என் மலர்
நீங்கள் தேடியது "புத்தாண்டு"
- காலையில் வரும் அவர்கள் மாலை வரை நகர் பகுதியிலேயே சுற்றி வருவதால், ஓட்டல் உள்ளிட்ட பிற நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- மீனாட்சிபுரம், அண்ணா பஸ்நிலையம், செம்மாங்குடி ரோடு, வடசேரி பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல பகுதி களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது
நாகர்கோவில், டிச. 24-
உலகம் முழுவதும் நாளை (25-ந் தேதி) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடந்த ஒரு வார காலமாகவே கிறிஸ்தவ மக்கள் பண்டிகையை வரவேற்கும் விதமாக வீடுகளில் வண்ண வண்ண ஸ்டார்களை பறக்க விட்டும், மின் அலங்காரம் செய்தும் அனைவரையும் கவர்ந்து உள்ளனர்.
நாகர்கோவில் கடை வீதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஜவுளி ரகங்களை தேர்வு செய்யவும், ஸ்டார்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நாகர்கோவிலுக்கு தினமும் மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் மக்கள் கூட்டம் அலை மோதியது.
காலையில் வரும் அவர்கள் மாலை வரை நகர் பகுதியிலேயே சுற்றி வருவதால், ஓட்டல் உள்ளிட்ட பிற நிறுவனங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நாளை பண்டிகை என்பதால், இன்று கடை வீதிகளில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்தது.
குறிப்பாக மீனாட்சிபுரம், அண்ணா பஸ்நிலையம், செம்மாங்குடி ரோடு, வடசேரி பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி உள்பட பல பகுதி களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.ஆயத்த ஆடை கடைகள், சாலையோர வியாபாரிகள் போன்றோரை மக்கள் முற்றுகையிட்டு உடைகளை வாங்கினர். இதன் காரணமாக பல பகுதிகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கேக் கடைகளிலும் இன்று மக்கள் அதிக அளவில் திரண்டனர். அவர்கள் ஆர்வத்துடன் பல வகை கேக்குகளை வாங்குவதில் போட்டி போட்டனர். அதற்கேற்றார் போல் அனைத்து கேக் கடைகளிலும் புதிய ரகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.
வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பண்டிைகயை கொண்டாட குமரி மாவட்டம் வந்தவர்கள் மற்றும் பொருட்கள் வாங்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நாகர் கோவிலுக்கு ஏராளமா னோர் வந்ததால், பஸ் மற்றும் ரெயில் நிலையங்க ளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதையொட்டி பொது மக்களின் பாதுகாப்புக்காக போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பஸ் நிலையம் மற்றும் மக்கள் கூடும் சாலைகளில் மப்டி உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
- புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவு 1 மணிக்குள் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டம் காணவைத்தது. தற்போது இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், சீனாவில் புதிதாக மீண்டும் பரவும் கொரோனா (பி.எப்.7) கதிகலங்க வைத்துள்ளது.
இந்த தொற்று இந்தியாவிலும் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநில அரசு கொரோனா பரவலைத் தடுக்க புதிய நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் அனைத்தும் நள்ளிரவு 1 மணிக்குள் நிறைவடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
- இந்த ஆண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும்.
- உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
சென்னை :
சென்னையில் ஓட்டல்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், வரும் 29-ந்தேதி அன்று அதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:-
சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றவாளிகள் 75 சதவீதம் பேர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். நைஜீரியா போன்ற வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இதுதொடர்பான குற்றங்களில் கைதாகி உள்ளனர். சைபர் குற்றங்கள் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சைபர் குற்றங்களை விசாரிக்க சென்னையில் ஒரு போலீஸ் நிலையம்தான் இருந்தது. தற்போது 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது வாகன சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பது தற்போது தினமும் நடந்து வருகிறது. புத்தாண்டு தினம் வரை இந்த நடவடிக்கை தொடரும். புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களை ஜாலியாக கொண்டாடலாம். ஆனால் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் அந்த கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்டு போன்றவைகளுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நட்சத்திர ஓட்டல்கள் போன்றவற்றில் எந்த அளவுக்கு ஆட்களை அனுமதிக்க முடியுமோ, அந்த அளவுக்குதான் டிக்கெட்டுகள் வழங்க வேண்டும். அளவுக்கு அதிகமாக டிக்கெட்டுகள் வழங்கக்கூடாது. இதனால் தேவை இல்லாத பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. உரிய விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, என்பது பற்றி உரிய விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினருடன் வரும் 29-ந்தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும் நேரம் குறித்தும் முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி ஆய்வு செய்தார்.
- ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி அதிபர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்துவது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் பெட்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
ஏற்காடு:
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், சொகுசு ஓட்டல்கள் மற்றும் ரிசார்ட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சேலம் ரூரல் டி.எஸ்.பி தையல்நாயகி ஆய்வு செய்தார்.
அப்போது, ஹோட்டல் உரிமையாளர்கள், தங்கும் விடுதி அதிபர்கள், மேலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்துவது குறித்து தெரிந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க புகார் பெட்டி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது:-
மது அருந்திவிட்டு வரும் சுற்றுலா பயணிகளை விடுதிகளில் தங்க வைக்கக் கூடாது. கொண்டாட்டங்களில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். விடுதி நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அநாகரிகமாக நடந்து கொள்ளாதவாறு விடுதி நிர்வாகம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கண்டிப்பாக 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
நீச்சல் குளம் அமைந்திருக்கும் விடுதிகளில் நீச்சல் குளத்தினை மூடி வைத்திருக்க வேண்டும். இரவு 1 1/2 மணி நேரம் மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற வேண்டும். அந்த நேரத்தில் பட்டாசு வெடிப்பதோ, அதிக சத்தத்துடன் டி.ஜே மியூசிக் வைப்பதோ, இருசக்கர வாகனத்தில் வேகமாக ஓட்டி செல்வதோ இருக்கக் கூடாது. இது போன்ற அறிவுறுத்தல்களை விடுதி நிர்வாகம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
- வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தெரிவித்தது.
சென்னை:
புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.
31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.
முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.
மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.
வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.
கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
- அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள்.
நாமக்கல்:
2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை அசம்பாவிதங்கள் இல்லாமல் கொண்டாட தமிழக அரசும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள். 20 இடங்களில் வாகன சோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.
31-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகன ஓட்டுபவர்கள் கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து 100-க்கும், போலீஸ் செயலிக்கும் தகவல் தெரிவிக்கலாம். வழிபாட்டு தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவ–தாக நாமக்கல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
- பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
- ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும்
நாகர்கோவில்:
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2 ஆண்டு களாக புத்தாண்டு கொண்டாட் டங்கள் எளிய முறை யில் நடந்தது. இந்த ஆண்டு புத் தாண்டு கொண்டாட் டத்தை வெகு விமர்சை யாக கொண்டாட பொது மக்கள் தயாராகி வரு கிறார்கள். குமரி மாவட் டத்தில் புத்தாண்டு கொண் டாட்டத்தையடுத்து கோவில் களில் சிறப்பு பூஜை கள் நடந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடக்கிறது. நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடைபெறும் நள்ளிரவு பிரார்த்தனையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்து செய்தி வழங்கு கிறார்.
இதே போல் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலிநடக்கிறது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆல யங்களிலும் புத்தாண்டு யொட்டி சிறப்பு பிரார்த்த னைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத் தில் ஜொலிக்கிறது.
கன்னியாகுமரியில் ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட் டங்களில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 1500 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியா குமரி யில் புத்தாண்டையொட்டி கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரை பகுதி களில் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஷிப்டுகளாக மாவட்ட முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி வருவ தற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளப்பட உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவர் கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு கொண்டாடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
- மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பரமத்தி வேலூர், பரமத்தி, நல்லூர், வேலகவுண்டன்பட்டி, ஜேடர்பாளையம் ஆகிய காவல் நிலைய கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நாளை இரவு 1 மணிக்கு மேல் பொதுமக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.
இரு சக்கர வாகனத்தில் தேவையில்லாமல் இளைஞர்கள் சுற்றுதல் கூடாது. மேலும் மது அருந்திவிட்டு மது போதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீதும், பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிகவேகமாக பைக் ரேஸ் ஓட்டுபவர்களின் மீதும் சட்ட நடவடிக்கை எடுத்து வாகனத்தை பறிமுதல் செய்யப்படும்.
