search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 275080"

    • எல்லை மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
    • குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி முத்தூர் ரோடு அருகே அமைந்துள்ள எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல், பூச்சாட்டு, குண்டம் விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்குவதற்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதனையடுத்து இன்று அதிகாலை சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுமுடி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து சிவகிரி நான்கு ரத வீதி வழியாக வந்து எல்லை மாகாளியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து குண்டம் அமைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது. இரவு அம்மன் சிங்க வாகனத்தில் சிவகிரி நான்கு ரத வீதி வழியாக மேளதாளம், கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெறும்.

    இதனையடுத்து நாளை அதிகாலை முதல் மாவிளக்கு பூஜை மற்றும் அக்னி சட்டி, கும்ப ஊர்வலம் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளைமறுநாள் அம்மன் திருமஞ்சன திருவீதி உலா நடைபெற உள்ளது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • இறைச்சி கோழிகளுடன் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
    • பறவை காய்ச்சல் எதிரொலி

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக பறவை காய்ச்சல் பல்வேறு பகுதிகளிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    முதலில் கோட்டயம் பகுதியில் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்திலும் இது பரவி உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டில் வளர்க்கப்படும் பறவைகள், கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதற்கி டையில் பண்ணை களில் கோழிகள் பாதி க்கப்பட்ட தால், அங்குள்ள கோழிகள், வாத்துகளை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பறவை காய்ச்சல், பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவது இல்லை என்றாலும், உருமாற்றம் பெற்ற வைரஸ் பரவ வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    தமிழக-கேரள எல்லை பகுதியில் உள்ள குமரி மாவட்டம் படர்ந்தாலுமூடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கேரள வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பறவைகள், கறிக்கோழிகள் ஏற்றி வரும் பெரும்பாலான வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றன. சில வாகனங்களில் கிருமி நாசினி தெளித்து மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

    தற்போது பறவை காய்ச்சல், கேரளாவில் தீவிரமடைந்துள்ளதால், அங்கிருந்து கறிக்கோழிகள், கோழிக் குஞ்சுகள், தீவனம், முட்டை போன்றவை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. படந்தாலுமூடு சோதனை சாவடி யில் 3 குழுக்களும், காக்க விளையில் ஒரு குழுவும் சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

    • போலீசார் பொதுமக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
    • பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுப்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள களி யக்காவிளை, சூழால் சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு கஞ்சா கொண்டு வருவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

    இந்த நிலையில் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார். போலீஸ் நிலையத்தில் உள்ள கோப்புகளை ஆய்வு செய்தார்.

    போலீஸ் நிலையத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் சரியான முறையில் கையாள வேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து கோழி விளை, சூழால் சோதனை சாவடிகளில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், போலீசார் பொதுமக்களிடம் பேசும் போது மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுப்பாகவும், மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

    வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். வாகன சோதனையின் போது சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டும் என்றார்.

    ×