என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொள்ளாச்சி ஆட்டுச்சந்தை"
- பொள்ளாச்சி சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
- கடந்த வாரத்தை விட அதிகமாக ஆடுகள் வந்திருந்தன.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வரும்.
புரட்டாசி மாதம் என்பதால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. குறைவான அளவிலேயே ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பொள்ளாச்சி ஆட்டுச்சந்தை கூடியது. புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதாலும், வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை வருவதாலும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டம் உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. ஆட்டுச்சந்தைக்கு வழக்கத்தை விட சற்று அதிகமாக ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
ஆடுகளை வாங்குவதற்காக திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் சந்தையில் ஆடுகளை வாங்கிசென்றனர். இதனால் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஆட்டுசந்தையில் அதிகபட்சமாக 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையானது.
பொள்ளாச்சி சந்தைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கடந்த வாரத்தை விட அதிகமாக ஆடுகள் வந்திருந்தன.
800 முதல் 1000 ஆடுகள் வரை சந்தைக்கு வந்தது. 5 கிலோ முதல் 30 கிலோ வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையாது.
8 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையும், 25 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.25ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை தரத்திற்கு ஏற்ப விற்பனையானது.
தீபாவளி பண்டிகையொட்டி வரத்து அதிகரித்தும், விலை குறையாமல் அதிகமாகவே காணப்பட்டது. வழக்கத்தை விட அதிகளவில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆடுகளை வாங்கி சென்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில், தமிழக ஆடுகளை தவிர, கேரள மாநிலத்தில் இருந்து நீண்ட காதுகளை உடைய ஜமுனாபாரி ரக ஆடுகளும் விற்பனைக்கு வந்திருந்தன. அந்த ஆடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் விற்பனையானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்