search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் மோதி 3 பேர் படுகாயம்"

    • பஸ் சாலையோர ஓட்டலுக்கு திரும்ப முற்பட்டபோது கார்மீது பயங்கரமாக மோதியது.
    • இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    வேடசந்தூர்:

    கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த மதுசூதனரெட்டி(33), மதுசூதனராவ்(45), ரவி(37) ஆகியோர் காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே மதுரையில் இருந்து சேலம் நோக்கி அரசு பஸ் வந்தது.

    அந்த பஸ் சாலையோர ஓட்டலுக்கு திரும்ப முற்பட்டபோது கார்மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.

    இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து கூம்பூர் போலீசார் அரசு பஸ் டிரைவர் கணேசனிடம் விசாரித்து வருகின்றனர்.

    ×