என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ்"
- திட்ட பணிகளுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ்.ஆர். ஜெக தீஸ் அடிக்கல் நாட்டினார்.
- நவ்வலடியில் அங்கன் வாடி மையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
திசையன்விளை:
நெல்லை மாவட்ட ஊரக நிதி மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நல்வலடி பஞ்சாயத்தில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ்.ஆர். ஜெக தீஸ் அடிக்கல் நாட்டினார்.
மாவட்ட ஊராட்சி நிதியின் கீழ் நவ்வலடி கீழத்தெருவில் ரூ.9.90 லட்சம் மதிப்பில் தார் சாலை, கோடா விளையில் ரூ.9.20 லட்சம் மதிப்பில் தார் சாலை மற்றும் மரக்காட்டுவிளையில் ரூ.9.50 லட்சம் மதிப்பில் பேருந்து நிறுத்தத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வல்லான் விளை வடக்கு முதல் தெருவில் ரூ. 5 லட்சம் மதிப்பிலும், வடக்கு தெரு 2- வது தெருவில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டிலும், ராமன்குடி நிலா நகரில் ரூ. 8.12 லட்சம் மதிப்பிலும், பாலாஜி நகரில் ரூ. 6.24 லட்சம் மதிப்பிலும் பேவர் பிளாக் சாலைகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.நவ்வலடியில் ரூ. 12.61 லட்சம் மதிப்பில் அங்கன் வாடி மையத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, நவ்வலடி ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சரவண குமார், ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் இசக்கி பாபு,ஜெஸி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அமைச்சி யார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முரளி,மாவட்ட மகளிர் அணி துணை அமைப் பாளர் சரோஜா, சரவணகுமார்,பொன் இசக்கி, லயன்ஸ் முன்னாள் கவர்னர் சுயம்பு ராஜன், திசையன்விளை பேரூ ராட்சி கவுன்சிலர் கண்ணன்,திசையன்விளை பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய தொண்டரணி சங்கர், குமார், எழில் ஜோசப், குமார்,காமில், சுடலைமனி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்