search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகர்ப்புற வேலை திட்டம்"

    • பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு உரிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
    • கொமரலிங்கத்தில், 96 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது.

    உடுமலை:

    விவசாய தொழிலாளர்கள் சங்கம் மடத்துக்குளம் தாலுகா மாநாடு கணியூரில் நடந்தது. இதில் கொமரலிங்கத்தில், 96 குடும்பங்களுக்கு வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் நிலத்தை அளந்து கொடுக்காததைக்கண்டித்து, தாலுகா அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது.

    மடத்துக்குளம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தவும், கொமரலிங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, அவசர முதல் உதவி சிகிச்சை, பாம்புக்கடி, நாய்க்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்கு உரிய மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

    கணியூர், சங்கராமநல்லூர், மடத்துக்குளம் ஆகிய பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தவும், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள, அனைத்து ஊராட்சிகளிலும் வேலைத்திட்டத்தில் வேலை கேட்பவர்களை அலைக்கழிக்காமல், வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×