என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தி"
- இங்கே சஞ்சீவி மற்றும் இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.
- ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.
இரும்பை தங்கமாக்கும் மூலிகை
அண்ணாமலைச் சாரலில் எண்ணற்ற மூலிகைச் செடிகள் செழித்து வளர்கின்றன.
மனிதனின் அத்தனை பிணிகளுக்கும் அவை அருமருந்தாய் அமையும்.
இங்கே சஞ்சீவி மூலிகை இருக்கலாம். இரும்பைப் பொன்னாக்கும் ரசமாக்கும் மூலிகை இருக்கலாம்.
ஆனால் அவை எல்லாம் போதிய மனப்பக்குவம் உள்ளவருக்கே காணக்கிடைப்பதாகும்.
கிரிவலம் வரும்போது நாம் மூலிகைக் காற்றை சுவாசிக்க முடியும்.
அது நம் உடம்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
மலைக்குள் இயங்கும் மர்ம உலகம்
அண்ணாமலை முழுவதும் கருங்கல் வடிவமல்ல, மலைக்குள் பிரும்மலோகம் உள்ளதென்பது ஐதீகம்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலையில் ஒரு இரவு முழுவதும் தியானித்திருந்த சுஜாதாசென் என்கிற ஆங்கிலேய பெண்,
மலைக்குள் ஒரு பெரிய உலகத்தையே தாம் கண்டதாகக் கூறி இருக்கிறார்.
அப்போது இதனை யாரும் நம்பவில்லை.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எஸ்.என்.டாண்டன் என்பவருக்கு பல அற்புதக் காட்சிகள் காணக் கிடைத்தன.
அவர் தாம் கண்டதாகக் கூறிய பலவும் ஆங்கில அம்மையார் கண்டவற்றை ஒத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- மலையின் உள்ளிருந்து செந்நிற ஜோதிக்கிரணங்கள் அவ்வப்போது வெளிப்படும்.
- ஒரு விநாயகருக்கு 'தலை திருக தனம் கொடுத்த விநாயகர்' என்று பெயர்.
மலையின் உள்ளிருந்து செந்நிற ஜோதிக்கிரணங்கள் அவ்வப்போது வெளிப்படும்.
அது மலை சுற்றும் பக்தர்கள் மீது படிந்தால் இகலோக சுகத்திற்கான அருளையும், பரலோக பாக்கியத்தையும் அளிக்கும்.
பவுர்ணமியன்று வலம் வருவது சிறப்பு.
ஆண்டுக்கொரு முறை பவுர்ணமி நாளில் தட்சிணாமூர்த்தியே மலை வலம் வருகிறார்.
எத்தகைய பாவியும், தீப நாளில் ஐந்து முறை மலை சுற்றினால் அவனுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விசித்திர விநாயகர்
மலை சுற்றுப்பாதையில் நிறையவே விநாயகர் கோவில்கள் (தனித்தனியே பதினாறு), முருகன் சன்னதிகள் (ஏழு) உள்ளன.
ஒரு விநாயகருக்கு 'தலை திருக தனம் கொடுத்த விநாயகர்' என்று பெயர்.
மலைச்சுற்று பாதையில் தட்சிணாமூர்த்தி கோவில்கள் இரண்டு, பாதமண்டபங்கள் இரண்டு, நந்தி தேவர் மண்டபங்கள் எட்டு, சிவாலயங்கள் எட்டு உள்ளன.
இவை தவிர துர்க்கையம்மன் கோவில், வடவீதி சுப்பிரமணியர் கோவில், அனுமன் கோவில்,
பூத நாராயணன் கோவில், வீரபத்ரர் கோவில், முனீஸ்வரர் கோவில், நவக்கிரக கோவில் ஆகியனவும் உள்ளன.
- கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
- இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் பெறலாம்.
இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அருள்மிகு அபீதகுசாம்பாள்
வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள்.
இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.
வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும்,
கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அவ்வபோது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற
வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு, அம்மனின் பரிபூரண அருளை பெற்று வருவதாக நம்பப்படுகிறது.
காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து
ஸ்ரீ சக்கரத்தினை அபீதகுசாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்.
வியாபாரத்திலும், தொழிலிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத்திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.
இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்பாடும்,
குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலியனவற்றையும் பெறலாம்.
- இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
- சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.
அண்ணாமலையார் ஆலயம் எத்தனையோ ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் கொண்டது.
இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் தனித்துவம் கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.
இந்த ஆலயத்துக்கு 7 பரிகாரங்கள் உள்ளன.
9 பெரிய கோபுரங்கள் உள்ளன.
40க்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைந்துள்ளன.
இதில் 4 விநாயகர் சன்னதிகளும், 4 முருகர் சன்னதிகளும் அடங்கும்.
சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன.
2ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் உள்ளன.
2ம் பிரகாரத்தில் திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களை காணலாம்.
- இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.
- இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம்.
ஆலயங்களில் அம்பாள் சன்னதி முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நந்தி உள்ளது.
அம்பாளுக்குரிய சிம்மம் அங்கு இல்லை.
ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள்.
அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்து விட்டார்.
இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.
பிரமாண்டமான மணிகள்
திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3 மணிகள் உள்ளன.
அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது.
மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம்.
இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
- மலையே ஓர் அழகான நந்தி வடிவமாகத் தோன்றுவது கண்கொள்ளாக் காட்சி.
- இது மலை நந்தி என்றால், கிரிவலப் பாதையில் நிறைய சிலை நந்திகளும் உண்டு.
கிரிவலத்தின் தொடக்கத்தில், அதாவது அருணாசலேஸ்வரர் ஆலயப் பகுதியில் மலை ஒன்றாகத் தெரியும்.
பின்னர் அந்தப் பாதையின் வெவ்வேறு இடங்களில் இரண்டாக, மூன்றாகத் தெரியும்,
நிறைவாகக் கிரிவலத்தைப் பூர்த்தி செய்யும் நேரத்தில் ஐந்தாகத் தெரியும்.
உதாரணமாக, கவுதம ஆசிரமம் எதிரே மலை மூன்று பிரிவுகளாகத் தெரியும்.
பக்தர்கள் இதனைத் திரிமூர்த்தி தரிசனம் என்று அழைக்கிறார்கள்.
கிரிவலம் வருகிறவர்கள் இங்கே விழுந்து கும்பிடுகிற வழக்கம் உள்ளது.
அதேபோல், நிருதி லிங்கத்திலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது நந்தி முக தரிசனம் என்ற இடம்.
இங்கே அறிவிப்புப் பலகை உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கவனித்தால்,
மலையே ஓர் அழகான நந்தி வடிவமாகத் தோன்றுவது கண்கொள்ளாக் காட்சி.
இது மலை நந்தி என்றால், கிரிவலப் பாதையில் நிறைய சிலை நந்திகளும் உண்டு.
அஷ்ட லிங்கங்கள், சூரிய, சந்திர லிங்கங்களுக்கு எதிரே உள்ள நந்திகளைத் தவிர,
மலையே சிவம் என்பதால் அதனைப் பார்த்தபடி ஆங்காங்கே நந்தி வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
- அந்த இடுக்கை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் இதற்குள் நுழையவே முடியாது என்றுதான் தோன்றும்.
- நரம்புக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் விலகிவிடும்.
இடைக்காட்டுச் சித்தர் கிரிவல பாதையில் உள்ள ஒரு மண்டபத்தில் மூன்று யந்திரங்களைப் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இவற்றை நாம் நெருங்கினாலே போதும், யந்திரங்களின் ஆகர்ஷண சக்தி நம்மீது பரவ,
நம் உடலில் உள்ள நரம்புக் கோளாறுகள், ஒற்றைத் தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் விலகிவிடும் என்கிறார்கள்.
ஆனால் ஒரே ஒரு பிரச்சினை, சித்தர் பிரதிஷ்டை செய்த அந்த யந்திரங்களின் மீது ஒரு சிறிய கோபுரம் உள்ளது.
அதற்குள் நாம் நுழைந்து வரவேண்டும்.
அந்த இடுக்கை மேலோட்டமாகப் பார்த்தால், நாம் இதற்குள் நுழையவே முடியாது என்றுதான் தோன்றும்.
ஆனால் ஒருக்களித்துப் படுத்த நிலையில் இடுக்கின் ஒருபுறமாகத் தலையையும் ஒரு கையையும் உள்ளே நுழைக்க வேண்டும்.
பின்னர் மறுபுறமிருந்து உந்தித் தள்ளி வெளியே வரவேண்டும்.
வயிற்றுப் பகுதியில் லேசாக அழுத்தும், அவ்வளவுதான்! அடுத்த பக்கம் வந்து விடலாம்.
- திருவண்ணாமலை மலை மீது ஏராளமான ரகசிய குகைகள் இருக்கின்றன.
- அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு தடவைதான் வெளியில் வருவார்.
திருவண்ணாமலை மலை மீது ஏராளமான ரகசிய குகைகள் இருக்கின்றன.
அந்த குகைகளில் அரூப நிலையில் சித்தர்கள் தவம் இருந்து வருகிறார்கள்.
பிராப்தம் உள்ளவர்களுக்கு அவர்களது காட்சி கிடைக்குமாம்.
நேர் வாசலில் வர மாட்டார்
அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு தடவைதான் வெளியில் வருவார்.
ஆனால் ராஜகோபுரம் வழியாக அவர் வெளியில் வர மாட்டார்.
பக்கத்தில் உள்ள மற்றொரு வாசல் வழியாகத்தான் அவர் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது.
- கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம்.
- ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம் எனப்பட்டது.
இந்திரலிங்கம்:
கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம்.
கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது.
கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன்.
இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அக்னி லிங்கம்:
இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது.
தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன்.
இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும்.
எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.
எமலிங்கம்:
கிரிவலப் பாதையில் 3வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது.
தெற்கு திசையின் அதிபதி செவ்வாய்.
இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
நிருதி லிங்கம்:
மலை சுற்றும் பாதையில் 4வது லிங்கமாகும்.
நிருதி லிங்கத்தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும்.
