என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் பயணம்"
- சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
- ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிக்கான டிக்கெட்டை வைத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முதல் போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
நேற்றைய தினம், ஐபிஎல் டிக்கெட் வைத்து போட்டி அன்று இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டிக்களுக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரெயிலில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ சேவைகளை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸுடன் இணைந்து செயல்படவுள்ளது
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள ஐபிஎல்2025 போட்டிகளுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க சென்னைசூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
இந்தமுயற்சியானது, ஸ்பான்சர் செய்யப்பட்ட இலவச மெட்ரோ பயணத்தை ரசிகர்களுக்கு வழங்குவதன் மூலம், போட்டி நாள் அனுபவத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சென்னையில் CSKபோட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மெட்ரோ இரயில் சேவைகளை இரவு நீட்டிப்பதுடன்,பார்வையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான போக்குவரத்தை வழங்கும்.
கூடுதலாக, ஸ்பான்சர்செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் எந்த மெட்ரோ இரயில்நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோஇரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
விளையாட்டுப் போட்டி நடைபெறும் நாட்களில், பயணிகளின் தேவையைப் பொறுத்து, போட்டிமுடிந்த பிறகு மெட்ரோ இரயில் சேவை 90 நிமிடங்கள் வரை அல்லது அதிகபட்சமாக நள்ளிரவு 1:00 மணிவரை நீட்டிக்கப்படும்.
ஒவ்வொரு போட்டி நாளுக்கு முன்பும் கடைசி மெட்ரோ இரயில் புறப்படும் நேரம்சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மூலம் அறிவிக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- புத்தகத்துடன் ரெயில் பயணத்திற்கான புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்த தகவலை மதுரை போட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை
மதுரை ரெயில்வே கோட்டத்தில் 'புத்தகத்துடன் ஒரு பயணம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை மதுரை முதுநிலை கோட்ட ரெயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி, அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புத்தகத்துடன் ஒரு பயணம்' திட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் இருந்து இன்று புறப்பட்ட பிகானீர் வாராந்திர விரைவு ரெயில் குளிர்சாதன முதல் வகுப்பு பயணிகளுக்கு 3 தமிழ், 2 ஆங்கிலம், 5 பிற மொழி இதழ்கள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொருத்து, அது மற்ற வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும் இன்று மதுரை போட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
- 2019-20-ம் நிதி ஆண்டில் இருந்து 100 சதவீதம் பயணிகள் குறைகளை விரைவாக குறித்த நேரத்தில் களைவதில் முன்னணியில் இருக்கிறது.
- கடந்த ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான 2021-22-ம் நிதியாண்டில் 31,450 குறைகள் மட்டுமே பதிவு பெற்று தீர்வு பெற்றுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய ரெயில்வே சமூக பொறுப்பு, பயணிகளுக்கு தடையற்ற சேவை அளிப்பதை குறிக்கோளாகக் கொண்டு பயணிகள் குறைகளை தீர்ப்பதை தலையாய கடமையாக செய்து வருகிறது. பயணிகளின் குறைகளுக்கு உடனடி தீர்வு கண்டிட 2019-ம் ஆண்டு முதல் ரெயில் மதாத் என்ற செயலியை அறிமுகப்படுத்தி குறைகளை குறித்த காலத்தில் தீர்த்து வருகிறது. இந்த செயலி மூலம் குறுஞ்செய்தி, தொலைபேசி, சமூக ஊடகம், போன்றவற்றிலிருந்து பெறப்படும் பயணிகள் குறைகளை ஒருமுகப்படுத்தி கால நிர்ணயத்தோடு குறைகள் களையப்படுகின்றன.
