என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாழைகளை நாசம்"
- காட்டு பன்றிகள் கூட்டம் அவரது விளைநிலங்களில் புகுந்து வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்று அட்டகாசம் செய்துள்ளன.
- வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.
களக்காடு:
களக்காடு தலையணை மலையடிவாரத்தில் உள்ள கள்ளியாறு பகுதியில் களக்காட்டை சேர்ந்த விவசாயி மல்லிகைராஜ்க்கு (வயது40) சொந்தமான விளைநிலங்கள் உள்ளன.
வாழைகள்
இதில் அவர் வாழை, பயிர் செய்துள்ளார். இந்நிலையில் காட்டு பன்றிகள் கூட்டம் அவரது விளைநிலங்களில் புகுந்து வாழைகளை சாய்த்து அதன் குருத்துகளை தின்று அட்டகாசம் செய்துள்ளன.
இதனால் 50-க்கும் மேற்பட்ட வாழைகள் நாசமானது. இந்த வாழைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்தது ஆகும். இதனால் அவருக்கு ஆயிரக்கணக்கன ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் அட்டகாசம்
இப்பகுதியில் ஏற்கனவே ஒற்றை காட்டு யானையும் தென்னை, பனை மரங்களை சாய்த்து வரும் நிலையில் காட்டு பன்றிகளும் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர்.
வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் உயிரை பணயம் வைத்து, கடுமையாக போராடி வருகின்றனர். இதுபற்றி களக்காடு ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முருகன் கூறியதாவது:-
இழப்பீடு
அதிகரித்து வரும் வனவிலங்குகள் அட்ட காசத்தை தடுக்கவும், பயிர்கள் நாசமாகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் பாராமுகமாக உள்ளனர்.
வனவிலங்குகள் அச்சுறுத்தலால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே யானை, காட்டு பன்றிகளை விளைநிலங்களுக்குள் வராமல் விரட்டவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்