மேலும் பொது இடங்க ளிலும், சாலைகளிலும் கூட்டம் சேர்த்துக் கொண்டு கேக் வெட்டுதல், பட்டாசு வெடித்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீதும், புத்தாண்டு கொண்டாட்டம் சம்பந்தமாக விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் புத்தாண்டிற்கு தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொது மக்கள், தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லுமாறும் பரமத்தி
வேலூர் டி.எஸ்பி கலை யரசன் தெரிவித்துள்ளார்.
- புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மதுரை மாநகரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
- இந்த தகவலை போலீஸ் கமிஷனர் அறிவித்துள்ளார்.
மதுரை
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை (31-ம் தேதி) இரவு பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாக, அமைதியாக கொண்டாடும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி நாளை இரவு பொது இடம், சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவது சிறந்தது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதுரை நகரில் சுமார் 1300 போலீசார் மற்றும் 100 ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மதுரை மாநகர் முழுவதும் வாகன சோதனைகள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி மோட்டார் வாகனங்களில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அதிவேகமாக, கவனக் குறைவுடன் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுபானம் அருந்தி விட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலை யத்தில் தகவல் தெரிவித் தால், அந்த பகுதியில் போலீ சாரின் ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் பூட்டிய வீடுகளில் திருட்டு சம்பவம் தவிர்க்கப்படும். கேளிக்கை விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரும் போலீசாரின் நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 2 மற்றும் 4 சக்கர ரோந்து வாகனங்கள் மூலம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் கண்காணிக்கப்படுவர். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பற்றி, போலீசாரின் கட்டணமில்லா தொலைபேசி எண்; 100-க்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருவோர் பற்றிய விவரம் ரகசியமாக வைக்கப்படும். அவசர உதவி தேவைப்படுபவர்கள் "காவல் உதவி" என்ற அதிகாரப்பூர்வ செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்"
மேற்கண்ட தகவலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ஆட்டம், பாட்டத்துடன் களைகட்ட உள்ளது
- புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்கள், விடுதிகள் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது, பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது.
இந்த காலநிலையை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளதால் வருகை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் புத்தாண்டு மிகவும் உற்சாகமான நிகழ்வுகள், மறக்கமுடியாத இரவுகள் இனிப்பான செயல்பாடுகளுடன் கொண்டாடப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டும் 2023 புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரியில் தற்போது கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளது. புத்தாண்டை கொண்டுவதற்காகவே தமிழகத்தின் பிற மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருவார்கள். இதனால் ஊட்டியில் உள்ள விடுதிகள், லாட்ஜூகள், ஓட்டல்கள் முழுவதும் நிரம்பி வழிகிறது.
புத்தாண்டு தினத்தின் முந்தைய தினமான நாளை இரவு ஊட்டியில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பட்டாசு என, புத்தாண்டை அமர்க்களமாக வரவேற்க சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பொதுமக்களும் தயாராகி வருகிறார்கள். புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஓட்டல்கள், விடுதிகள் முழுவதும் அலங்கார தோரணங்கள், வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரவில் ஊட்டி நகரமே வண்ண விளக்குகளாலும், அலங்காரத்தினாலும் ஜொலிக்கிறது. இதுதவிர வித, விதமான உணவு வகைகளும் சுற்றுலா பயணிகளுக்கு தயாராகி வருகிறது.
இதுதவிர ஊட்டியில் உள்ள மாரியம்மன், காந்தல் காசிவிஸ்வநாதர், எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், குழந்தை ஏசு, புனித மரியன்னை, சி.எஸ்.ஐ., தூய யோவான், மைக்கா மவுண்ட்உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகிறது. இதில் திரளான மக்கள் பங்கேற்க உள்ளனர்.
இதேபோல் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம், குன்னூர், கோத்திகிரியில் உள்ள பூங்காக்கள், முதுமலை புலிகள் காப்பகம் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து புத்தாண்டை கொண்டாட உள்ளனர்.
புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்கள், முக்கிய சாலைகள் என பல்வேறு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கோவை மாவட்டத்திலும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனர். கோவையில் அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் ஏராளமான நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன.
இந்த ஓட்டல்களில் எல்லாம் புத்தாண்டையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தற்போதே தீவிரமாக நடந்து வருகிறது.