தெற்கு ரெயில்வேயில் தொலைபேசி உதவி எண் 139 மூலம் 61 சதவீதமும், ரெயில் மதாத் இணைய தளம் (railmadad.gov.in மற்றும் railmadad.in) மூலம் 21 சதவீதமும், சமூக ஊடகம் மூலம் 10 சதவீதமும், ரெயில் மதாத் செல்போன் செயலி மூலம் 5 சதவீதமும், மின்னஞ்சல், குறுஞ்செய்தி ஆகியவை மூலம் 3 சதவீத பயணிகளின் குறைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படுகின்றன. 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தெற்கு ரெயில்வே 'ரெயில் மதாத்' மூலம் பயணிகள் குறைகளுக்கு 37 நிமிடத்தில் தீர்வு கண்டு வருகிறது.
2019-20-ம் நிதி ஆண்டில் இருந்து 100 சதவீதம் பயணிகள் குறைகளையும் விரைவாக குறித்த நேரத்தில் களைவதில் முன்னணியில் இருக்கிறது. மேலும் குறைகள் பதிந்த முதல் கவனிப்பு நேரமான 8 நிமிடத்தில் பயணிகளை தொடர்பு கொண்டு குறைகளை களையத் தொடங்கி விடுகிறது. இந்த முதல் கவனிப்பு நேரம் மருத்துவ மற்றும் பாதுகாப்பு உதவிகளுக்கு பேருதவியாக உள்ளது.
இதனிடையே 2022-23-ம் நிதி ஆண்டில் ஜனவரி மாதம் வரை 75,613 பயணிகள் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான 2021-22-ம் நிதியாண்டில் 31,450 குறைகள் மட்டுமே பதிவு பெற்று தீர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலத்தில் இருந்து திருப்பூர் வரை 6 ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்தனர்.
- ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.2.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
சேலம்:
ரெயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் சேலத்தில் இருந்து திருப்பூர் வரை 6 ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை செய்தனர்.
அப்போது டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்கள், பொது பெட்டி டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தவர்கள் , அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட 419 பேர் சிக்கினர். இவர்கள் மீது ரெயில்வே பாதுகாப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு ரூ.2.70 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரெயிலில் பயண சீட்டு இன்று பயணிப்பது தண்டனைக்குரிய குற்றம், அவர்களிடம் இருந்து இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதுடன் ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும், இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மங்களூருவில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது.
- முகமது ஷபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மங்களூருவில் இருந்து தமிழகத்தின் கோவைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றது. இந்த ரெயிலில் திரூரில் இருந்து பாலக்காடு வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக வல்லபுழாவை சேர்ந்த முகமது ஷபி (வயது 30) என்பவர் பிடிபட்டார். அவருக்கு ரெயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்தும் அதனை கட்டத்தவறிய அவர், வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து அவரை ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம், ரெயில்வே அதிகாரிகள் ஒப்படைத்தனர். தொடர்ந்து முகமது ஷபி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அவருக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து ஷோரனூர் ரெயில்வே நீதிமன்றம் உத்தரவிட்டது.
- தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார்.
- தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
ரெயில் பயணத்தை சிறுவர்கள் விரும்புவார்கள். ஆனால் ரெயிலிலேயே 2 வருடங்களாக வாழ்க்கையை கழிக்கும் ஒரு சிறுவனை பற்றிய தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
ஜெர்மனியில் உள்ள லாஸ் ஸ்டோலி என்பவர் தனது 15 வயதில் இருந்தே ரெயிலில் வாழ ஆசை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லாஸ் ஸ்டோலி அதனை பொருட்படுத்தாமல் தினமும் ரெயிலிலேயே தனது வாழ்க்கை பயணத்தை கழிக்க தொடங்கினார். தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார். இதற்காக அதிக செலவு செய்கிறார்.
