என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தினம்"
- குரும்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகளுக்கு‘குட் டச்’, ‘பேட் டச்’ குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
குரும்பூர்:
குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு தின நிகழ்ச்சி குரும்பூர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. பணிக்கநாடார் குடியிருப்பு ஸ்ரீகணேசர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அவர் மாணவர்களிடம் பேசும் போது "மாணவர்கள் ஒழுக்கமுடன் செயல்பட வேண்டும் எனவும், கவனத்தை திசை திருப்பாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனவும், கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் கீழ்படிந்து நடக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார். மேலும் 'குட் டச்', 'பேட் டச்' பற்றியும் விளக்கம் அளித்தார். பின்னர் மாணவ- மாணவிகள் போலீஸ் நிலையத்தை ஆர்வத்துடன் சுற்றி பார்வையிட்டனர்.
இந் நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரம்மாள், மோசஸ், ஆறுமுக நயினார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்