search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குருப்பூர்"

    • குரும்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கு‘குட் டச்’, ‘பேட் டச்’ குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    குரும்பூர்:

    குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி குரும்பூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அவர் மாணவர்களிடம் பேசும் போது "மாணவர்கள் ஒழுக்கமுடன் செயல்பட வேண்டும் எனவும், கவனத்தை திசை திருப்பாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனவும், கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். மேலும் 'குட் டச்', 'பேட் டச்' பற்றியும் விளக்கம் அளித்தார். பின்னர் மாணவ- மாணவிகள் போலீஸ் நிலையத்தை ஆர்வத்துடன் சுற்றி பார்வையிட்டனர்.

    இந் நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரம்மாள், மோசஸ், ஆறுமுக நயினார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×