்த்த நாரீஸ்வரர், ஏகாதச ருத்ர லிங்கம் (11 லிங்கங்கள்) ஆகியோர் அருளுகின்றனர்.

    அம்பாள் சன்னதியில் அஷ்ட லட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

    பொதுவாக கோவில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை.

    இந்தக் கோவில் எந்தப் பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால் சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.

    கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது. வித்தியாசமான அமைப்பு.

    • இந்த ஆலயமானது வட மாநில மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.
    • இது நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இத்தலமானது மூர்த்தி ஸ்தலம், தீர்த்தம் என்ற மூன்றுக்கும் கீர்த்தி வாய்ந்தது.

    இத்தலத்தில் உள்ள சுவாமிகள் ராமேஸ்வரர் ராமலிங்கேசுவரர், ராமநாதர் என்ற பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

    இந்த ஆலயமானது வட மாநில மக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    வடநாட்டவர்கள் காசியில் உள்ள விசுவநாதருக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்து பூஜை செய்து, அங்கிருந்து கங்கை ஜலத்துடன் ராமேஸ்வரம் ராமனாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து, தங்கள் யாத்திரையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.

    அதேபோல் தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு செல்ல இருப்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்திற்கு சென்று,

    இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதுடன் இங்கிருந்து மணல் எடுத்து அதற்கு பூஜை செய்து அதை எடுத்துக் கொண்டு போய் பிரயாகை திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் போட்டுவிட்டு,

    காசி விசுவநாதரை தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து கங்கை ஜலத்தை கொணர்ந்து ராமநாதசுவாமி அபிஷேகம் செய்து வழிபடுவதுடன் தங்களுடைய காசி, ராமேஸ்வரம் யாத்திரையை பூர்த்தி செய்வர்.

    இதன்மூலம் இவ்வூரின் பெருமையால், இது அனைத்திந்ததிய மக்களை ஒன்றாக இணைத்து நமது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இங்கு வந்து இங்குள்ள புனித தீர்த்தங்களில் நீராடி, சர்ப்ப சாந்தி, நாக பிரதிஷ்ட முதலியவை செய்து சுவாமி தரிசனம் செய்தால் மக்கள் செல்வம் ஏற்படும் என்ற நம்பிக்கை நம் மக்களிடம் உண்டு.

    • ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
    • சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்கினர்.

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் தமிழ்நாட்டு மக்களை மட்டுமின்றி, வெளிநாட்டவரையும் கவரத்தக்க வகையில் பண்டைகால திராவிட கலாசாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது.

    ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்த காரணத்தால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி ராமர், ராமேஸ்வரம் வந்து சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குமென்று கூறினார்.

    உடனே, ராமர் ஆஞ்சநேயரிடம் கைலாச பர்வதத்திற்கு சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

    அதன்படி ஆஞ்சநேயர் கைலாச பர்வதத்திற்கு சென்றார்.

    லிங்கத்தை கொண்டு வர சற்று தாமதமானதும் சீதாபிராட்டி விளையாட்டாக மண்ணை கையில் பிடித்து சிவலிங்கம் ஒன்றை செய்தார்.

    குறித்த ஒரு லக்கின நேரத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய தாமதம் ஆகலாம்.

    ஆஞ்சநேயர் வருவதற்குள் செய்ய வேண்டி இருந்த காரணத்தால் சீதாதேவி மணலால் பிடித்து வைத்திருந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜையை தொடங்க,

    அகத்திய முனிவர் குறித்த நல்ல நேரம் முடிவதற்குள் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார்.

    பிறகு கொண்டு வந்த ஆஞ்சநேயர் தான் வருவதற்குள் இங்கு மணலால் லிங்கத்தை பூஜை செய்வதைக் கண்ட அவர் கோபமுற்று அது விஷயமாக கேட்க

    ஸ்ரீராமபிரானானவர் அந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீ கொண்டு வந்த லிங்கத்தை வை என்று உத்தரவிட்டார்.

