search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரைப்பட விழா"

    • கடந்த மே 14-ம் தேதி முதல் நடைப்பெற்று வந்த கேன்ஸ் திரைப்படவிழா நேற்று நிறவடைந்தது.
    • இந்திய குறும்படமான ’ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்’ திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    கடந்த மே 14-ம் தேதி முதல் நடைப்பெற்று வந்த கேன்ஸ் திரைப்படவிழா நேற்று நிறவடைந்தது. இந்திய குறும்படமான 'ஆல் வி இமேஜின் ஆஸ் லைட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 40 வருடங்களுக்கு பிறகு கேன்ஸ் விழாவில் இடம் பெறும் இந்திய திரைப்படமாகும். பாயல் கபாடியாவின் இயகத்தில் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் இப்படம் உருவாகியுள்ளது.

    விழாவின் முதன்மை போட்டி பிரிவில் கேன்ஸ் பாம் டி ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்திய திரைப்படம் என சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான 'கிரண்ட் பிரிக்ஸை' இந்திய திரைப்படமான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" வென்றுள்ளது. இதன் மூலம் 'கிராண்ட் பிரிக்ஸ்' வென்ற முதல் இந்திய இயக்குனராகி வரலாறு படைத்துள்ளார் பாயல் கபாடியா. பாம் டி'ஓர் விருதுக்கு அடுத்தபடியாக 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதுதான் கேன்ஸ் விழாவின் உயரிய விருதாகும்.இப்படத்திற்கு விழாவில் 8 நிமிடம் படம் பார்த்து முடித்த பின் எழந்து நின்று கை தட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.
    • இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன.

    பிரான்ஸ் நாட்டில் கடந்த மே 14-ம் தேதி தொடங்கிய கேன்ஸ் திரைப்பட விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தத் திரைப்பட விழாவின் பல்வேறு பிரிவுகளில் போட்டியிட பல இந்தியத் திரைப்படங்கள் தேர்வாகி திரையிடப்பட்டன. அதில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தை இந்திய குறும்படங்கள் பிடித்திருப்பது ரசிகர்களை குதூகலமடையச் செய்திருக்கிறது.

    இயக்குனர் சித்தானந்த் எஸ் நாயக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சன்பிளவர்ஸ்'. 16 நிமிடங்கள் ஓடக்கூடிய புனேவைச் சேர்ந்த பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மாணவர்களின் தயாரிப்பில் உருவான குறும்படம் இது.

    77-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிறந்த குறும்படத்திற்கான லா சினிஃப் பிரிவில் இடம் பெற்ற இந்தியத் திரைப்படப் பள்ளியின் ஒரே திரைப்படமாக இது உள்ளது. திரையிடல் முடிந்த பிறகு 'சன்பிளவர்ஸ்' குறும்படம் லா சினிப் பிரிவில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதல் பரிசு பெற்ற 'சன்பிளவர்ஸ்' படக்குழுவுக்கு இயக்குனர் ராஜமவுலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்திய திறமை எல்லைத்தாண்டி பிரதிபலிக்கிறது... கேன்ஸ் 2024 இல் சிறந்த குறும்படத்திற்கான லா சினிப் விருதை சிதானந்தஸ்நாயக்கின் 'சன்பிளவர்ஸ்' வென்றுள்ளது என்பதைக் கேள்விப்பட்டதில் மகிழ்ச்சி! இளைஞர்களுக்கு பாராட்டுகள், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம்,
    • இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்மைப் போட்டிப் பிரிவில் கேன்ஸ் பாம் டி'ஓர் விருதுக்காக போட்டியிடும் முதல் இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

    உலகளவில் பிரபலமான பெரும் படைப்பாளிகளான பிரான்ஸ் போர்டு கப்போலா மற்றும் டேவிட் ரோஹன் ஆகியோரின் படைப்புகளுடன் இப்படம் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.

    இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கதம் என விருது பெற்ற நடிகர்களுடன் கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, பிருந்தா மாஸ்டரின் தமிழ் படமான தக்ஸ் திரைப்படத்தில், ஹிருது ஹாரூன் நாயகனாக நடித்திருந்தார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில், சந்தோஷ் சிவன் இயக்கிய மும்பைக்கார் படத்திலும், அமேசான் வெப் சீரிஸ் கிராஷ் கோர்ஸிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்போது பாயல் கபாடியாவின் இயக்கத்தில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படத்தின் டிரெய்லர், சர்வதேச அரங்கில் பெரும் பாராட்டுகளைக் குவித்து கவனம் ஈர்த்து வருகிறது. படத்தில் பெரும்பான்மையான காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுள்ளது.

    இரு செவிலியர்கள் ஒன்றாக வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு டிரிப் செல்கின்றனர். அதில் அவர்கள் பார்க்கக் கூடிய மனிதர்கள், வாழ்க்கை என படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. 1994 ஆம் ஆண்டு ஷாஜி கருண் இயக்கிய மலையாள படமான ஸ்வஹம் திரைப்படம் தான் இந்தியாவிலேயே இதற்கு முன் இப்பிரிவில் போட்டியிட்டப் படம். அதற்கு அடுத்து "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" படம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார்.
    • ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார். அப்போது அவர் கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தார்.

    அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் பதறினார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என்று தவிப்போடு கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

    ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

    தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திரைப்படவிழாவில் அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி பங்கேற்றனர்
    • சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி 200-வது ஆண்டு விழாவின் ஒரு பகுதியான திரைப்பட விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து ஆஸ்கார் விருது பெற்ற "தி எலிபெண்ட் விசுபெரர்சு" குறும்ப டத்தினை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா மற்றும் ஊட்டியின் 200-வது ஆண்டினை போற்றும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகள் இணைந்து சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஊட்டி 200 விழாவினை சிறப்பாக கொண்டாடுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் பேரில், மாவட்ட நிர்வாகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.சுற்றுலா பயணிகளை வருகையினை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. முதலாவதாக கடந்த 6-ந் தேதி அன்று காய்கறி கண்காட்சி தொடங்கப்பட்டு, அதனை தொடர்ந்து புகைப்படக்கண்காட்சி, படகு போட்டி, பழக்காட்சி என ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், கூடலூரில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேவாலா பண்ணை யினை ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்தவும், படகு இல்லத்தில் சாகச பூங்கா மற்றும் பைக்காராவில் மிதவை படகு அமைக்கவும், சுற்றுலாத்துறை சார்பில் ரூ.150 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இவ்விழாவில் நீலகிரி எம்.பி. ஆ.ராசா கூறியதா வது:-

    கோவை மாவட்ட கலெக்டராக இருந்த ஜான் சலீவன் அவரால் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்ட இந்த 200-வது விழாவினை கொண்டாடும் வகையில், இன்றைய தினம் இந்த திரைப்பட விழாவானது நடைபெறுகிறது. தமிழ கத்திற்கு என உள்ள பல்வேறு மொழி, இன, கலாச்சாரங்களில், நீலகிரி மாவட்ட மக்கள் ஒரு பெரும் பங்கினை, தொன்மைகளை பெற்றிருக்கிறார்கள். அவற்றினை நாட்டிற்கு பறைசாற்றுகின்ற வகையில் கொண்டாட வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்ததையொட்டி சென்ற நிதியாண்டில் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதேபோன்று திரைப்படம் என்பது மொழி, இனம், சமூகம், சாதி ஒழிப்பு, பெண் உரிமை. மத நல்லிணக்கத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திரைப்படங்கள் எல்லாம் ஊட்டி நகரில் எடுக்கப்பட்டது என்பது இந்த நகரத்திற்கு தனி சிறப்பு ஆகும். எனவே ஊடியில் எடுக்கப்பட்ட மூடுபனி, முள்ளும் மலரும், ஊட்டி வரை உறவு, புதையல் போன்ற பல்வேறு திரைப்படங்களையும் பார்த்து 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த சமூக சம்பவம் சமூக நிலை மற்றும் ஊட்டியின் பங்கு என்ன என்பதனை தெரிந்து கொள்ளவும், ஊட்டியில் பெருமையை தெரிந்து கொள்ளவும் திரைப்படம் உதவும், எனவே மொழியால், இனத்தால், இருக்கின்ற இடம் ஊட்டியினால், நாம் பெருமையடைகிறோம் என்கின்ற உணர்வை, இந்த திரைப்பட விழாவானது நமக்கு அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, சுற்றுலாத்துறை அமைச்சர், நீலகிரி எம்.பி. ஆகியோர் "வாக்கத்தான்" குறும்படத்தினை இயக்கிய இயக்குநர்கள் சுரேஷ், பிரவீன் மற்றும் குழுவினரை பாராட்டி பொன்னாடை அணிவித்து, "பிளாஸ்டிக் தடை குறும்படம்", சுற்றுலா பயணிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதது குறித்த மாவட்ட கலெக்டர் உரையாற்றிய விழிப்புணர்வு குறும்படம், "திஎலிபெண்ட் விசுபெரர்சு" போன்ற குறும்படங்களை பார்வை யிட்டனர்.

