என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அபராத"
- மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- இதனால் ெஹல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60-ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது.
சேலம்:
மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு புதிய அபராத தொகை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அபராதம்
அதன்படி போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள், விதிமுறைகள் மீறியவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் விபத்தை குறைக்கும் வகையில் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
சி.சி.டி.வி. காமிரா
மேலும் சி.சி.டி.வி. காமிராக்கள் அமைத்தும் கண்காணித்து வருகின்றனர். இதில் போக்குவரத்து விதி மீறும் நபர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். அவ்வாறு கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை போக்குவரத்து விதி மீறியதாக 40 ஆயிரம் வழக்குககள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாதந்தோறும் 15 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் ெஹல்மெட் அணிபவர்களின் சதவீதம் 60-ல் இருந்து 80 ஆக உயர்ந்துள்ளது. வருங்காலங்களில் இது மேலும் உயரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
2800 வழக்குகள் பதிவு
மேலும் இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் கடந்த ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கால கட்டத்தில் போதையில் வாகனம் ஓட்டிய 2800 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்க–ளிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை கட்டாதவர்களுடைய லைசென்ஸ்-ஐ தற்காலி–மாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பரிந்துரை செய்கிறோம்.
இதனை பரிசீலித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போதையில் வாகனம் ஓட்டியவர்களின் லைசென்சை ரத்து செய்து வருகின்றனர்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்