    அதைக்கேட்ட அனுமன் தன் வாலினால் சுழற்றி அந்த லிங்கத்தை அகற்ற முயற்சி செய்து, அம்முயற்சியில் தோல்வியுற்று, தன் வால் அறுந்து விழுந்து மயக்கமடைந்தார்.

    பின்னர் ராமபிரானாரால் எழுப்பப்பட்டு, அனுமன் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கே முதலில் பூஜை செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

    பின்னர் தாங்கள் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜை நடைபெறும் என்று சொன்னார்.

    இவ்வாறு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் அன்று முதல் ராமனால் உண்டாக்கப்பட்ட ஈசனை உடைய ஊர் என்ற பொருள் கொண்ட ராமேஸ்வரம் என்ற பெயர் பெற்றது.

    • குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.
    • அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.

    ஆஞ்சநேயப் பெருமான் வலிமை முழுவதும் அவருடைய வாலில் இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    இதற்கு ஒரு வரலாறு உள்ளது.

    பீமர் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார்.

    குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது. அதை நகர்த்த குரங்கைக் கேட்டார்.

    படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுகோளை வேகமாகச் சொல்லிக் கோபப்பட்டார்.

    உடனே அனுமார் "வயோதிகத்தினால் என்னால் என் வாலை நகர்த்த முடியவில்லை.

    நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு" என்று சொன்னார்.

    பீமர் வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார். பலமுறை முயன்றும் முடியவில்லை.

    அப்போது ஆஞ்சநேயர் தான் வாயு புத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத்தானே நகர்த்தி பீமன் போவதற்கு வழிகொடுத்து வாழ்த்தினார்.

    தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் அனுமனையும் அனுமன் வாலையும் வணங்கினார்.

    பீமன் ஆஞ்சநேயரைப் பார்த்து உங்கள் வாலின் வலிமையையும் மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து எனக்கு சர்வ சக்திகளையும் மங்களத்தையும் அளித்தீர்களே!

    அதேபோல உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்களத்தையும் கொடுத்து அருள வேண்டும் என்று வணங்கி வரம் அளிக்கக் கேட்டுக் கொண்டார்.

    அப்படியே அனுமாரும் வரம் அளித்தார்.

    இந்த வரலாற்றை ஒட்டியே இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    இந்த வழிபாட்டுச் செயல்முறை வருமாறு:

    அனுமாருடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து தினசரி முதலில் சந்தனப் பொட்டு வைத்து அந்த சந்தனப் பொட்டின் மேல் குங்குமத் திலகம் இட்டு வர வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின் நுனி வரை முடிக்க வேண்டும்.

    அப்படி முடிக்கிற நாளன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி பூஜை செய்ய வேண்டும்.

    அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், ராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும்.

    அப்படி செய்தால் நினைத்த காரியம் பலித்துப் பூரண பலனும், பெரும்பேறும் கைகூடும்.

    • மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.
    • ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.

    ஆஞ்சநேயர் மூலம் நட்சத்திரத்தில் தோன்றியவர் ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க வந்தார்.

    ஆஞ்நேயர் பொதுவாக தினமும் தோட்டத்தில் மலர்ந்த பூக்களைப் பறித்து ராமரை வழிபட்டு பாடல்களைத் தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பார்.

    அன்று தன்னைப் பிடிக்க சனீஸ்வரர் வாசலில் காத்துக் கொண்டிருப்பதைத் தெரிந்து கொண்டார் ஆஞ்நேயர்.

    சனி பகவான் அவர் கடமையைச் செய்ய வந்துள்ளார். செய்யட்டும். நான் எனது கடடையைச் செய்கிறேன் என்று நினைத்தபடியே இருந்தார்.

    மாளிகையை விட்டு வெளியில் செல்லும் போது தனது வாலின் நுனியை மட்டும் நீட்டினார்.

