search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்ப படிவம்"

    • புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொண்டார்.
    • அ.தி.மு.க. கிளை அமைப்பு ஏற்பாடுகளை ஆனக்குழி எஸ்.சதீஸ் செய்திருந்தார்.

    குளச்சல் :

    கேரள மாநிலம் திருவ னந்தபுரம் மாவட்டம் அருவிக் கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க கிளை அமைப்ப தற்கு அருவிக்கரை பிரமுகர் அஜீஸ் குளச்சல் நகர அ.தி.மு.க அலுவலகத்தில் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், நகராட்சி கவுன்சிலர் ஆறுமு கராஜா ஆகியோரிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் கல்லுக்கூட்டம் பேரூர் செயலர் வக்கீல் அகஸ்டின், மண்டைக்காடு பேரூர் செயலாளர் விஜயகுமார், குளச்சல் நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் வினோத், நகர இளைஞர் பாசறை செயலாளர் மலுக்கு முகமது மற்றும் மரியலூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.திருவனந்தபுரம் அருவிக்கரை பஞ்சாயத்தில் அ.தி.மு.க. கிளை அமைப்பு ஏற்பாடுகளை ஆனக்குழி எஸ்.சதீஸ் செய்திருந்தார்.

    • காவேரி‌பட்டணத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
    • மகளிருக்கான உரிமை தொகை வழங்க தற்போது ரேசன் கடைகளில் விண்ணப்படிவத்தை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பெண்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    காவேரிப்பட்டினம்,

    தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் பேரூராட்சி 2-வது வார்டு கோவிந்தப்ப முதலியார் தெருவில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான மனுக்கள் மற்றும் பதிவு ரசீதுக்கான டோக்கன்களை மகளிர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு கிளைச் செயலாளர் ரவி மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நியாய விலைக்கடையில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்
    • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் அவற்றின் 2 ஜெராக்ஸ் நகல்களில் சுய சான்றிடப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், பெரம்பலூர் மாவடத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு வகையான கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 56 விற்பனையாளர்கள் மற்றும் 2 கட்டுநர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணபங்கள் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டுள்ளது.

    இதில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு இம்மாதம் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையிலும் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 27-ந்தேதி அன்றும் பெரம்பலூர் துறையூர் சலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி (தமிழ் வழிக் கல்வி) வளாகத்தில் நடைபெற உள்ளது.

    மேற்படி, நேர்முகத் தேர்விற்கான அனுமதிச்சீட்டு 3.12.2022 முதல் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தின் வழி (www.drbpblr.net/hallticket.php) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    நேர்முக அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நேர்முகத்தேர்விற்கான அனுமதி சீட்டினை விண்ணப்பதாரர் கொண்டு வந்தால் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும், நேர்முக தேர்விற்கு வரும்பொழுது விண்ணதாரர் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்துள்ள அதே புகைபடத்தின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது மற்றும் அனைத்து மூல சான்றிதழ்களையும் அவற்றின் 2 ஜெராக்ஸ் நகல்களில் சுய சான்றிடப்பட்டு கொண்டு வரப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதி பெற்ற விண்ணபதாரர்கள் மட்டுமே நேர்முக தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும், அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    இதில் ஏதேனும் சந்தேகங்கள் ஏற்படின் பெரம்பலூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய குழுவின் தொலைபேசி எண். 04328-296140 மற்றும் drbpblr2022@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×