search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்தி"

    • ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.
    • மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும்.

    சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும்.

    ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு.

    ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும்.

    ஜன்ம லக்னத்திற்கு 5-ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும்.

    புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸதானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது.

    இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியை செய்து கொள்ள நன்மை உண்டாகும்.

    மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும்.

    மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.

    • கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.
    • ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    கால சர்ப்ப தோஷம் மற்ற தோஷங்களைப் போலவே ஜாதகத்தின் லக்கினம், பூர்வ புண்ணியம்

    ஜெனன காலத்தின் மற்றைய கிரக நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே, தீய பலன்களை விளைவிக்கும்.

    ஆதலால், கால சர்ப்ப தோஷம் உள்பட அனைத்து தோஷங்களையும், அவற்றின் தன்மை, அளவு, ஏற்படும் காலம்

    இவற்றைத் தக்க ஜோதிடரைக் கொண்டு ஆராய்ந்து, அறிந்து கொள்ளாமல் கலங்க வேண்டிய அவசியமில்லை.

    பாதிப்பின் கடுமையைத் தக்க பரிகாரத்தினால் குறைக்க முடியும்.

    ஆயினும் அந்தப் பரிகாரத்தை, சாந்தியை அதிகப் பொருட் செலவில் தான் செய்ய வேண்டும் என்பதில்லை.

    சாதாரணமாக, சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம்,

    ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும்.

    ஆனால் கால சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும்.

    இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில்,

    சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த

    புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் பரிகார சேஷ்த்திரங்களில் ஒன்றாகும்.

    சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால்

    பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும்

    கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது.

    "ஆனந்த ப்ரதம்ம ரூபம் திரேதாயோம் பலபத்ரச்ச கலியுகே கசதி பவிஷ்யதி" - ஸ்ரீவிஷ்ணுபுராண ஸ்லோகம்.

    ஸ்ரீஆதிசேஷனே, ஸ்ரீராமனுஜராக அவதரித்தது உலகறிந்த உண்மையாகும்.

    ஆகவே, ராகு, கேதுவினால் உண்டாகும் கால சர்ப்ப தோஷம் மற்றும் இதர நாக சர்ப்ப தோஷங்களுக்கும்

    ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமானுஜர் தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால்

    அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும். (ஆதிசேஷனுக்கு அனந்த சர்ப்ப என்ற பெயர் உண்டு).

    இந்தத் திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீராமானுஜரையும், ஸ்ரீ ஆதிகேசவன், யதிராஜநாதவல்லித் தாயாரையும் தரிசிப்பது, கால சர்ப்ப தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.

    • கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம்.
    • பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.

    கேது பகவானுக்கு ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தலாம்.

    அப்போது 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை

    நைவேத்யாமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபட வேண்டும்.

    கொள்ளு சாத பிரசாதத்தை கோவிலிலேயே வினியோகித்து விட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது.

    சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் கேதுவை வழிபடுவது விசேஷம்.

    தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்சனை, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக் கொள்ளலாம்.

    • வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.
    • கேது ஞானம், மோட்சம் தருபவர்.

    ராகுவின் உடல் பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது.

    கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும்.

    கேது ஞானம், மோட்சம் தருபவர்.

    ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு,

    வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.

    கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி,

    பல வண்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும்.

    வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.

    • ராகு கால பௌர்ணமி பூஜை பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
    • ராகு கால ஏகாதசி பூஜை பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.

    கிரக சர்ப்ப சாந்தி

    பாம்பினை அடிப்பதால் வரும் தோசம் மற்றும் முன்னோர்களினால் வந்த நாக தோசம் நீங்க செம்பு அல்லது

    வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்ய வேண்டும்.

    பிறகு அதை வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதில் வைத்து ஓடுகின்ற தண்ணீரில் போட வேண்டும்.

    அன்று குறைந்தது 5 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.

    1. ராகு கால பௌர்ணமி பூஜை பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.

    2. ராகு கால கிருத்திகை பூஜை புகழ் தரும்.

    3. ராகு கால சஷ்டி பூஜை புத்திரப்பேறு கிடைக்கும்.

    4. ராகு கால ஏகாதசி பூஜை பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.

    5. ராகு கால சதுர்த்தி பூஜை துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.

    எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து

    தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

    • இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பை சூடியிருந்தனர்.
    • அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு.

    பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர்.

    இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர்.

    இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பை சூடியிருந்தனர்.

    கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர்.

    இதே போன்று நாகலோகம் என்ற ஒன்று இருந்ததாகவும், அங்கு நாகங்களின் தலைவன் நாகராஜன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

    கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி.

    அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார்.

    அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு.

    இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது.

    இவ்வாறு நாக வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது.

    • பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன.
    • அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன.

    தமிழ்நாட்டிலும் நாக வழிபாடு புகழ் பெற்றது.

    பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன.

    நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர்

    போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன.

    அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன.

    நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம்,

    பாம்பணி, காலத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை.

    பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது.

    நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன்,

    நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை.

    கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.

    • மலட்டுத் தன்மை நீங்கி மக்கட்பேறு உண்டாகும்.
    • இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை நாக வழிபாடு இருந்து வருகிறது.