இத்திசைக்கு அதிபதி ராகு.
இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலையும் கிடைக்கும்.
வருண லிங்கம்:
ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது.
மேற்கு திசையின் அதிபதி சனி.
இங்கு வழிபட்டால் கொடிய நோயிலிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
வாயு லிங்கம்:
இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும்.
காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது.
இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, மன அமைதி, கண் திருஷ்டி நீங்குதல், பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
குபேர லிங்கம்:
7வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு.
இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும்.
மனம் அமைதி அடையும்.
ஈசான்ய லிங்கம்:
கிரிவலப் பாதையில் கடைசி லிங்கம் இது.
ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம் எனப்பட்டது.
எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடமாகும்.
இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன்.
இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும்.
இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.
- திருவண்ணாமலை மலை மீது வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆல மரம் உள்ளது.
- ரமண மகிரிஷிக்கு ஒரு முறை, அந்த ஆலமரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
திருவண்ணாமலை மலை மீது வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆல மரம் உள்ளது.
அங்கு அருணாசலேஸ்வரரே ஆழ்ந்த தவத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது இறைவனை நோக்கி இறைவனே தவம் இருக்கும் அதிசயம் இத்தலத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
ரமண மகிரிஷிக்கு ஒரு தடவை, அந்த ஆலமரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
உடனே அவர் வட சிகரத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட பகுதிக்கு சென்றார்.
அப்போது நிறைய குளவிகள் கொட்டி அவரை விரட்டி விட்டன.
இதனால் ரமணர் அந்த ஆல மரத்தை பார்க்க இயலாமல் திரும்பினார்.
யாராலும் பார்க்க முடியாதபடி அந்த மரம் உள்ளதாம்.
அங்கே நிறைய சித்தர்கள் இப்போதும் தவம் புரிவதாக ரமணர் குறிப்பிட்டுள்ளார்.
- அக்னிமுக தரிசனம் என்ற ஒரு பகுதியும் கிரிவலப்பாதையில் உண்டு.
- இங்கு கிரிவலம் வருகையில் அவர்களுக்கு இது அக்னி மலையாகவே காட்சி தரும்.
கிருத யுகத்தில் இருந்து இன்னும் வாழ்ந்து கொண்டிக்கின்ற மகான்கள், ரிஷிகள், தேவர்கள்,கந்தர்வர்கள் போன்றோர்
இங்கு கிரிவலம் வருகையில் அவர்களுக்கு இது அக்னி மலையாகவே காட்சி தரும்.
அதே போல் திரேதா யுக வாசிகள் இங்கு வந்தால் அவர்களுக்கு இது இன்னமும் மாணிக்க மலையாகவே காட்சி அளிக்கும்.
துவாரா யுக வாசிகளுக்கு இம்மலை பொன்மலையாகவே காட்சி தரும், ஏன் மரகத மலை, வைரமலை, சித்ர மலை, ரஜத மலை, வைடூரிய மலையாகவும் காட்சித்தரும்.
அக்னிமுக தரிசனம்
அக்னிமுக தரிசனம் என்ற ஒரு பகுதியும் கிரிவலப்பாதையில் உண்டு.
இங்கு ஹோம வழிபாட்டை மேற்கொள்வோருக்குக் கிட்டும் பலாபலன்களோ சொல்லிலோ, பொருளிலோ அடங்காத மகத்துவத்தைக் கொண்டதாகும்.
ஸ்ரீ பிரம்மமூர்த்தி தனக்குரிய வேள்விகளை இப்பகுதியில்தான் இன்றைக்கும் நிகழ்த்துகின்றார்.
சூரிய பகவானும், தனக்குரிய அக்னி சக்தியை இப்பகுதியிலிருந்து தினமும் தனக்கெனப் பெற்றுக் கொள்கின்றார்.
அஷ்டதிக்கு லிங்கங்களில் ஸ்ரீஅக்னி லிங்க சன்னதியில் கார்த்திகை நட்சத்திரம் தோறும்,
அக்னி பகவானுக்கு உரித்தான செவ்வாய் ஹோரையில் ஹோம வழிபாட்டை மேற்கொள்வோருக்குப் பலவிதமான அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
- திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.
- அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.
திருவண்ணாமலையில் கவுரி வனம் என்றொரு வனம் உள்ளது.
அந்த இடம் பார்வதி தேவி தவம் இருந்த இடமாகும்.
அந்த இடத்துக்கு செல்பவர்கள் நினைவிழந்து விடுவார்கள்.
வந்த வழி தெரியாமல் மலையில் தவிக்க நேரிடும் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ரமணரின் பக்தர்களில் ஒருவரான ஹம்பரீஸ் என்பவருக்கு அந்த அனுபவம் ஏற்பட்டது.
கடைசியில் அவர் ஒரு விறகு வெட்டி மூலம் மலையில் இருந்து கீழே இறங்கினார்.
தமிழ்நாட்டில் சித்தர்கள் வாழும் எந்த மலையிலும் இப்படி அதிசய வனம் இல்லை.
திருவண்ணாமலையில் மட்டுமே அந்த அதிசய வனம் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்