ஓட்டல்கள் முழுவதும் வண்ண விளக்குகளாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அந்தபகுதியே வண்ணமயமாக ஜொலிக்கிறது. புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு பல்வேறு விதமான ஆட்டம், பாட்டத்துடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைகட்டி, ஆனைமலை போன்ற இடங்களில் உள்ள ரிசார்ட்டுகளிலும் புத்தாண்டு கொண்டாடத்திற்கு தயராகி வருகிறார்கள். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர அவினாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மக்கள் அதிகளவில் கூடி புத்தாண்டை கொண்டாடுவார்கள்.
அப்போது சாலையில் இளைஞர்கள் கார், மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து சென்றும், கேக் வெட்டியும் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இதுதவிர கோவில்களில் சிறப்பு பூஜையும், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடக்கிறது.
புத்தாண்டை மக்கள் பாதுகாப்புடன் கொண்டாட போலீசாரும் அறிவுறுத்தி உள்ளனர். புத்தாண்டையொட்டி கோவை மாவட்டத்தில் மாநகரில 1500 போலீசாரும் 1500 போலீசாரும் என மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது.
- அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையும் மாலை 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
கன்னியாகுமரி:
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் கட்டப்பட்டு உள் ளது.
இந்த கோவிலில் நாளை புத்தாண்டு தரிச னத்துக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழ மை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ரபாதம் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து 4.30 மணிக்கு நிவேத்திய பூஜை நடக்கிறது. பின்னர் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதைத்தொடர்ந்து 8 மணி முதல் 9 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடக்கிறது. அதன்பிறகு 9 மணி முதல் பகல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை சர்வ தரிசனத்துக்காக நடை திறந்து வைக்கப்படுகிறது.
அதன் பிறகு 5 மணி முதல் 5.30 மணி வரை தோமாலை சேவை, நிவேத்திய பூஜை, அர்ச்சனை போன்றவை நடக்கிறது. பின்னர் 5.30 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். 8.45 மணி முதல் 9 மணி வரை வெங்கடேஸ்வர பெருமாள் பள்ளியறை எழுந்தருளும் ஏகாந்த சேவை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர்ரெட்டி தெரிவித்து உள்ளார்.
- பைக் ரேசில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனைவரும் தயா ராகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு கிறிஸ்தவ ஆலயங் களில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யில் புத்தாண்டு கொண் டாட்டங்கள் ஓட்டல்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாகர்கோவிலில் உள்ள ஓட்டல்களிலும் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலை மையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள லெமூர்பீச், சங்குதுறை , கன்னியாகுமரி பீச், முட்டம் பீச், சொத்த விளை பீச், மேலும் பீச்சில் உள்ள பூங்காக்கள், முட்டம் மற்றும் தேங்காப்பட்டணம் துறைமுகங்கள் உட்பட கடற்கரை பகுதிகளில் பொது மக்கள் கடல்நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட அனுமதி இல்லை.
இன்று இரவு பொது மக்களுக்கோ போக்கு வரத்துகோ இடையுறு ஏற்ப டும் படி சாலைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாடத்தின்போது இளைஞர்களால் தேவை யற்ற பிரச்சினைகள் ஏற்ப டாத வண்ணம் இளை ஞர்களின் பெற்றோர் உறுதி செய்யவேண்டும். புத்தாண்டு இரவில் இரு சக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து 'பைக் ரேஸ்" செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களை கைது செய்து, பைக்கு களையும் பறிமுதல் செய் யப்படும். மேலும் அவர்களது ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும்.
அதே போன்று சாலையில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் 'வீலிங்' செய்வது, அஜாக்கிரதையாகவும், அதி வேகமாகவும் செல்வதும், பொது இடங்களில் நின்று மது அருந்தி விட்டு பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும்.
புத்தாண்டு தினத்தன்று வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டின் தகவல் களை அருகிலுள்ள ேபாலீஸ் நிலையங்களில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் மூலம் நடவ டிக்கை எடுக்கப்படும். இதுதவிர அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100, மற்றும் காவல் உதவி செயலி ஆகியவற்றை தொடர்பு கொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் அனை வரும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கி மற்ற வர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மகிழ்ச்சி யான முறையில் புத்தாண்டி னை கொண்டாடவும், பொது மக்கள் அனை வருக்கும் மாவட்ட போலீஸ் துறை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவர் அவர் கூறினார்.