    வெளியில் காத்துக் கொண்டிருந்த சனி பகவான் ஆஞ்சநேயரின் வாலைக் கண்டதும் அவரது வாலில் ஏறி அமர்ந்து இறுக்கிப் பிடித்து கொண்டார்.

    சனி பகவானை விரட்டுவது எப்படி என சிறிது நேரம் யோசித்தார் ஆஞ்சநேயர்.

    ராமபிரானைத் துதிக்கும் போது துள்ளிக் குதித்துக் கொண்டே வழிபட வேண்டும் என முடிவு எடுத்தார்.

    அதன்படியே ஆஞ்சநேயர் குதிக்கத் தொடங்கினார். இதனால் வாலின் நுனியில் இருந்த சனி பகவானுக்கு உடல் வலி எடுத்தது.

    ஆஞ்சநேயர் குதிப்பதை நிறுத்திவிட மாட்டாரா.... என யோசித்த சனி பகவான் உடல் வலி அதிகமாகவே ஆஞ்சநேயரிடம் எப்போது குதிப்பதை நிறுத்துவாய்? என்று கேட்டார்.

    இதைக் கேட்டதும் "சனி பகவானே... ஏழரை வருஷத்திற்கு துள்ளிக் குதித்துக் கொண்டே தான் இருப்பேன்" என்றார்., சனி பகவான் பயந்து போனார்.

    இனிமேலும் ஆஞ்நேயரைப் பிடித்துக் கொண்டிருப்பதால் நமக்கு எந்தப்பயனும் இல்லை என யோசித்த சனி பகவான் ஆஞ்சநேயரை விட்டு விலகி விட முடிவு செய்தார் அதன்படி ஆஞ்சநேயரிடம் சொல்லிவிட்டு வெளியேறினார் சனி பகவான்.

    ஆஞ்சநேயரும் மிகவும் மகிழ்ந்து சனி பகவானிடம் வேண்டுகொள் விடுத்தார்.

    "சனீஸ்வரர்... என்னை விட்டு விலகியது போல் ஏழரை ஆண்டு சனி பிடிக்கும் போது உன்னிடமிருந்து விலக வேண்டும் என நினைத்து என்னை வழிபடும் என் பக்தர்களுக்கு எந்தத் தொந்தரவையும், சங்கடத்தையும் நீ கொடுக்கக்கூடாது" எனக் கேட்டுக் கொண்டார்.

    சனி பகவான் சம்மதித்தார் எனவே ஏழரை சனி, அஷ்டம சனியின் போது நமது துயரங்கள் விலக ஆஞ்சநேயரை வழிபட்டால் பக்தர்கள் சனி பகவானிடமிருந்து விடை பெறுவதற்கு ஆஞ்சநேயர் துணைபுரிவார்.

    • மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.
    • பொருளாதார மேன்மை உண்டாகும்.

    ஹனுமன் முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹமுகம், ஹக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.

    கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி" என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும்.

    தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம்.

    மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

    வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது.

    பொருளாதார மேன்மை உண்டாகும்.

    மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம்.

    இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர்

    சொல்லின் செல்வன் என சீதையால் போற்றப்பட்ட அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல் வன்மை, ஆரோக்யம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர் திருநள்ளார் நள தீர்த்தத்தில் இருந்து வரும் வழியில் அருள் தருகின்றார்.

    • அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.
    • வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.

    மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என உள்ள பஞ்சபூத அம்சங்கள் ஒன்றுடன் ஒன்று ஒடுங்குவது, ஆனால் இவ்வனைத்தும் சிவனில் ஒடுங்குவதால் வாயு அம்சமான அனுமன் சிவனின் அம்சமாகவே அருள் தருகின்றார்.

