search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி"

    • கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரை உலகில் பாலியல் பலாத்கார அத்து மீறல்கள் அதிகளவு நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

    இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை நடத்த கேரள அரசு உத்தர விட்டது. அதன்படி நீதிபதி ஹேமா மலையாள திரையுலகில் நடக்கும் அத்துமீறல்களை ஆய்வு செய்து கண்டுபிடித்து பெரிய அறிக்கையாக தயாரித்தார். கடந்த 2019-ம் ஆண்டு அந்த அறிக்கையை அவர் தாக்கல் செய்தார்.

    கடந்த சில ஆண்டுகளாக அந்த அறிக்கை வெளி யிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் அந்த அறிக்கையின் ஒரு பகுதி மட்டும் வெளி யானது. அதில் வெளியான தகவல்கள் மலையாள பட உலகை சுனாமியாக சுருட்டி வீசும் வகையில் புயலை கிளப்பி உள்ளது.

    நீதிபதி ஹேமா ஆணைய அறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் மினு குரியன், ஸ்ரீலேகா மித்ரா உள்பட பல நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறினார்கள். நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, இடைவேள பாபு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் உள்பட பலர் மீது பாலியல் பலாத்கார புகார்கள் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் மீது மட்டும் 376, 354, 509 ஆகிய சட்டப்பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன.

    நடிகர் முகேஷ் மீது பதிவாகி இருக்கும் 376-வது பிரிவு கற்பழிப்புக்கான தண்டனை பெற்று தரும் சட்டப்பிரிவாகும். இந்த பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமீனில் வெளியில் வர இயலாது. இதை அறிந்த நடிகர் முகேஷ் அவசரம் அவசரமாக எர்ணாகுளம் செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    அதன் பேரில் செப்டம்பர் 3-ந்தேதி வரை அவரை கைது செய்யக்கூடாது என்று எர்ணாகுளம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் நடிகர் முகேஷ் சற்று நிம்மதி பெருமூச்சுடன் இருக்கிறார்.

    என்றாலும் நடிகர் முகேஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரளாவில் எதிர்ப்பு வலுக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட மகளிர் அமைப்புகள் முகேசை கைது செய்யக்கோரி தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களும் நடிகர் முகேசை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளனர்.

    நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ், பா.ஜ.க. போர்க்கொடி தூக்கி உள்ளது.

    இதற்கிடையே கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நடிகர் முகேசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்திய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனிராஜா கூறுகையில், "நடிகர் முகேஷ் எம்.எல்.ஏ. பதவியில் நீடிக்க தார்மீக தகுதியை இழந்துவிட்டார். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் மாநில அரசின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும்" என்று கூறியுள்ளார்.

    தோழமை கட்சிகள் முகேசை எதிர்ப்பதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது. என்றாலும் நடிகர் முகேசை ராஜினாமா செய்ய வைத்தால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்று பயப்படுகிறார்கள்.

    எனவே கேரள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் பதிலடி நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளனர்.

    கேரள கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டணி அமைப்பாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்தியில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்குகள் உள்ளது. அவர்கள் இதுவரை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தால் முகேசிடமும் அந்த கோரிக்கையை வைக்கலாம்" என்று கூறியுள்ளார்.

    இந்தநிலையில் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்கள் அனைவரும் நடிகர் முகேசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நடிகர் முகேஷ் விலக மாட்டார் என்றும் அறிவித்துள்ளனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மலையாள நடிகைகள் பாலியல் பலாத்கார புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை கேரள அரசு அமைத்துள்ளது. அவர்கள் நடிகைகளை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். இதைத்தொடர்ந்து ஆதாரங்களை திரட்டத் தொடங்கி உள்ளனர்.

    நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் திருவனந்தபுரத்தில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை சந்தித்து விளக்கங்களை கொடுத்தனர். நடிகர் சித்திக்குக்கு எதிராக நடிகை தெரிவித்த பாலியல் பலாத்கார புகார் வாக்குமூலத்தை பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.

