search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டும் குழியுமான நெடுஞ்சாலை"

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமம் அடைவதாக புகார்

    போளூர்:

    போளூர் அருகே வசூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் கடலூரில் இருந்து சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    இதன் எதிரில் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக மேடு பள்ளமாக உள்ளது. ஏற்கனவே அந்த பகுதி வளைவான பகுதியாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    செல்லியம்மன் கோவிலுக்கு செல்லும் மக்களும் அந்த இடத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×