ஆனால் ஜெர்மன் ரெயில்வே வழங்கும் வருடாந்திர ரெயில் அட்டையை பெற்றுள்ள லாஸ் ஸ்டோலி ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும், முதல் வகுப்பில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.8.5 லட்சம் செலவு செய்கிறார். அதே நேரம் அவர் தான் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
- டாக்டர் காயத்ரி இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
- ரெயில் ஷோரனூர் வந்ததும், பெட்டிகளை ரெயில்வே போலீசாரும், ரெயில் நிலைய பணியாளர்களும் சோதனை செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் இயக்கப்படும் பல ரெயில்களில் விஷ பூச்சிக்கள் பயணிகளை கடிப்பதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ஷோரனூர் பயணிகள் ரெயிலில் பெண் பயணி ஒருவரை பாம்பு கடித்ததாக தகவல் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் பாதிக்கப்பட்ட பெண், ஆயுர்வேத டாக்டர் ஆவார். கேரள மாநிலம் நீலம்பூரைச் சேர்ந்த காயத்ரி (வயது 25) என்ற அந்த டாக்டர், நேற்று ஷோரனூர் பயணிகள் ரெயிலில் பயணம் செய்தார்.
அந்த ரெயில வல்லப்புழா ரெயில் நிலையம் அருகே வந்தபோது, இருக்கைக்கு அடியில் காலில் ஏதோ கடிப்பதை அவர் உணர்ந்துள்ளார். உடனடியாக அவர் கீழே குனிந்து பார்த்தபோது, அங்கு எதுவும் இல்லை. ஆனால் காலில் பல்லால் கடித்த காயம் காணப்பட்டது.
பாம்பு கடித்தது போன்ற காயம் இருந்ததால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையில் ரெயில், வல்லப்புழா நிலையத்தை வந்தடைந்தது. அங்கு டாக்டர் காயத்ரி இறக்கப்பட்டு உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, உடலில் விஷம் ஏறவில்லை என தெரிய வந்தது.
எனவே அவரை கடித்தது பாம்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனால் கடித்தது எது என்பது தெரியவில்லை. இதற்கிடையில் ரெயில் ஷோரனூர் வந்ததும், பெட்டிகளை ரெயில்வே போலீசாரும், ரெயில் நிலைய பணியாளர்களும் சோதனை செய்தனர்.
வனத்துறையினரும் வரவழைக்கப்பட்டு பெட்டி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த பெட்டியில் எலி இருப்பது தெரியவந்தது. எனவே அது தான் டாக்டர் காயத்ரியை கடித்திருக்கலாம் என தெரிகிறது.
- பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக இன்று போலந்து செல்கிறார்.
- இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைனுக்கு ரெயிலில் செல்கிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் போலந்தில் பயணம் மேற்கொள்கிறார். இதன் மூலம் கடந்த 45 ஆண்டுகளில் போலந்து செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெறுகிறார்.
போலந்து பிரதமர் டொனால்டு டஸ்க், அதிபர் ஆண்ட்ரெஜ் டூடா ஆகியோரைச் சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அங்கு வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களைச் சந்தித்து பிரதமர் மோடி உரையாடுகிறார்.
போலந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, அங்கிருந்து ரெயில் மூலம் வரும் 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார்.
ரஷிய போர் தொடங்கியதற்கு பின் முதல்முறையாக அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்கிறார்.
இதற்காக பிரதமர் மோடி போலந்தில் இருந்து சொகுசு ரெயில் மூலம் உக்ரைன் செல்கிறார். சுமார் 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் தன்மயா லால் கூறுகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இந்த வார இறுதியில் உக்ரைனுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்றுப் பயணமாகும். 30 ஆண்டுக்கு மேலாக இந்திய பிரதமர் ஒருவர் உக்ரைனுக்குச் செல்வது இதுவே முதல் முறை என தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம்.
- அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் அறிவிப்பு.
சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 90.83 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக Airshow நடந்த தினத்தன்று சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
குறிப்பாக, அரசினர் தோட்டம் மெட்ரோ நிறுத்தத்தில் இருந்த 59,776 பேர் பயணித்துள்ளதாக மெட்ரே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு குறிப்பிடப்ட்டுள்ளது.
- மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
- இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
சென்னை:
கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார். ரெயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சிக்கன் ரைஸ் வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.
மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
விளையாட சென்ற மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அவருடைய குடும்பத்தினர் மத்தியிலும் சக மாணவ-மாணவிகள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து சிக்கன் ரைஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
- எலினாவுக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராபின் டென்னிஸ் (வயது 40). இவருடைய மகள் எலினா லாரெட் (15). கூடைப்பந்து வீராங்கனையான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட், சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்றார். பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார்.
