search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ வைரல்"

    • இந்த காட்சிகள் அனைத்தும் அப்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது.
    • இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது.

    குழித்துறை :

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பனவிளை பகுதியை சேர்ந்தவர் அஜின் (வயது 35). இவர் மார்த்தாண்டம் பழைய தியேட்டர் சமீபம், போலீஸ் நிலைய சந்திப்பில் உள்ள பிரபல நகைக்கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவர் கடந்த 10-ந்தேதி கடையின் முன்பு மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தனக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தை அதிகாலையில் நிறுத்தி விட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள், அஜினின் இரு சக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து, கள்ள சாவியை போட்டு திறக்க முயற்சிக் கின்றனர். ஆனால் அந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்ய முடியாமல் இருவரும் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அந்த இருசக்கர வாகனத்தை அங்கிருந்து எடுத்துச்செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் அப்ப குதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ கட்சிகள் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் இருவரின் அடையாளம் மற்றும் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் ஆகியவை தெளிவாக தெரிகிறது. ஆனால் அவர்கள் இதுவரை கைது செய்யப்பட வில்லை.

    மேலும் 2, 3 மாதங்களில் மார்த்தாண்டம் மேம்பா லத்தின் அடிப்பகுதியிலிருந்து ஏராளமான இருசக்கர வாகனங்கள் திருட்டு சென் றுள்ளன. ஆனால் குற்ற வாளிகள் கைது செய்யப்பட வில்லை. மார்த்தாண்டத்தில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி.கள் பொருத்தப்பட்டுள்ளது.

    ஆனால் கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக திருட்டு வேலைகளில் ஈடுபடுவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. மேலும் தொடர்ந்து மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு மற்றும் இரு சக்கர வாகன திருட்டுகளை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் பைபாஸ் சாலை வழியாக மினி பஸ் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு வந்தது. அந்த பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளிலில் தனியார் உணவு டெலிவரி வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது வாலிபர் மினி பஸ்சுக்கு வழிவிடாமல் சென்றதாக தெரிகிறது. இதனையடுத்து மினி பஸ் டிரைவர், உணவு டெலிவரி வாலிபர் சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு பஸ் டிரைவர் ஏன் வழிவிடாமல் மோட்டார் சைக்கிளில் சென்றாய் என்று தனியார் உணவு டெலிவரி வாலிபரிடம் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர் உடனே பஸ் டிரைவரிடம் வாக்குவாத த்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதம் தகராறாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் உணவு டெலிவரி வாலிபர் தனது மோட்டார் சைக்கிள் சாவியில் உள்ள கத்தியை எடுத்து பஸ் டிரைவரை குத்த முயன்றார்.

    இதை பார்த்த பஸ் நிலையத்தில் அருகில் இருந்தவர்கள் இவர்களை பிடித்து சமாதானப்படுத்தி விலக்கிவிட்டனர். இந்நிலையில் இவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை யிடும் காட்சியை அங்கிரு ந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளங்கலில் வெளி யிட்டனர். இந்த வைரலான வீடியோ காட்சி மூலம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொள்ள உத்தர விட்டார். உத்தரவின்பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் மினி பஸ்சை ஓட்டி வந்தது சிதம்பரம் அருகே ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 35) என்பதும், தனியார் உணவு டெலிவரி வாலிபர்கோவிந்தசாமி பகுதியை சேர்ந்த கணேஷ் (41) என்பதும் தெரிய வந்தது. பின்னர் இவர்களிடம் போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபட க்கூடாது என்றும், மேலும் இதுபோன்று பொது மக்களுக்கு இடையூராக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    • சுமார் 16 வினாடிகள் கொண்ட வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார்.
    • வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    குடிமகன்களின் சேட்டைகள் சில நேரம் சிரிப்பை வரவழைக்கும். சில சம்பவங்கள் ஆத்திரத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் பகுதியில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் காளை மீது ஏறி சவாரி செய்வது போன்று காட்சிகள் பதிவாகி உள்ளது.

    சுமார் 16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், வாலிபர் காளையின் மீது அமர்ந்து ரிஷிகேசில் உள்ள தெருக்களில் சவாரி செய்கிறார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர். மேலும் அவருக்கு அறிவுரை வழங்கி, இனி இது போல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் பதிவாகி இருந்தது.
    • இந்த வீடியோ தற்போது சமூக வளைதலைங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வருபவர் நவீன் குமார் (21). பெயிண்டராக வேலை செய்து வரும் இவர் மீது ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் சத்திய மங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவரை நவீன்குமார் தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மாணவியின் பின்னால் சுற்றி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரில், நவீன்குமாரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். இதையடுத்து ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றார்.

    இதில் மாணவியின் கழுத்தில் 6 இடங்களில் கத்தி குத்து விழுந்தது. வலியால் அலறித்துடித்த மாணவியின் குரலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே நவீன்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை அங்கிரு ந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நம்பியூரில் வைத்து நவீன்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் மாணவி பின்னால் நவீன் செல்லும் காட்சி, மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியால் அறுத்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சியில் பதிவாகி இருந்தது.

    இந்த வீடியோ தற்போது சமூக வளைதலைங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மாணவி பெருந்து றையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    ×