என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாகனங்கள் ஏலம்"
- பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மூலம் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 10ம்தேதி ஏலம் விடப்படுகிறது.
- பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மூலம் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் வரும் 10ம்தேதி ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து மதுவிலக்கு அமலாக்கபிரிவு ஏடிஎஸ்பி (பொ) பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியதாவது-
பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடை மையாக்கப்பட்ட 12 இரண்டு சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 14 வாகனங்கள் வரும் 10ம்தேதி காலை 10 மணி முதல் ஆயுதப்படை வளாகம், தண்ணீர் பந்தலில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9498159048, 9790680013 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி தங்களது பெயர் முகவரியை வரும் 8ம்தேதி முதல் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பெரம்பலூரில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜிஎஸ்டி சேர்த்து பிற்பகல் 3 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும், பெறப்பட்ட வைப்பு த்தொகை கழித்துக் கொள்ளப்படும். வாகனங்களை வரும் 9ம் தேதி காலை 10 மணிமுதல் பார்வை யிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை தவறாமல் கொண்டுவர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்