search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார் சைக்கிள்கள்"

    • விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோட ம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    இதேபோல் ஈரோடு சுத்தானந்தா நகரை சேர்ந்த பரத் (27) என்பவர் வேலை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    வெட்டுக்காட்டு வலசு பிரிவு அருகே வந்தபோது பரத் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை ஏறி வந்த போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சசிகுமார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத்திற்கு மூக்கில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • தபால் அலுவலக தெருவில் வசிக்கும் வியாபாரி முருகன் என்பவரது மோட்டார் சைக்கிளும் நள்ளிரவு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோடு துரைச்சாமி நாடார் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார்.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் அந்த பைக்கை தீ வைத்து எரித்து விட்டு ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் தீ பற்றி எரிவதை பார்த்து கூச்சலிட்டனர். மேலும் தீயை அணைக்க முயன்றனர். இருந்தபோதும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமானது.

    இதே போல தபால் அலுவலக தெருவில் வசிக்கும் வியாபாரி முருகன் என்பவரது மோட்டார் சைக்கிளும் நள்ளிரவு தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலையில் அதனை பார்த்த முருகன் அதிர்ச்சியடைந்தார். வெவ்வேறு இடங்களில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து எரியோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அப்பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா? என்றும் தீ வைத்த கும்பலின் உருவம் அதில் பதிவாகியுள்ளதா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்றும் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேடசந்தூரில் ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதே போல் திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியிலும் பா.ஜ.க. நிர்வாகியின் 6 மோட்டார் சைக்கிள்கள், 1 கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. தற்போது எரியோட்டிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×