search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது"

    • ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது.
    • இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா தேவர்மலை கல்வாரை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவருடைய மனைவி ஜீவலதா (22). ஜீவலதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவயிடத்துக்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கார்த்திக் ராஜா, அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி ஜீவலதாவை மீட்டு பர்கூர் அரசு மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றனர்.

    ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஜீவலதாவுக்கு பிரசவ வலி அதிகமாகவே வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி மருத்துவ நுட்புநர் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். இதில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் மருத்துவ சிகிச்சை அளித்து பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாதுகா ப்பாக அழைத்து சென்று அங்கு தாய், சேய் 2 பேரும் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

    • நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.
    • இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி (27). கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (20). நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வள்ளியை பிரசவத்துக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது கடுக்காம் பாளையம் பகுதி அருகே சென்ற போது வள்ளிக்கு பிரசவ வலி அதிகரிக்கவே நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    மருத்துவ நிட்புநர் ரமேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் வள்ளிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    இந்நிலையில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். பின்னர் அவர்கள் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    • நிறைமாத கர்ப்பிணியான மைலாவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.
    • மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருடைய மனைவி மைலா (21). நிறைமாத கர்ப்பிணியான மைலாவுக்கு இன்று அதிகாலை 5 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரது உறவினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருடன் குத்தியாளத்தூரில் இருந்து மயிலாவை ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தது.

    108 ஆம்புலன்ஸ் கிட்டா பாளையம் வனப்பகுதியில் வந்தபோது மைலாவுக்கு பிரசவ வலி அதிகரிக்கவே, நிலைமையை புரிந்து கொண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார்.

    பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் மைலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு பொது மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

    ×