search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்மீக பேச்சாளர்"

    • கற்க கசடற என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளர் கங்கை மணிமாறன் பேசினார்.
    • நாம் சுதந்திரம் பெற்றதே ஆன்மிகவாதிகளின் அருளாசியோடுதான் என்பதை நினைவு கூற வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கார்த்திகை விழா மன்றம் சார்பில் நவராத்திரி இசை, இலக்கிய கலை விழா நடக்கிறது. விழாவையொட்டி கோவிலில் நாள்தோறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஆன்மிகம் - கற்க கசடற என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளர் கங்கை மணிமாறன் பேசினார்.அவர் பேசியதாவது:-

    பாரத பூமி, பழம்பெரும் பூமி. ஆன்மிக பூமியாகவும் உள்ளது.நாடு சுதந்திரம் பெற்றபோது, மவுண்ட் பேட்டன் கையில் திருவாவடுதுறை ஆதீன இளைய சன்னிதானம் செங்கோலைக்கொடுத்து, ஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தை பாடி அபிஷேக நீர் தெளித்து, பிரதமரை வாங்கச்செய்தார்கள். நாம் சுதந்திரம் பெற்றதே ஆன்மிகவாதிகளின் அருளாசியோடுதான் என்பதை, இன்றைய இளைஞர்கள் நினைவு கூற வேண்டும்.

    பக்தியால், செயல்களில் செம்மை பிறக்கும். சோம்பல் அழியும். மனம் சொன்னபடி உடல் நடக்கும். அல்லல் ஒழியும். கல்வி வளரும். செல்வம் தேடிவரும் என பாரதியார் தெரிவிக்கிறார்.இந்த அனுபவ உரையை இளைஞர் உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். நம் முன்னோர்களின் உபதேச வார்த்தைகள் ஒவ்வொன்றும் அட்சர லட்சம் பெறும் என்னும் அறிவுத்தெளிவை நாம் அடைகாத்தால் அது நம்மை சிகரத்தில் ஏற்றும்.நம்பிக்கை என்னும் நந்தா விளக்கு உள்ள வரையில் உலகம் நமக்கு என்னும் நேர்மறைச் சிந்தனை உரமாக மட்டும் அல்ல,வரமாகவும் நின்று நம்மை வாழ்விக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

    ×