    விழாவில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், உதவி வன பாதுகாவலர் தேவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்புச்சாமி, ஊட்டி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி, முகம்மது குதுரதுல்லா (கூடலூர்), வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தேவகுமாரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், வட்டாட்சியர்கள் ராஜசேகர் (ஊட்டி), காயத்ரி (கோத்த கிரி) உள்பட அரசுத்துறை அலுவலர்கள் அசெம்பிளி திரையரங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் திரைப்பட விழா நடந்தது.
    • ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி, காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறையின் நியோ ஐடோலா இலக்கிய மன்றம் சார்பில் திரைப்பட விழா நடந்தது. ஆங்கிலத்துறையின் தலைவர் பெமினா தலைமை தாங்கினார்.இலக்கிய மன்றத் துணைத் தலைவரும், ஆங்கிலத்துறை, 3-ந் ஆண்டு மாணவருமான பிரதீப் வரவேற்றார். முதல் அமர்வாக உலக சினிமாவில் இருந்து சிறந்த காட்சிகள் திரையிடப்பட்டன. ஆங்கிலத்துறைத் தலைவர் பெமினா தலைமையில் இந்த திரைப்படங்களின் சிறப்பம்சம் குறித்த கலந்தாய்வுகள் நடந்தன.

    உலகத் திரைப்படங்களின் காட்சியமைப்பு, கதையம்சம், இயக்கம், நடிப்பாற்றல் மற்றும் இசை கோர்ப்பு பற்றி மாணவர்கள் கலந்துரையாடினர். திரையிடப்பட்ட காட்சிகளில் தங்களை கவர்ந்த காட்சிகளைப் பற்றி மாணவர்கள் பேசினர். இது மாணவர்களின் விமர்சனத் திறன் மற்றும் பேச்சுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் அமைந்தது. இலக்கிய மன்ற மாணவர் தலைவரும், முதுகலை 2-ந் ஆண்டு மாணவியுமான மரியா கிரிஸ்டைனா நன்றி கூறினார்.

    • சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
    • மூன்று தமிழ் படங்களும் இதில் இடம் பெறுகின்றன.

    மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் கோவாவில் நாளை தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.

    இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்களும் இடம் பெறுகின்றன. ராஜ்மவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்.திரைப்படமும் இதில் கலந்து கொள்கிறது.


    மேலும் ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஆஸ்கார் விருது பெற்ற காந்தி, அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் ஆகிய படங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் திரையிடப்படுகின்றன.

    இந்த விழாவில் பங்கேற்கும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களின் வளாகங்கள், சரிவுகள், கைப்பிடிகள், தொட்டுணரக் கூடிய நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், மறுசீரமைக்கப்பட்ட கழிவறைகள், பிரெய்லி வழிகாட்டு பலகைகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும் திரைப்படக் கலை, சினிமா மற்றும் அழகியல் தொடர்பான தொழில்நுட்பத்தை பறைசாற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 21 முதல் 27 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கோவாவில் உள்ள கலா அகாடமிக்கு அருகே கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் மொத்தம் 20 அரங்குகள் இடம்பெறும்.

    சமகால சினிமா தயாரிப்பில் தொழில்நுட்ப வல்லுனர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும். இந்நிலையில் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் கிடைக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ×