search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பேர் தற்கொலை"

    • வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் அமர்மேக்தே (24). இவர் தேனி மாவட்டம் குள்ளப்புரத்தில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். க.விலக்கு அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தபோது வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சின்னவேலு மகன் காவியா (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவ த்தன்று பள்ளிக்கு செல்ல வில்லை. யாருடனும் பேசா மல் இருந்த அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகே அல்லிநகரத்தை சேர்ந்தவர் மணி மனைவி அய்யம்மாள் (வயது45). கடன் தொல்லை யால் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் அரளி விதையை அரைத்து குடித்து மயங்கிய அய்ய ம்மாளை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேனி அல்லிநகரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடியை சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் கார்த்திக் (35). பெற்றோரை இழந்ததால் சற்று மனநிைல பாதிக்கப்பட்டார். அவரது உறவினர் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்து பரா மரித்து வந்தார். இந்த நிலையில் விஷம் குடித்து கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்னர்.

    • தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் மூதாட்டி உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    கம்பத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் சிவபிரகாஷ் (வயது20). இவரது பெற்றோர் கடந்த சில ஆண்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டனர். தனது சகோதரர் சிவனேஸ்வரன் (29) என்பவருடன் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக தேனி அருகே பாலார்பட்டியில் அவரது நண்பருடன் தங்கி இருந்தார்.பெற்றோர் உயிரிழந்ததால் தனக்கு ஆதரவு இல்ைல என மனமுடைந்த சிவபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடியை சேர்ந்தவர் இந்திராணி (75). கடந்த சில நாட்களாக நோய் கொடுமை யால் அவதிப்பட்டு வந்த அவர் வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மண்எண்ணையை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    இதில் உடல் முழுவதும் கருகி உயிரிழந்தார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே முத்தப்புடையான்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி (37). இவருக்கு திருமண மாகாததால் விரக்தியில் மது பழக்கத்துக்கு அடிமையா னார். இந்த நிலையில் அவர் திடீரென மாயமானார். இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் தேவாரத்தில் உள்ள செல்வம் என்பவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடி அருகே சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் மனைவி சாரதா (40). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வயிற்று வலி இருந்து வந்தது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    கடலூர் மாவட்டம் பென்னாடம் அடுத்துள்ள திட்டக்குடியை சேர்ந்தவர் நாசர் (வயது50). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனைவி மற்றும் மகளுடன் உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உத்தமபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜெயமங்களம் அருகில் உள்ள மேல்மங்களம் அம்மாபட்டி ெதருவை சேர்ந்த முருகன் மனைவி போதுமணி (வயது36). இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிபட்டி அருகில் உள்ள குமணன்தொழு 1வது வார்டை சேர்ந்த சிவலிங்கம் மனைவி அழகம்மாள் (56). இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாததால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ராஜதாணி அருகில் உள்ள பழையகோட்டை நடுத்தெருவை ேசர்ந்த வேலுச்சாமி மனைவி வேலுத்தாய் (76). இவரும் உடல்நலக்குறைவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ×