என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பறக்கும் ரெயில்"
- வேளச்சேரி-புழுதிவாக்கம்-ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளம் பதிக்கப்பட்டது.
- 2020-ம் ஆண்டு அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு பணிகள் நடைபெறத் தொடங்கியது.
சென்னை:
சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம் கடற்கரையில் இருந்து மயிலாப்பூர் வரை முதல் கட்டமாக இயக்கப்பட்டது. பின்னர் வேளச்சேரி வரை இது நீட்டிக்கப்பட்டது.
இதனால் பறக்கும் ரெயிலில் அதிக பயணிகள் பயணித்து வருகின்றனர். ஆரம்பத்தில் 6 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமானதால் 9 பெட்டிகள் கொண்ட ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை ரெயில் நிலையத்தை இணைக்கும் வகையில் 2007-ம் ஆண்டு 3 கி.மீ தூரத்துக்கு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் வேளச்சேரி-புழுதிவாக்கம்-ஆதம்பாக்கம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு தண்டவாளம் பதிக்கப்பட்டது. ஆனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே 600 மீட்டர் தூரத்துக்கு பணிகள் தொடங்குவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அந்த வழி பாதையில் உள்ள வீடுகளுக்கு இழப்பீடு தொகை வழங்குவது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் கடந்த 11 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் கிடப்பில் இருந்தது.
2020-ம் ஆண்டு அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அங்கு பணிகள் நடைபெறத் தொடங்கியது.
இப்போது ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிந்துவிடும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதுகுறித்து சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் நிலையத்தை நீட்டித்து அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் 3 கி.மீ தூரத்தில் 2.4 கி.மீ தூரம் தூண்கள் அமைத்து பணிகள் முடிந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 600 மீட்டர் தூரம் பணியை முடிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தனர்.
தற்போது அந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது ஓரிரு மாதங்களில் பரங்கிமலை வரையிலான பறக்கும் ரெயில் பணிகள் முடிவடைந்து விடும். அதன் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரெயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்ல தயார் நிலையில் உள்ளது.
- ரெயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
ஆலந்தூர்:
ஆலந்தூர் மண்டலம் சார்பில் ரூ.50 கோடியே 89 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. மண்டல குழு தலைவர் என். சந்திரன் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம் வரை பறக்கும் ரெயில்திட்ட பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்ல தயார் நிலையில் உள்ளது. இன்னும் 3 முதல் 4 மாதத்திற்குள் பரங்கிமலை வரை முழுவதுமாக கட்டி முடிக்கப்படும். வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல அலுவலர் பாஸ்கரன், வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், நடராஜன், ஆலந்தூர் மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதாபிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் நிலையங்கள் விரைவில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
- பயணிகள் வசதிக்காக 'ஏசி' பெட்டிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டு உள்ள பறக்கும் ரெயில் நிலையங்கள் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் உள்ளன. பல ரெயில் நிலையங்களில் "லிப்ட்" 'எஸ்கலேட்டர்கள்' பழுதடைந்து இயங்காமல் உள்ளன.
ரெயில் நிலையங்களில் உள்ள கழிவறைகள் சீரமைக்கப்படாமல் மூடப்பட்டு உள்ளன. பல இடங்களில் இரவினில் மின்விளக்குகள் எரியாமல் இருட்டாக உள்ளது. இதனால் பயணிகள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே உடனடியாக பறக்கும் ரெயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் பறக்கும் ரெயில் நிலையங்களை மேம்பாடு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா) இந்த பணிகளை விரைவில் செய்ய உள்ளன.
இதில் புதிய என்ஜின், 'ஏசி கோச்' பெட்டிகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் போன்ற பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட உள்ளன.
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
'பறக்கும் ரெயில்கள் தெற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்பட்டு வருகிறது. பறக்கும் ரெயில் நிலைய கட்டிடங்கள் மிகவும் பழமையாக உள்ளன. பயணிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
எனவே பறக்கும் ரெயில் நிலையங்களை மேம்படுத்த ஆலோசிக்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பறக்கும் ரெயில்களை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் புதிய என்ஜின், கூடுதலாக 'ஏசி கோச்' பெட்டிகள் பயணிகள் வசதிக்காக விரைவில் அமைக்கப்பட உள்ளது.
மேலும் வணிக வளாகங்கள், உணவகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. பறக்கும் ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதன் மூலம் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்