என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "employee killed. லாரி மோதி"
- ஆறுமுகம் (20). இவர் வசந்தபுரம் ஒத்தக்கடை அருகே மேட்டூரில் உள்ள ஆருத்ரா பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
- ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிராந்தகம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆறுமுகம் (20). இவர் வசந்தபுரம் ஒத்தக்கடை அருகே மேட்டூரில் உள்ள ஆருத்ரா பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், சம்ப வத்தன்று இருட்டனையில் இருந்து காட்டூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி, ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆறுமுகம் நிலை தடுமாறி மோட்டார் பைக்குடன் சாலையில் விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஆறுமுகத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனி யார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகத்தின் தந்தை முருகேசன் நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்