    இதன் காரணமாக பாலியல் பலாத்கார விவகாரத்தில் நடிகர்கள் மீது கைது நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


    நடிகர் முகேஷ் போல நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக் ஆகியோர் மீதும் வழக்குகள் பாய்ந்துள்ளன. நடிகர் ஜெயசூர்யா மீது 376, 509 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நடிகர் ஜெயசூர்யா மீது இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இதனால் நடிகர்கள் மீதான போலீஸ் விசாரணை தீவிரமாக தொடங்கி இருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நடிகர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கேரளாவில் புகழ் பெற்ற எழுத்தாளர் பத்மநாபன் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீதிபதி ஹேமா ஆணையம் கொடுத்த அறிக்கையின் அனைத்து பகுதிகளும் வெளியிடப்படவில்லை. இதனால் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.

    கேரளாவில் நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்த சின்ன மீன்கள் தான் சிக்கி உள்ளன. பெரிய திமிங்கலங்கள் தப்பி உள்ளன. அறிக்கையின் முழு விவரம் வெளியானால் பல கசப்பான கதைகள் வெளிச்சத்துக்கு வரும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மானந்தவாடி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வான கேலுவுக்கு மந்திரி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
    • பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை பெற்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. ஆலத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மாநிலத்தின் தேவஸ்தானம் மற்றும் ஆதிவாசி பழங்குடி நலத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

    இதன்மூலம் ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆனார். இதையடுத்து அவர் தனது மந்திரி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ஆகவே ராதாகிருஷ்ணன் பொறுப்பு வகித்த தேவஸ்தானம் மற்றும் ஆதிவாசி பழங்குடி நலத்துறைக்கு புதிய மந்திரியை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதுதொடர்பாக ஆலோசிப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அதில் மானந்தவாடி சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.வான கேலுவுக்கு மந்திரி பதவி வழங்க தீர்மானிக்கப்பட்டது.

    பழங்குடியின வகுப்பை சேர்ந்த அவருக்கு ஆதிவாதி பழங்குடி நலத்துறை மட்டும் வழங்கப்பட உள்ளது. தேவஸ்தான துறை மந்திரி வாசனுக்கும், பார்லிமென்ட் விவகாரத்துறை மந்திரி ராஜேசுக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது.

    புதிய மந்திரியாக பொறுப்பேற்க உள்ள கேலு மானந்தவாடி தொகுதியில் தொடர்ச்சியாக 2 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் ஆவார். வயநாடு மாவட்டத்தை சேர்ந்த இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினராக இருக்கிறார். மேலும் கேரள சட்டசபையில் ஆதிவாசி-பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய தலைவராகவும் பணியாற்றுகிறார்.

    கட்சியில் சேர்ந்து பொது வாழ்க்கைக்கு வருவதற்கு முன்னதாக கேலு தினக் கூலியாக வேலை பார்த்தவர். அவர் எஸ்டேட் மற்றும் விசைத்தறிகளில் தொழிலாளியாக பணியாற்றியிருக்கிறார். மேலும் விவசாயமும் செய்தார். தொழிலாளியாக கடினமாக உழைத்து வந்தபோது தான், அரசியலுக்கு வந்தார்.

    கேலு 2000-ம் ஆண்டில் திருநெல்லி கிராம பஞ்சாயத்து உறுப்பினராக பதவியேற்றார். அதன்பிறகே அவரது பொதுவாழ்வு பயணம் தொடங்கியது. பின்பு பல ஆண்டுகள் திருநெல்லி கிராம பஞ்சாயத்து தலைவராகவும், மானந்தவாடி தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் 2016-ம் ஆண்டில் மானந்தவாடி தொகுதி எம்.எல்.ஏ. ஆகி முதன்முதலாக சட்டசபைக்கு சென்றார்.

    தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி மக்களிடம் நல்ல பெயரை பெற்றார். இதன் காரணமாக 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றிபெற்று 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகும் மக்கள் பணியாற்றி தொகுதியில் சிறந்த பெயரை பெற்றிருக்கிறார்.