    அனுமனின் பெயர்கள்

    பாவங்களில் இருந்து விடுதலை செய்பவர் என பொருள் படும் "பவமானர்" என்றும், கவிகளின் அரசன் என்ற பொருளில் "கபீஷர்" என்றும் வேதங்களில் அனுமனுக்கு இரு பெயர் உள்ளது.

    மேலும் ராமபக்தர், வாயுபுத்திரர், அஞ்சனை மைந்தர் ஆஞ்சனேயர், ஹனுமான் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார் அனுமன்.

    அனுமன் தாடை நீண்டவர்

    அனுமன் என்றால் தாடை நீண்டவர் என பொருள்படும்.

    ஒரு முறை சூரியனைப் பார்த்து விண்ணில் தெரியும் கனி என நினைத்து ஆகாயத்தில் சூரியனை பிடிக்க தாவிப் பறந்து செல்கிறார் வாயு புத்திரன்.

    அப்பொழுது தேவலோகத்திற்குள் வரும் இவரை இந்திரன் இந்திராயுதத்தால் தடுக்கும் போது தாடையில் பட்டு தாடை நீண்டு விடுகிறது.

    எனவே அன்று முதல் ஹனுமன் என்றழைக்கப்பட்டார். எனவே அனுமனின் தாடை நீண்டு இருக்கும்.

    • சுவாமி சந்நதி அருகில் உள்ள தூணில் உள்ள ஆஞ்சநேயர் வளர்ந்து கொண்டே வருகின்றார்.
    • உடுமலை சீனிவாச ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் கருணையுள்ளவர்.

    சென்னை நங்கநல்லூர், ஆதி வியாதிஹரஆஞ்சநேயர் கோவில், சுசீந்திரம், நாமக்கல்லில் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில், திருக்கடையூர் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவில்,

    செம்பட்டி நிலக்கோட்டை வழியில் அனைப்பட்டியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்,

    சின்னாளப்பட்டி அருகில் மேட்டுப்பட்டியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்,

    தாராபுரம் காடுஅனுமந்தராய சுவாமி கோவில், புதுச்சேரி நலன்குளம் அருகில் அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் அனுமனின் அனுக்கிரகங்களை அள்ளித் தரும் ஆலயங்கள்.

    முடிந்த மட்டும் இவ்வாலயலங்களுக்கு சென்று வர மேன்மை உண்டாகும்.

    அனைத்து பெருமாள், ராமர் கோவில்களிலும் எழுந்தருளும் ஆஞ்சநேயரை இந்நாளில் வழிபட அனைத்து யோகமும் கிடைக்கும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுவாமி சந்நதி அருகில் உள்ள தூணில் உள்ள ஆஞ்சநேயர் வளர்ந்து கொண்டே வருகின்றார்.

    எனவே மீனாட்சி கோவில் சென்றால் இவரை வணங்காமல் வந்துவிடாதீர்கள்.

    இவரை வணங்க உங்கள் வம்சமும் வளர்ந்து வரும்.

    கோவை பீளமேடு அஷ்டபுஜ ஆஞ்சநேயர் கோவில் மிகவும் சிறப்பு பெற்றது.

    இங்குள்ள ஆஞ்சநேயர் சிரசில் சிவலிங்கம், நாகம், சாலிகிராமம் உள்ளன.

    உடுமலை சீனிவாச ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் மிகவும் கருணையுள்ளவர்.

    • ஆஞ்சநேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து மகிழலாம்.
    • ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார்.

    ஆஞ்சனேயருக்கு பழவர்க்கங்கள் மிகவும் பிரீத்தி என்பதால் வீட்டில் ஆஞ்ச நேயர் படம் வைத்து நான்கு புறத்திலும் பந்தல் போல் செய்து,

    பந்தலில் பூச்சரம் ஒரு வரிசையும், பழச்சரம் ஒரு வரிசையுமாக கட்டி பழப்பந்தல், பூப்பந்தல் அலங்கரிக்க வேண்டும்.

