என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரூ.1¾லட்சம்"
- மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி மர்ம மனிதர்கள் துணிகரம்
- கொள்ளை நடந்த கடை வீதியில் எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெருவில் ஏராளமான கடைகள் உள்ளன. கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பலரும் இந்தக் கடைகளில் பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். எனவே எப்போதும் கடை வீதி மக்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும்.
இங்கு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பக்ஷாராம் (வயது 45) என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். பல ஆண்டுகளாக கடை நடத்தி வரும் இவர், கன்னியாகுமரி நடுத்தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தற்போது பரிவேட்டை திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கன்னியாகுமரியில் அதிகமாக உள்ளது. இதனால் கடைகளில் விற்பனையும் அதிகமாக உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் பக்ஷாராம் கடையை அடைத்துச் சென்றார்.
இன்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறந்தார். அப்போது உள்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து பக்ஷாராம் அதிர்ச்சி அடைந்தார்.
கடைக்குள் சென்று பார்த்தபோது, மேற்கூரையை பிரித்து மர்ம மனிதர்கள் கடைக்குள் புகுந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வை யிட்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். கடையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக போலீ சாரிடம் பக்ஷாராம் தெரி வித்தார்.
சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. அவற்றை பழைய குற்றவாளிகள் ரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரிவேட்டை திருவிழா நடைபெறும் நேரத்தில், மக்கள் நடமாட்டம் நிறைந்த கடைவீதியில் கடைக்குள் புகுந்து மர்ம மனிதர்கள் கொள்ளையடித்திருப்பது பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்