ரெயில் பயணத்தில் மாணவி எலினா லாரெட், சக மாணவிகளுடன் சேர்ந்து ரெயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை அண்ணாநகர் 4-வது அவென்யூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். சிகிச்சைக்கு பின்னர் எலினா, பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார்.
அங்கு சென்ற சிறிது நேரத்தில் எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் எலினாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை எலினா லாரெட் (15), உயிரிழந்ததற்கு சிக்கன் ரைஸ் காரணமல்ல என விசாரணைகுப் பிறகு போலீசார் தெரிவித்துள்ளனர்.
கூடைப்பந்து விளையாட்டின் போது வயிற்று மற்றும் மார்புப் பகுதியில் சதை கிழிந்துள்ளது. இதனால், நுரையீரல் செயலிழந்து மரணம் நிகழ்ந்துள்ளது என்று அவரது உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- பொங்கல் கொண்டாட சென்னையில் இருந்து 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர்.
- பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செல்ல வசதியாக 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக வெளியூர் பயணம் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
10-ந்தேதி தொடங்கி இன்று வரை அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் மற்றும் கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.
இன்று அரசு வேலை நாளாக இருந்தாலும் மதசார்பு விடுமுறை எடுத்து கொள்ளலாம் என்பதால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் இன்று ஆர்.எச். விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊர் சென்றனர். பொங்கலை கொண்டாட வும் சுற்றுலா மையங்களுக்கு செல்லவும் திட்டமிட்டு பயணம் மேற்கொண்டதால் பஸ், ரெயில்கள் அனைத்தும் நிரம்பி சென்றன.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில் சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
கடந்த 3 நாட்களில் சுமார் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்கள், கோவை, திருவனந்தபுரம், மும்பை நகரங்களுக்கும் எழும்பூர், தாம்பரத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கும் பிற நகரங்களுக்கும் இயக்கப்பட்ட வழக்கமான ரெயில்கள், சிறப்பு ரெயில்களில் சுமார் 10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்களில் 3 நாட்களில் பொது பெட்டிகளில் நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு பயணித்தனர்.
முன்பதிவு செய்யாத பெட்டிகளில் பயணம் செய்ய மக்கள் பல மணி நேரத்துக்கு முன்பாக காத்திருந்தனர். படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தனர். முன்பதிவு பெட்டிகளிலும் ஆங்காங்கே அமர்ந்து பயணம் செய்தனர்.
அரசு பஸ்களில் நேற்று வரை 11,463 பஸ்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 17 ஆயிரம் பேர் புறப்பட்டு சென்றனர்.
இன்று 4-வது நாளாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது. காலையில் இருந்தே மக்கள் பயணத்தை தொடங்கினார்கள். கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு மக்கள் படையெடுத்தார்கள். இன்று நள்ளிரவு வரை வெளியூர்களுக்கு மக்கள் புறப்பட்டு செல்ல வசதியாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. இன்று 2 லட்சத்திற்கும் மேலானவர்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆம்னி பஸ்களில் கடந்த 3 நாட்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர். இன்று 60 ஆயிரம் பேர் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சஙக தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
இது தவிர கார்களிலும் சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பயணத்தை தொடர்ந்து உள்ளனர். பஸ், ரெயில்களில் இட நெருக்கடியை பார்த்து 3 நாட்களுக்கு முன்பே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், புதுச்சேரி, வந்த வாசி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் இருந்து மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தனர்.
பொங்கல் பண்டிகையை யொட்டி கடைசி நேர பயணம் மேற்கொள்பவர்கள் இன்று தொடங்கினர். இத னால் சென்னையில் மக்கள் நடமாட்டம், வாகன ஓட்டம் குறைந்தது. சென்னையில் இருந்து இன்றுடன் சேர்த்து சுமார் 20 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.