search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேத்தன்"

    • இதில் அபிஷேக் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இத்தொடரை பாலகுமரன் முருகேசன் எழுத்தில் நாகா இயக்கியுள்ளார்.

    2020 ஆம் ஆண்டு தி வைரல் ஃபீவர் தயாரிப்பில் ஜிதேந்திர குமார் , ரகுபிர் யாதவ், நீனா குப்தா மற்றும் பலர் நடித்து அமேசான் பிரைமில் வெளியானது இந்தி வெப்தொடரான பஞ்சாயத். இந்த வெப் தொடருக்கு பல ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தற்பொழுது வரை 4 சீசன் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இத்தொடரை தற்பொழுது தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இதில் அபிஷேக் குமார் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி நடித்துள்ளனர்.

    தமிழில் தலைவெட்டியான் பாளையம் என தலைப்பிட்டுள்ளனர். இத்தொடர் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. இத்தொடர் 8 எபிசோட்கள் நிறைந்ததாக அமைந்துள்ளது.

    நகர்புற இளைஞன் அரசாங்க வேலைக்காக ஒரு கிராமத்தில் பணியமர்த்த படுகிறான். அங்கு அவன் படும் கஷ்டம் மற்றும் சமூக சிக்கல்களை குறித்து இத்தொடர் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடரை பாலகுமரன் முருகேசன் எழுத்தில் நாகா இயக்கியுள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் காந்தாரா.
    • காந்தாரா படம் பற்றி கருத்து தெரிவித்த கன்னட நடிகர் சேத்தன் மீது இந்து மதஉணர்வை புண்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்ம கதையை அடிப்படையாக கொண்டு உருவான திரைப்படம் காந்தாரா. இப்படம் கன்னடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு பணிகளை மேற்கொண்டது. அதன்படி, தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15-ந்தேதி காந்தாரா திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றது.

    இப்படத்தின் இயக்குனரான ரிஷப் ஷெட்டி பேட்டி ஒன்றில் கூறும்போது, படத்தில் இடம் பெற்ற பூட்டா கோலா இந்து கலாசாரத்தின் ஒரு பகுதி என கூறினார். ஆனால், கன்னட நடிகர் சேத்தன் குமார் என்ற சேத்தன் அகிம்சா கூறும்போது, பூட்டா கோலா இந்து கலாசாரம் கிடையாது என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டார். இதனை கண்டித்து பஜ்ரங்தள அமைப்பினர் குரல் கொடுத்தனர். மதஉணர்வுகளை புண்படுத்தி விட்டார் என்றும் கூறினர்.

    சேத்தன்

    சேத்தன்

     

    இதனை தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்த ஷிவ குமார் என்பவர் சேத்தனுக்கு எதிராக ஷேஷாத்ரிபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, மக்களை தவறாக வழிநடத்துதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். விசாரணை அதிகாரி முன் ஆஜராக சேத்தனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதன்பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    ஒரு சில நாட்களுக்கு முன், ஐகோர்ட்டு நீதிபதி ஒருவருக்கு எதிராகவும் புண்படுத்தும் வகையில் சேத்தன் பதிவிட்டு உள்ளார் என கூறப்படுகிறது.

    ×