search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employee killed. லாரி மோதி"

    • ஆறுமுகம் (20). இவர் வசந்தபுரம் ஒத்தக்கடை அருகே மேட்டூரில் உள்ள ஆருத்ரா பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.
    • ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிராந்தகம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மகன் ஆறுமுகம் (20). இவர் வசந்தபுரம் ஒத்தக்கடை அருகே மேட்டூரில் உள்ள ஆருத்ரா பால் பண்ணையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில், சம்ப வத்தன்று இருட்டனையில் இருந்து காட்டூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த டிப்பர் லாரி, ஆறுமுகம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஆறுமுகம் நிலை தடுமாறி மோட்டார் பைக்குடன் சாலையில் விழுந்தார்.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர், ஆறுமுகத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனி யார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆறுமுகத்தின் தந்தை முருகேசன் நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×