    நாக வழிபாடு கீழ்கண்ட நன்மைகளைத் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

    1. மலட்டுத் தன்மை நீங்கி மக்கட்பேறு உண்டாகும்.

    2. வாழ்வில் வளம் பெருகும்.

    3. நோய்கள் குணமாகும்.

    4. இறந்த பின்பு உறவினர்களும், அரசர்களும் பாம்பாக மறுபிறவி எடுப்பார்கள்.

    5. முன்னோர்கள் பலவித வியாதிகளை உண்டாக்குவார்கள். அதிலிருந்து விடுபட நாக வழிபாடு அவசியம்.

    இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை நாக வழிபாடு இருந்து வருகிறது.

    குறிப்பாகத் தென் இந்தியாவில் நாக வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைந்தே நடைபெறுகிறது.

    • நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர்.
    • நாக வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது.

    முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை

    பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான்.

    இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன.

    இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.

    நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர்.

    நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர்.

    இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது.

    முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும்,

    விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.

    நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் பாம்பு வழிபாட்டிற்கு எனத் தனி முக்கியத்துவம் ஏற்பட்டது.

    அன்று முதல் இன்று வரை நாக வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நாக வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது.

    பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் நாக வழிபாடு இருந்து வருகிறது.

    இந்த போற்றியை சொல்லி முருகனை வழிபட துன்பங்கள் யாவும் விலகும்.

    ஓம் அழகா போற்றி

    ஓம் அறிவே போற்றி

    ஓம் அரன் மகனே போற்றி

    ஓம் அயன்மால் மருகா போற்றி

    ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

    ஓம் முக்தி அருளும் முருகா போற்றி

    ஓம் பன்னிருகை வேலவா போற்றி

    ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

    ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி

    ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

    ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

    ஓம் இடர் களைவோனே போற்றி

    ஓம் உமையவள் மகனே போற்றி

    ஓம் உலக நாயகனே போற்றி

    ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

    ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

    ஓம் ஓம்கார சொருபனே போற்றி

    ஓம் மூலப்பொருளே குகனே போற்றி

    ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி

    ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி

    ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி

    ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி

    ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி

    ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி

    ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி

    ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

    ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி

    ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

    ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி

    ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி

    ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

    ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

    ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி

    ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி

    ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி

    ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி

    ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி

    ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

    ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி

    ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

    ஓம் கருணாகரனே போற்றி

    ஓம் கதிர் வேலவனே போற்றி

    ஓம் மூலப்பொருளே முருகா போற்றி

    ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

    ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

    ஓம் அறுபடை விடுடையவா போற்றி

    ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

    ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி

    ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி

    ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி

    ஓம் மகா சேனனே போற்றி

    ஓம் மயில் வாகனனே போற்றி

    ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி

    ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி

    ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி

    ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி

    ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி

    ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி

    ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி

    ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி

    ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி

    ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி

    ஓம் கலியுக வரதா கந்தா போற்றி

    ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

    ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி

    ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி

    ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி

    ஓம் சரவணபவ சண்முகா போற்றி

    ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி

    ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி

    ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி

    ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி

    ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி

    ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி

    ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி

    ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

    ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி

    ஓம் யோக சித்தியே அழகே போற்றி

    ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி

    ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி

    ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி

    ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி

    ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி

    ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

    ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி

    ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி

    ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி

    ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

    ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி

    ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி

    ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி

    ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

    ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி

    ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி

    ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி

    ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

    ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி

    ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி

    ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி

    ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி

    ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி

    ஓம் அருமையின் எளிய அழகே போற்றி

    ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி

    ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி

    ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி

    ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி

    ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி

    ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி

    • யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
    • மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

    1. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்" என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

    2. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

    3. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.

    4. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள்

    தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர்.

    இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

    5. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

    6. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

    7. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும்.

    பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

    8. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம்,

    குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

    9. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

    10. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

    11. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

    12. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

    13. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்கு சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

    14. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.

    விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

    15. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு.

    இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

    16. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

    17. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன்,

    பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.

    18. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே

    துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோவிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

    19. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா,

    மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

    20. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

    • கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.
    • வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

    1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர்,

    6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர்,

    13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும்.

    2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

    3. முருகனைப் பூஜிப்பதில் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி.

    இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது.

    (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

    4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

    1. சூரபத்மனை வதம் செய் தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,

    3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

    5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது.

    சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப் பள்ளம் ஏற்பட்டது.

    6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும்.

    இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

    7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம்,

    அங்குசம், அம்பு, வேல்என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில்

    வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

    8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது.

    அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார்.

    வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

    9. முருகன் இறைபணி செல்வர்கள்: 1. அகத்தியர், 2. அருணகிரி நாதர், 3. ஒளவையார், 4. பாம்பன் சுவாமிகள்,

    5. அப்பர் அடிகளார்,6. நக்கீரர், 7. முசுகுந்தர், 8. சிகண்டி முனிவர், 9. குணசீலர், 10. முருகம்மையார்,

    11. திருமுருக கிருபானந்த வாரியார், 12. வள்ளிமலைச் சுவாமிகள், 13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.

    10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது.

    இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

    11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும்

    முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

    12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

    13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

    14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான்.

    சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான்.

    கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்" என்றும்

    சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

    15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

    16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி,

    கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி,

    பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன்,

    குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

    17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்" நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

    18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்" என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

    19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

    20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

    ×