search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேப்பூர் ஆட்டு சந்தை"

    • ஒரு ஆட்டின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
    • தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 6000 ஆடுகள் விற்பனையானது.

    வேப்பூா்:

    கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தை வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது.

    இந்த ஆட்டு சந்தையில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியநெசலூர், குளவாய், காட்டுமயிலூர், சிறுப்பாக்கம், அடரி, கழுதூர், கண்டப்பன் குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 கிராம பகுதியில் இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்து வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று நடந்த சந்தையில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஆடுகளை வாங்குவதற்காக திருச்சி, சென்னை தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி சென்றனர்.

    கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, மாலாடு, நாட்டு ஆடு, சிவபாடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தது.

    ஒரு ஆட்டின் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. வழக்கத்தை விட விலை 500 முதல் 750 வரை ஒரு ஆட்டின் விலை கூடுதலாக விற்பனையானது. தீபாவளி பண்டிகை என்பதால் காலை 4 மணி முதல் 8 மணிக்குள் 4 மணி நேரத்துக்குள் 6000 ஆடுகள் விற்பனையானது. இதன் மதிப்பு 5 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×