என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எலுமிச்சை ஊடுபயிர்"
- பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
- எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், ஊடையம், வேலம்பாளையம், ராசாத்தாவலசு, வள்ளியரச்சல், பூமாண்டன்வலசு, வேலம்பாளையம் ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்–பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த சாகுபடி பணிகள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகின்றன. இப்பகுதி விவசாயிகள் குறைந்த நீர் நிர்வாகத்தில் அதிக மகசூல் தந்து கூடுதல் வருமானம் மற்றும் கூடுதல் சாகுபடி பலன் தரும் புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர். வேலம்பாளையம் ஊராட்சி கிராம பகுதிகளில் விவசாயிகள் எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து புடலங்காய் சாகுபடி செய்து உள்ளனர்.
இதன்படி பந்தல் அமைத்து 1 ஏக்கர் புடலங்காய் சாகுபடி செய்வதற்கு உழவு கூலி, பந்தல் அமைத்தல், அடி உரம் இடுதல், விதை ஊன்றுதல், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, களைக்கொல்லி பராமரித்தல், பயிர் பாதுகாப்பு மேலாண்மை, அறுவடை கூலி என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை முதலீடு செய்து உள்ளனர்.
இந்த புடலங்காய் செடிகளில் பூக்கள் பூத்து பிஞ்சாக காய்த்து உள்ளன. இதுபற்றி புடலங்காய் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூறியதாவது:-
பொதுவாக புடலங்காய் கோடை மற்றும் மிதமான குளிர் காலத்தில் சாகுபடி செய்தாலும் பருவ கால சூழ்நிலைக்கு ஏற்ப கூடுதல் பலன் தரக்கூடியது. மேலும் புடலங்காய் குறைந்த நீர் நிர்வாகத்தில் கிணற்று நீர், ஆழ்குழாய் கிணற்று நீரை பயன்படுத்தி ஒரு சில பகுதிகளில் எலுமிச்சையின் ஊடுபயிராக பந்தல் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
புடலங்காய் பறித்து நத்தக்காடையூர், அரச்சலூர், முத்தூர், காங்கயம், சிவகிரி, கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி விற்பனை கடைகள் மற்றும் திருப்பூர், ஈரோடு, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு எடைக்கு ஏற்ப மொத்தமாகவும் அன்றைய நாளுக்கு ஏற்ப உரிய விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து விடலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்