என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏ.வி.எம். கால்வாய்"
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு
கன்னியாகுமரி:
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூத்தூர் ஊராட்சியில் உள்ள இரவிபுத்தன்துறை பிரேயர் சென்டர் செல்லும் சாலையையும், கே.ஆர்.புரம் - பூந்தோப்பு காலனி செல்லும் சாலையையும் இணைக்கும் விதமாக ஏ.வி.எம்.கால்வாயின் குறுக்கே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனையடுத்து ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று அவர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குநர் மற்றும் குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். இதன் அடிப்படையில் புதிய பாலம் அமைக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 9 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து ஏ.வி.எம். கால்வாயின் குறுக்கே புதியபாலம் அமைக்கும் பணியை ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இரவிபுத்தன்துறை ஆலய அருட்பணி யாளர் ரெஜீஷ் பாபு, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்