search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையையொட்டி சீருடை வழங்குவது வழக்கம்."

    • சிவகங்கை மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைச்சர் சீருடைகளை வழங்கினார்.
    • ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையையொட்டி சீருடை வழங்குவது வழக்கம்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர்- திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆண்டு தோறும் தனது தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள ஆட்டோ வாகன ஓட்டுநர்களுக்கு ஆயுதபூஜையையொட்டி சீருடை வழங்குவது வழக்கம்.

    அதன்படி சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் கோட்டையூர் பேரூராட்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கிய சீருடையை சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் கே.ஆர். ஆனந்த் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.சுந்தரம், கோட்டையூர் பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை முன்னிலை வகித்தனர். இதில் கோட்டையூர் பேரூர் செயலாளர் வி.சி.டி.ராசு, மாவட்ட மீனவரணி செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் நகர் செயலாளர் ராமு, கவுன்சிலர் ராமன் சங்கர், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.ஆர். அழகப்பன், மாவட்ட பிரதிநிதி கானாடுகாத்தான் எஸ்.ஆர்.பி. ரமேஷ், ஒன்றிய பொருளாளர் மணசை பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் கோட்டையூர் கே. சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

    ×