    வடை, வெண்ணெய் வைத்து நெய் தீபம் ஏற்றி ராமாயணத்தின் சுந்தரகாண்டம்,

    ஆஞ்சநேய தண்டகம், ஸ்ரீ அனுமத்துதி (சாம்பவான் புகழ்தல்) ஸ்ரீஆஞ்சநேயர் திருப்பதிகம், மாருதி கவசம்,

    ஸ்ரீஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ஆஞ்சநேயர் போற்றி வழிபாடு, ஆஞ்சநேயர் சத நாமா வழி,

    ஆஞ்சநேயர் சகஸ்ர நாமா வழி போன்றவற்றை வீட்டில் படித்து பூஜை செய்து

    அருகில் உள்ளவர்களுக்கு பிரசாதமாக தந்து மகிழலாம்.

    இத்தனை வகையும் தெரியாதே என யோசிக்க வேண்டாம், ராமா, ராமா எனும் ராம நாமம் ஜெபித்தாலே ஆஞ்நேயர் அருகில் வந்து அருள் தருவார்.

    உங்கள் குழந்தைகளுக்கு ஆஞ்சநேயரின் பராக்கிரமங்களை இன்று சொல்லி வையுங்கள் பயமின்றி படிப்பார்கள்.

    • புத்திர பாக்கியம் கிட்டும்.
    • குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும்

    கடன் அகலும், வறுமை நீங்கும், பயம் அடியோடு ஓடும், கவலைகள் நீங்கும், திருமணத் தடை அகலும்,

    நாகதோஷம், பில்லி, சூனியம் விலகும், தொழில் மேன்மை உண்டாகும்.

    குழந்தைகள் இரவில் பயத்தினால் அலறுவது அகலும், பாயில் மற்றும் படுக்கையில் சிறுநீர் கழிவது நிற்கும்.

    புத்திர பாக்கியம் கிட்டும்,  வேண்டுவது எல்லாம் கிடைத்து உன்னத நிலை அடைவீர்கள்.

    வெளித் தொடர்புகள், நட்பின் மேன்மை உண்டாகும். வேண்டுவன அனைத்தும் பெற்று வெற்றியாளராக உலாவருவீர்கள்.

    எனவே சர்வ வல்லமை படைத்த ஆஞ்சநேயரை தரிசித்து நலம் பெறுங்கள்

    • துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது.
    • ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம்.

    துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது.

    நோய்களை விரட்டும் ஆற்றல் பெற்றது.

    ஆகவே துளசி இலைகளை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு சாற்றி வணங்குகிறோம்.

    பழமாலை வழிபாடு

    பழங்களை மாலையாக தொடுத்து சாற்றி வணங்குவதும் சிறப்பான வழிபாடாகும்.

    எலுமிச்சம்பழம், வாழைப்பழம், கொய்யாப்பழம், அன்னாசிப்பழம் மற்றும் பழங்களின் மாலை சாற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.

    படங்கள் வழிபாடு

    ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம்.

    வேண்டுதல்களைச் சமர்ப்பிக்கலாம். இது ஆத்ம திருப்தியுடன் கூடிய ஆற்றல்களைத் தரும்.

    வெற்றிலை மாலை வழிபாடு

    சீதாவை அனுமார் அசோக வனத்தில் சந்தித்த போது வெற்றிலையை எடுத்து அவருடைய தலை உச்சியில் வைத்து "சிரஞ்சீவியாக வாழ்வாயாக" என்று சீதா பிராட்டியார் ஆசீர்வதித்தார்.

    ஆகவே வெற்றிலைய ஆஞ்சநேயர் மிகவும் விரும்பும் பொருளாயிற்று ஆகவே வெற்றிலை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம்.

    ராமநாத உச்சரிப்பு வழிபாடு

    ராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம்.

    ஆகவே ராமநாம பஜனை செய்து வழிபடுவது நல்ல பலன்களை தரும்.

    ×