search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நட்பு திருவிழா"

    • 30 ஆண்டுக்கு பிறகு சந்திப்பு நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஏலகிரி மலையில் நேற்று ஜோலார்பேட்டையில் ரெயில்வே பள்ளியில் தமிழ் வழியில் 1991 முதல் 1992 வரையில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏலகிரி மலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் நட்பு திருவிழா நடைபெற்றது.

    இதில் நட்பு திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் துரைமுருகன், சிவா, ஜெயச்சந்திரன் அசோக்குமார், சுரேஷ்குமார், வேலூர் காவல் துறை இன்ஸ்பெக்டர் கவிதா, மற்றும், பாடல், நடனம், மற்றும் விருந்துடன் அனைவரும் மகிழ்ந்து வெகு விமரிசையாக கொண்டாடினர்.

    மேலும் முன்னாள் மாணவர்கள் பேசுகையில் நாங்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஏலகிரி மலையில் இதுபோன்ற நட்பு நிகழ்ச்சியில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், பள்ளியில் படித்த நினைவுகளை நினைத்து ஆனந்தக் கண்ணீருடன் கூறினர். மேலும் அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒன்றிணைந்து குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டு கண்ணீர் மல்க பிரிந்து சென்றனர்.

    இவ்விழாவில் அனைத்து முன்னால் மாணவர்களும், அவர்களுடைய குழந்தைகள், பெற்றோர்கள், நண்பர்கள், கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

    ×