என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுவன் தற்கொலை"
- மறுநாள் காலை வரை சிறுவன் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
- போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் கண்டல்லூர் பகுதியை சேர்ந்த தம்பதி தங்கச்சன்-சிந்து. இவர்களது மகன் ஆதித்தன் (வயது13), அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று மாலை வீட்டில் இருந்த சிறுவன், டி.வி.யை ஆன் செய்வதற்காக ரிமோட்டை கேட்டார். ஆனால் டி. வி. ரிமோட்டை தாய் கொடுக்கவில்லை.
இதனால் தாயிடம் கோபித்துக்கொணடு சிறுவன் ஆதித்தன் தனது அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டான். இரவு ஆகியும் அறைக்குள் இருந்து வெளியே வரவில்லை. கோபத்தில் அறைக்குள் இருப்பான் என்று கருதி குடும்பத்தினர் யாரும் அவனது அறைக்கு செல்லவில்லை. மறுநாள் காலை வரை சிறுவன் அறையில் இருந்து வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சிறுவன் ஆதித்தன் தூக்கில் பிணமாக தொங்கினான். டி.வி. ரிமோட்டை தாய் தராத கோபத்தில் சிறுவன் தூக்குப்போடடு தற்கொலை செய்துகொண்டான்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெற்றோர் பள்ளிக்கு அல்லது வேலைக்கு செல்ல சிறுவனை கண்டித்துள்ளனர்.
- இதனால் விரக்தி அடைந்த சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் முத்தழகு பட்டி மலையடிவாரம், ஒத்தபனைமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். லோடுமேன். இவரது மகன் பிரவீன் (வயது18). 10-ம் வகுப்பு படித்த நிலையில் வீட்டில் ஊர் சுற்றி வந்துள்ளார்.
பெற்றோர் பள்ளிக்கு அல்லது வேலைக்கு செல்ல கண்டி த்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த பிரவீன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன் கண்டித்துள்ளார்.
- வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்தார்.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள விசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது.47). இவரது மகன் தமிழேந்தி (15) இவன், உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்துள்ளான். இந்த நிலையில், வீட்டில், தமிழேந்தி செல்போன் வைத்துக்கொண்டு விளை யாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த பாஸ்கரன், தமிழே ந்தியை கண்டித்துவிட்டு, வேலையின் காரணமாக மங்கலம்பே ட்டைக்கு புறப்பட்டு சென்று விட்டார், பின்னர், வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, அங்கு, வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி, சேலையால் தூக்கிட்டுத் தொ ங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்ததும், பதறிப்போன பாஸ்கரன், தனது மகனை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் தமிழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, மங்கலம்பேட்டை போலீஸில் பாஸ்கரன் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.
- மனமுடைந்து காணப்பட்ட சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்துள்ள இடைபையூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யபிரகாஷ் (வயது16). இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சூர்யபிரகாஷ் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகரெட் பழக்கம் இருந்ததால் இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
- தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
கோவை:
கோவை சவுரிபாளையம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவரது மகன் தவ்சிக் மவுலிஸ் (13). குட்கா, சிகரெட் பழக்கமுடைய இவர் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சிறுவன் சவுரிபாளையம் அருகே நின்று கொண்டு சிகரெட் பிடித்துள்ளார்.
இதை அந்த வழியாக ஆட்டோவில் வந்த அவரது தந்தை சதீஷ்குமார் பார்த்துள்ளார். மகன் சிகரெட் பிடிப்பதை பார்த்து வேதனையடைந்த அவர் தவ்சிக் மவுலிசை திட்டி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் இரவில் சதீஷ்குமார் வீடு திரும்பினார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
நீண்ட நேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த சதீஷ்குமார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மகன் தவ்சிக் மவுலிஸ் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுத அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சிறுவன் தவ்சிக் மவுலிஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்