    எம்.எல்.ஏ.வாக இருந்த போதிலும் விவசாயத்திலும் அவர் ஈடுபட்டு வந்தார். நெல், வாழை, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை அவர் பயிரிடுகிறார். தினக்கூலி தொழிலாளியாக வேலைபார்த்த கேலு, பஞ்சாயத்து உறுப்பினர், தலைவர், எம்.எல்.ஏ. என படிப்படியாக உயர்ந்து தற்போது மந்திரியாக பொறுப்பேற்க உள்ளார்.

    இதன்மூலம் வயநாடு மாவட்டத்தின் முதலாவது மந்திரி என்ற பெருமையையும் அவர் பெறுகிறார். மந்திரியாக பொறுப்பேற்கும் கேலுவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் சில விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
    • தமிழ் மாநிலக் குழுவின் ‘எக்ஸ்’ தள கணக்கு நேற்று முடக்கப்பட்டது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் 'எக்ஸ்' தள கணக்கு நேற்று முடக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 'எக்ஸ்' தள பக்கத்தை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள் அதில் சில விளம்பரங்களை வெளி யிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு 'எக்ஸ்' தள பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்படும் செய்திகள் ஏதும் கட்சி சார்ந்தது அல்ல. 'எக்ஸ்' தளத்தை தொடர்புகொண்டுள்ளோம். இந்த பக்கம் விரைவில் மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்
    • உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள்

    திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து நிலக்கோட்டை பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்பகுதியில் உள்ள பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை.

    படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பாஜகவின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

    உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையும் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை" என்று அவர் தெரிவித்தார். 

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தேரடி திடலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை தாங்கினார். இதில் தென்காசி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கி துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்க வளவன், பார்வர்டு பிளாக் தென்காசி மாவட்ட செயலாளர் தங்கப்பாண்டியன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பொன் ஆனந்தராஜ், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் அப்பாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் திவான் மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.கவை சேர்ந்த அப்பாஸ், அப்துல் ரகுமான், ம.தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஹக்கீம், சங்கரன்கோவில் நகர செயலாளர் ரத்னவேல் குமார், ஒன்றிய செயலாளர் சசி முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பாலுச்சாமி, செல்வின், செந்தில்வேல், வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன், புளியங்குடி நகர செயலாளர் மாரியப்பன், திருவேங்கடம் தாலுகா செயலாளர் கருப்பசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் மனுவேல்ராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர் மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
    • கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்ற காரணங்களுக்காக மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக கட்சியின் மாநில குழு உறுப்பினர் ராதிகா தலைமையில் நிர்வாகிகள் சுப்பிரமணி, ஆர்.கோமதி, பழனிசாமி, சுந்தர்ராஜன், பொன் பாரதி உள்பட பலர் காளை மாட்டு சிலை பகுதியில் இன்று காலை திரண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    மறியல் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.

    அப்போது அங்கிருந்து ஒரு சிலர் வேகமாக ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஓடினர். அவர்களை ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்ற 250-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    இதேபோல் கோபி செட்டிபாளையம் பஸ் நிலையம், அந்தியூர் ரவுண்டானா, கடம்பூர் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து நடந்தது
    • அதிகாரிகள் பேச்சு வார்த்தை

    வந்தவாசி:

    வந்தவாசியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரக் குழு உறுப்பினர் சேட்டு தலைமை தாங்கினார். கிளை உறுப்பினர்கள் சண்முகம் முனியன் ஏழுமலை ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் வி.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.முரளி, வட்டார செயலாளர் அப்துல் காதர் ஆகியோர் பேசினர்.

    இதில் கலந்து கொண்டவர்கள் கீழ் கொடுங்கலூர் கிராம கூட்டுச்சாலையில் சரியான முறையில் ஆக்கிரமிப்பு அகற்றாததை கண்டித்தும் மழைநீர் வடிகால் கால்வாயை சரியான முறையில் அமைக்கவில்லை என்று கூறியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப் பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் சுகுமார், ராதாகிருஷ்ணன், தீபநாதன், தேவி, ஏழுமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    • ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளைத்தில் 2018-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம், ெரயில்வே மேம்பால பணி ஆகியவை ெதாடங்கப்பட்டது. 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும் இந்த பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

    இந்த பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், இந்த பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை சரி செய்ய கோரியும், 3 மடங்கு உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், சொத்து வரி விகிதத்தை குறைக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் பிப்ரவரி 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சோழராஜா பட்டியில் நடந்த போராட்டத்திற்கு செல்வராஜ், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆவரம்பட்டி காளியம்மன் கோவில் அருகே நடந்த போராட்டத்திற்கு சரவணன், வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சம்பந்தபுரம் போஸ் பார்க் ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்த போராட்டத்திற்கு முருகானந்தம், பால மஸ்தான் தலைமை தாங்கினர். வடக்கு மலையடிப்பட்டி 4 முக்கில் நடந்த போராட்டத்திற்கு செல்வம், சன்னாசி தலைமை தாங்கினர். தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு அய்யனார், குருசாமி தலைமை தாங்கினர்.

    எம்.ஜி.ஆர். நகரில் நடந்த போராட்டத்திற்கு செந்தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். தெற்கு அழகை நகரில் நடந்த போராட்டத்திற்கு சந்திரன் தலைமை தாங்கினார். ஆர். ஆர்.நகரில் நடந்த போராட்டத்திற்கு பொன்னுசாமி, கார்த்திகா தலைமை தாங்கினர்.

    முனியம்மன் பொட்டலில் நடந்த போராட்டத்திற்கு மாரிமுத்து, பழனிச்சாமி தலைமை தாங்கினர். பட்டுக்கோட்டை மன்றம் அருகே நடந்த போராட்டத்திற்கு ஜானகி தலைமை தாங்கினார். மதுரை கடை தெருவில் நடந்த போராட்டத்திற்கு ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சின்ன சுரக்காய் பட்டியில் நடந்த போராட்டத்திற்கு ஜெகன், மைதிலி தலைமை தாங்கினர்.

    மாவட்ட செயலாளர் அர்ஜூனன், மாநில குழு உறுப்பினர் மகா லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினர் ராமர், நகர செயலாளர் மாரியப்பன், மூத்தநிர்வாகி கணேசன், நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், பிரசாந்த் ஆகியோர் பேசினர்.

    • சிவகிரி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள விவசாயிகள் சிவகிரி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு தங்களது தோட்டத்தில் உள்ள கரும்புகளை வெட்டி அனுப்பி வைத்தனர். நிர்வாகத்தினர் அதற்குரிய பணத்தை வழங்காமல் வெகு நாட்களாக காலம் தாழ்த்தியும், ஆலையை நடத்தாமல் மூடியதாலும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை தராத நிலையில் நீண்ட காலமாக இருப்பதால் விவசாயிகள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர்.

    ஆகவே அரசு உடனே தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சிவகிரி அருகே உள்ள ஆலையையும், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆலையையும் உடனே திறப்பதற்கும், விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்குவதற்கும் அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தி சிவகிரி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பஸ் நிலையம் அருகே காந்திஜி கலையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேலு, சிவகிரி நகர கிளைச்செயலாளர் ரவிந்திரநாத் பாரதி, வாசுதேவநல்லூர் சுப்பையா, மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர், கோவை மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

    அன்னூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் தாலுகாக்களில் உள்ள 6 ஊராட்சிகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் சார்பில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது.

    தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம், கடையடைப்பு, உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், தொழிற் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அன்னூர் கைகாட்டி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய குழு உறுப்பினர், கோவை மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க வெளியிட்ட அரசாணையை திரும்ப பெற வேண்டும்.

    பறிக்காதே, பறிக்காதே பெருமுதலாளிகளின் நலன் காக்க விவசாய நிலங்களை பறிக்காதே என்றும், திரும்ப பெறு திரும்ப பெறு நிலம் கையகப்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை திரும்ப பெறு என்பது உள்பட பல்வேறு கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நமது நிலம் நமதே அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×